திருவாரூர் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: இரா.முத்தரசன் கோரிக்கை

திருவாரூர் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண தர வேண்டும் என்று  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் அதில்,

திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக் கழக கட்டிடம் இடிந்து ஐந்து பேர் பலியானதும், பலர் படுகாயமடைந்துள்ளதும் மிகுந்த கவலை அளிக்கின்றது.
ரூபாய் ஆயிரம் கோடி நிதி ஒதுக்கிடு செய்து கட்டுமானப் பணிகள் கடந்த 2009ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன.
கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில் 2014ல் இரு முறை குடியரசுத் தலைவரின் வருகைக்கு ஏற்பாடு செய்து ரத்து செய்யப்பட்டுள்ளது கவனத்தில் கொள்ள வேண்டும்.
கலவைப் பொருள்கள் உரிய வகையில் பயன் படுத்தாமலும், அவசர கதியில் பணிகளை முடிக்க மேற் கொண்ட முயற்சியாலும், பணி புரியும் தொழிலாளர்களை ஒய்வின்றி இரவு பகலாக பணிகளில் ஈடுபடுத்திய காரணத்தாலும் விபத்து நடை பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.
ஒப்பந்தக் காரரின் பொறுப்பற்ற செயலாலும் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாகவும் விலை மதிக்க முடியாத ஐந்து மனித உயிர்கள் பலியாகி உள்ளன. 16க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்று மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தை சேர்ந்த இருவர், உத்திரபிரதேசத்தை சேர்ந்த இருவர், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் இறந்துள்ளனர்.  இறந்தவர்களில் குடும்பத்திற்கு தலா பத்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதுடன் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களின் உடல்களை அவர்களது சொந்த ஊருக்கு எடுத்துச் சென்று உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்திட வேண்டும்.
காயமடைந்தவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பும் வரை உயர் மருத்துவ சிகிச்சை அளிப்பதுடன் அவர்களின் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்சம் நிதி வழங்கிட வேண்டும்.
மத்திய பல்கலைக் கழக கட்டுமான பணிகள் தொடங்கிய நாள் முதல் பெரும் ஊழல் முறைகேடுகள் நடை பெற்று வருவதன் காரணமாக இவ்விபத்து நடை பெற்றுள்ளது என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். விபத்து நடைபெற்றது குறித்தும், கட்டுமான பணிகள் நடை பெறுவது குறித்தும் பணியல் உள்ள உயர்நீதி மன்ற நீதிபதியைக் பொண்டு முழுமையான விசாரனை நடத்தப்பட வேண்டும்.
தவறு செய்தவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும். இனியும் இத்தகைள கோர விபத்துகள் நடைபெறாமல் இருக்க உ நடவடிக்கைகளை அரசு மேற் கொள்ள வேண்டும். – என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories