December 6, 2025, 7:18 PM
26.8 C
Chennai

வன விலங்கு விரட்டி… செயல்விளக்கப் பயிற்சி! வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் ஆர்வம்!

vadakarai animals repelled3 - 2025

செங்கோட்டை அருகே வடகரை கிராமத்தில் விவசாயிகளுக்கு வன விலங்கு விரட்டி செயல்விளக்கப் பயிற்சி! வேளாண்மை கல்லூரி மாணவிகள் பங்கேற்பு!

செங்கோட்டை அருகே உள்ள வடகரை கீழ்பிடாகை கிராமத்தில், விளைநிலங்களை சேதப்படுத்தும் வன விலங்குகளை விரட்டுவதற்கான செயல்விளக்கப் பயிற்சி நடைபெற்றது. இதில் விவசாயிகள் மற்றும் வேளாண்மை கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

vadakarai animals repelled2 - 2025

செங்கோட்டை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது வடகரை. இங்கு விவசாயிகள் நெல், தென்னை, வாழை போன்றவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்கள். நீண்ட காலமாக காட்டு யானைகள், காட்டு பன்றிகள், மான், மிளா உள்ளிட்ட வன விலங்குகளால் விவசாய விளை நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை அழித்து வருவது வாடிக்கையாகி விட்டது. இதனால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.மேலும் வனவிலங்குகளால் பயிர்கள் சேதமடைவதை தடுக்க மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

vadakarai animals repelled1 - 2025

அதன் ஒரு பகுதியாக வேளாண்மைத்துறையின் மூலம் ஆத்மா திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் வனவிலங்குகளால் பாதிக்கப்பட்டுள்ள தென்காசி, செங்கோட்டை வட்டாரங்களில் வனவிலங்குகளை விரட்டுவதற்கான தொழில்நுட்பத்தினை விவசாயிகளுக்கு செயல்விளக்கமாக செய்து காட்டிட ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன் முதற்கட்டமாக, செங்கோட்டை அருகே உள்ள வடகரை கீழ்பிடாகை கிராமத்தில் நடந்த செயல் விளக்க பயிற்சியில் நீல்போ” என்ற வனவிலங்கு விரட்டி மருந்தினை பயன்படுத்தி, வன விலங்குகளிடம் இருந்து விவசாயப் பயிர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் கனகம்மாள் விவசாயிகள் மற்றும் மாணவிளுக்கு விரிவாக விளக்கி கூறினார்.

vadakarai animals repelled - 2025

இப்பயிற்சியில் துணை வேளாண்மை அலுவலர் திவான் பக்கீர் முகைதீன், தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில செயலாளர் ஜாகீர் உசேன், சாகுல் ஹமீது, முகமது இஸ்மாயில், காதர் ஒலி மற்றும் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி நான்காம் ஆண்டு மாணவ மாணவிகள் மாலா, கெளரி, பபிதா தேவி, பவித்ரா, சசிகலா, ஸ்ரீமதி, வர்ஷா, சியாமளா
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் ஈசாக் அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர் மாதிரி ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories