சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இருந்து இன்று திமுகல், கம்யூ., பாமக ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்தன. சட்டப்பேரவையில் இன்று திருவாரூர் மத்திய பல்கலைக்கழக கட்டடம் இடிந்த விபத்து தொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார். அதன்பின்னர் மு.க.ஸ்டாலின் எழுந்து, இன்னும் 2 நாள்தான் அவை நடவடிக்கைகள் உள்ளன. எனவே தி.மு.க. கொடுத்துள்ள கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் குறித்து பேச அனுமதிக்க வேண்டும் என்று கேட்டார். அது பரிசீலனையில் உள்ளது என்று அவைத்தலைவர் தெரிவித்தார். அப்போது துரை முருகன் எழுந்து வேலூர் அருகே மாவட்ட ஆட்சியர் கார் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பான பிரச்னை குறித்துப் பேசத் தொடங்கினார். அவைத்தலைவர் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். அவைக்கு வெளியில் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், தற்போது அவையில் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டியுள்ளது. நாங்கள் தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு, குடிநீர் பிரச்னை, ரேஷன் கடையில் பருப்பு தட்டுப்பாடு, விவசாய அதிகாரி தற்கொலை, வேலூரில் கலெக்டர் வாகனம் மோதி ஏற்பட்ட விபத்து போன்ற பல்வேறு கவன ஈர்ப்பு தீர்மானங்களைக் கொடுத்திருக்கிறோம். அது பற்றி பேச அனுமதி கேட்டால் அது ஆய்வில் இருக்கிறது என்று அவர் கூறுகிறார். இன்னும் 2 நாள்தான் அவை இருக்கிறது. எனவே, இது பற்றி பேச அனுமதி தராததற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தோம் என்றார். நெல்லை வேளாண் அதிகாரி தற்கொலை விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரும் பிரசனை தொடர்பாக் மார்க்சிஸ்ட்டும் வெளிநடப்பு செய்தது. பாமகவின் கணேஷ் குமார் எம்.எல்.ஏ.வும் இதே பிரச்னைக்காக வெளிநடப்பு செய்தார்.
Hot this week
சற்றுமுன்
இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக
நெல்லை
தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!
திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
சுற்றுலா
மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
விளையாட்டு
IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!
ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics
சற்றுமுன்
இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக
நெல்லை
தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!
திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
சுற்றுலா
மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
விளையாட்டு
IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!
ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.
உரத்த சிந்தனை
கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!
முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...
அரசியல்
அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!
இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

