பராமரிப்பில் அலட்சியம்: பிரேக் பிடிக்காத ஸ்கூல் வேன் கால்வாயில் கவிழ்ந்து 3 பேர் பலி

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே பிரேக் பிடிக்காத ஸ்கூல் வேன் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவன் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் எஸ்.ஜி.எஸ். நினைவு மெட்ரிக் பள்ளியில் புதுக்கடை அருகே உள்ள வேங்கோடு பகுதியை சேர்ந்த 9 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்கள், தினமும் பள்ளி வேனில் சென்று வருவர். அதுபோல், நேற்று காலை 9 மணியளவில் வழக்கம் போல் பள்ளி வேன், வேங்கோடு பகுதியில் உள்ள 9 குழந்தைகளை ஏற்றிக்கொண்டு கருங்கல் நோக்கி புறப்பட்டது. வேனை கருங்கல் பகுதியைச் சேர்ந்த ஜெனிஷ் (30) ஓட்டிச் சென்றார். அந்த வேன் வேங்கோடு பகுதியில் சென்ற போது, school-busபிரேக் பழுதாகி தாறுமாறாக ஓடி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஒரு டீக்கடை சுவர் மீது மோதியது. பின்னர் கடையின் பின்புறம் உள்ள கால்வாய்க்குள் பாய்ந்து கவிழ்ந்தது. அப்போது, அந்தக் கால்வாயில் விஜயகுமார் என்பவரின் மனைவி கனகலதா குளித்துக் கொண்டிருந்தார். அவர் மீது அந்த வேன் பாய்ந்தது, இதனால் வேனுக்கு அடியில் சிக்கிய கனகலதா அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், வேன் ஓட்டுநர் ஜெனிஷும் இடிபாடுகளில் சிக்கி பலியானார். இந்நிலையில் வேனில் இருந்த பள்ளிக் குழந்தைகளும், ஆயாவும் கூச்சலிட்டனர். அப்பகுதி மக்கள் ஓடிவந்து அவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். புதுக்கடை போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். இதைத் தொடர்ந்து, அங்கு விரைந்துவந்த புதுக்கடை காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த பள்ளி மாணவர்கள் சஜின்குமார் (8), அனிதா (8), ஜோஸ்லின் (4), அஸ்வின் கிறிஸ்டி (9), பெனர்லின் (5), பியுலின் டெனி (9), ஜோஸ்லின் டால் (5), சாம்லின் அஸ்வினி, வேனில் இருந்த ஆயா நேசம் ஆகியோரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கக் கொண்டு செல்லும் வழியில் மாணவன் சஜின்குமார் உயிரிழந்தார். இதனிடையே விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை முடுக்கி விட்டார். இந்நிலையில், படுகாயம் அடைந்த ஆயா மற்றும் பள்ளி குழந்தைகள் 8 பேரும் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து புதுக்கடை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குமரியில் மட்டும் ஏன் இப்படி ‘பகீர்’ புரளிகள்?

குமரி மாவட்டத்தின் சில கடற்கரை கிராமங்களில் கடற்கரை மணலில் மோனோசைட் போன்ற கனிமங்கள் இயற்கையாகவே கலந்துள்ளன. இந்தக் கனிமங்கள் இருப்பதால் அந்தப் பகுதியில் புற்றுநோய் அதிகமாக வருகிறது என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், அந்தக் குறிப்பிட்ட காரணம் அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட முடிவாக நிரூபிக்கப்படவில்லை.

மதமாற்ற விவாதம் … மீண்டும்!

மத்திய உள்துறை அமைச்சரகம் கடந்த வாரம் வெளிநாட்டு நன்கொடை (FCRA) விதிகளில் சில திருத்தங்களை அறிவித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெறும் என் ஜி ஓ க்களின் ( அரசு சாரா அமைப்புகள்) செயல்பாடுகளை வரைமுறை படுத்துவது அதன் நோக்கம்.

பஞ்சாங்கம் ஜூலை 02 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 01 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

நீங்கள் மோடியை விரும்பலாம் அல்லது வெறுக்கலாம். ஆனால் 'மோடி என்ற தகுதி முத்திரை'யை அலட்சியப்படுத்த முடியாது. மாபெரும் அதிகாரம் பெரும் பொறுப்புடன் சேர்ந்தே வருகிறது. மக்கள் நேரடியாக அவருக்கு அளித்துள்ள பெரும்பான்மை ஆதரவுக்கு முழு நியாயம் செய்வதாக

Topics

குமரியில் மட்டும் ஏன் இப்படி ‘பகீர்’ புரளிகள்?

குமரி மாவட்டத்தின் சில கடற்கரை கிராமங்களில் கடற்கரை மணலில் மோனோசைட் போன்ற கனிமங்கள் இயற்கையாகவே கலந்துள்ளன. இந்தக் கனிமங்கள் இருப்பதால் அந்தப் பகுதியில் புற்றுநோய் அதிகமாக வருகிறது என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், அந்தக் குறிப்பிட்ட காரணம் அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட முடிவாக நிரூபிக்கப்படவில்லை.

மதமாற்ற விவாதம் … மீண்டும்!

மத்திய உள்துறை அமைச்சரகம் கடந்த வாரம் வெளிநாட்டு நன்கொடை (FCRA) விதிகளில் சில திருத்தங்களை அறிவித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெறும் என் ஜி ஓ க்களின் ( அரசு சாரா அமைப்புகள்) செயல்பாடுகளை வரைமுறை படுத்துவது அதன் நோக்கம்.

பஞ்சாங்கம் ஜூலை 02 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 01 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

நீங்கள் மோடியை விரும்பலாம் அல்லது வெறுக்கலாம். ஆனால் 'மோடி என்ற தகுதி முத்திரை'யை அலட்சியப்படுத்த முடியாது. மாபெரும் அதிகாரம் பெரும் பொறுப்புடன் சேர்ந்தே வருகிறது. மக்கள் நேரடியாக அவருக்கு அளித்துள்ள பெரும்பான்மை ஆதரவுக்கு முழு நியாயம் செய்வதாக

பஞ்சாங்கம் ஜூன் 30 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

Entertainment News

Popular Categories