வந்தார்; கையெழுத்து போட்டார்; பேரவைக்குள் புகாமல் வெளியே சென்றார்: அவர்தான் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்!

சென்னை: சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் இன்று திடீரென சட்டப் பேரவை வளாகத்துக்குள் வந்தார். முற்பகல் 11.25க்கு தலைமைச் செயலகத்தில் அவர் 10-ஆம் எண் கேட் வழியாக சட்டசபை லாபியில் இருந்த வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டார். பிறகு சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்காமல் வெளியில் வந்து காரில் ஏறி விருட்டென்று சென்று விட்டார். இதனிடையே 4-ஆம் எண் கேட் அருகே தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் பக்கம்கூட எட்டிப் பார்க்காமல் கட்சித் தலைவர் விஜயகாந்த் சென்றுவிட்டதால், அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சியுடன் காணப்பட்டனர். கட்சி எம்.எல்.ஏ.க்களைக் கூடப் பார்க்காமல் விஜயகாந்த் சென்று விட்டாரே என்று ஆதங்கப்பட்டனர். இந்நிலையில் சுமார் 15 நிமிடங்கள் கழித்து மீண்டும் தலைமைச் செயலகத்துக்கு வந்தார் விஜயகாந்த். என்ன தோன்றியதோ… தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் அருகில் காரில் வந்து இறங்கினார். அவர்களிடம், ஏன் இன்னும் இங்கேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்…. எழுந்து வாருங்கள். நாம் போகலாம்’ என்று கட்டளையிட்டார். அதைத் தொடர்ந்து தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் தங்களது தர்ணா போராட்டத்தைக் கைவிட்டு எழுந்து சென்றனர். பின்னர் அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசினார் விஜயகாந்த்… அப்போது, அவைத்தலைவர் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களை அசிங்கப்படுத்துவதாக நினைத்து தே.மு.தி.க.வுக்காக வாக்களித்த மக்களை அசிங்கப்படுத்துகிறார். அ.தி.மு.க. அரசு, தேர்ந்து எடுக்கப்பட்ட எங்கள் எம்.எல்.ஏ.க்களை திட்டமிட்டு அசிங்கப்படுத்துகிறது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இப்படியெல்லாம் நடைபெறுவதில்லை. தமிழ்நாட்டில் ஜெயலலிதா வழிகாட்டுதல்படி பட்ஜெட்டை தாக்கல் செய்வதாக சட்டசபையிலேயே முதலமைச்சர் சொல்கிறார். இது கண்டிக்கத் தக்கது…. என்று காட்டமாகக் கூறிச் சென்றார். இதையடுத்து தே.மு.தி.க. எம்.ல்.ஏ.க்கள் தங்களது தர்ணா போராட்டத்தை விலக்கிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories