வந்தார்; கையெழுத்து போட்டார்; பேரவைக்குள் புகாமல் வெளியே சென்றார்: அவர்தான் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்!

Published:

சென்னை: சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் இன்று திடீரென சட்டப் பேரவை வளாகத்துக்குள் வந்தார். முற்பகல் 11.25க்கு தலைமைச் செயலகத்தில் அவர் 10-ஆம் எண் கேட் வழியாக சட்டசபை லாபியில் இருந்த வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டார். பிறகு சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்காமல் வெளியில் வந்து காரில் ஏறி விருட்டென்று சென்று விட்டார். இதனிடையே 4-ஆம் எண் கேட் அருகே தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் பக்கம்கூட எட்டிப் பார்க்காமல் கட்சித் தலைவர் விஜயகாந்த் சென்றுவிட்டதால், அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சியுடன் காணப்பட்டனர். கட்சி எம்.எல்.ஏ.க்களைக் கூடப் பார்க்காமல் விஜயகாந்த் சென்று விட்டாரே என்று ஆதங்கப்பட்டனர். இந்நிலையில் சுமார் 15 நிமிடங்கள் கழித்து மீண்டும் தலைமைச் செயலகத்துக்கு வந்தார் விஜயகாந்த். என்ன தோன்றியதோ… தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் அருகில் காரில் வந்து இறங்கினார். அவர்களிடம், ஏன் இன்னும் இங்கேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்…. எழுந்து வாருங்கள். நாம் போகலாம்’ என்று கட்டளையிட்டார். அதைத் தொடர்ந்து தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் தங்களது தர்ணா போராட்டத்தைக் கைவிட்டு எழுந்து சென்றனர். பின்னர் அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசினார் விஜயகாந்த்… அப்போது, அவைத்தலைவர் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களை அசிங்கப்படுத்துவதாக நினைத்து தே.மு.தி.க.வுக்காக வாக்களித்த மக்களை அசிங்கப்படுத்துகிறார். அ.தி.மு.க. அரசு, தேர்ந்து எடுக்கப்பட்ட எங்கள் எம்.எல்.ஏ.க்களை திட்டமிட்டு அசிங்கப்படுத்துகிறது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இப்படியெல்லாம் நடைபெறுவதில்லை. தமிழ்நாட்டில் ஜெயலலிதா வழிகாட்டுதல்படி பட்ஜெட்டை தாக்கல் செய்வதாக சட்டசபையிலேயே முதலமைச்சர் சொல்கிறார். இது கண்டிக்கத் தக்கது…. என்று காட்டமாகக் கூறிச் சென்றார். இதையடுத்து தே.மு.தி.க. எம்.ல்.ஏ.க்கள் தங்களது தர்ணா போராட்டத்தை விலக்கிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img