வேட்பாளர் புகைப்படத்தையும் வாக்குச்சீட்டில் அச்சிட முடிவு: தேர்தல் கமிஷன்

Published:

sandeep-saxsena சென்னை: வாக்குச்சீட்டில் வேட்பாளர்களின் புகைப்படத்தை சேர்த்து அச்சிட இந்திய தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா வெளியிட்ட அறிக்கையில்… எலக்ட்ரானிக் வாக்கு எந்திரத்தில் வைக்கப்படும் வாக்குச் சீட்டு மற்றும் தபால் வாக்குச் சீட்டுகளில் இதுவரை வேட்பாளருக்கான வரிசை எண், வேட்பாளரின் பெயர், வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் ஆகியவை மட்டும் அச்சிடப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் ஒரே பெயர் கொண்ட பல வேட்பாளர்கள் ஒரே தொகுதியில் போட்டியிடுவது பற்றி இந்திய தேர்தல் கமிஷன் கவனத்தில் கொண்டது. இது வாக்காளர் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தியது. எனவே அந்த குழப்பத்தை தீர்ப்பதற்கு இந்திய தேர்தல் கமிஷன் முடிவு செய்தது. அதன்படி, வரும் மே 1-ந்தேதிக்கு மேல் நடக்க இருக்கும் அனைத்து தேர்தலிலும் பயன்படுத்தப்படவுள்ள, எலக்ட்ரானிக் வாக்கு எந்திரத்தில் ஒட்டப்படும் வாக்குச் சீட்டுகள், சாதாரண வாக்குச் சீட்டுகள், தபால் வாக்குச் சீட்டுகள் ஆகியவற்றில் ஏற்கனவே அச்சிடப்படும் விவரங்களுடன் அந்தந்த வேட்பாளர்களின் புகைப்படமும் அச்சிடப்பட வேண்டும் என்று இந்தியத் தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. அந்த புகைப்படத்தின் அகலம் மற்றும் உயரம் முறையே 2 செ.மீ.க்கு 2.5 செ.மீயாக இருக்கும். எனவே தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தங்கள் அண்மைகால புகைப்படத்தை வேட்புமனுவுடன் சேர்த்து தாக்கல் செய்ய வேண்டும். அதன் பின்பக்கத்தில் வேட்பாளரின் கையெழுத்து இடம் பெற்றிருக்க வேண்டும். அந்தப் புகைப்படம் 3 மாதங்களுக்குள் எடுக்கப்பட்டதா என்பது பற்றிய உத்தரவாதம், வேட்பாளரிடமோ அல்லது அவரது ஏஜெண்டிடமோ பெறப்படும். வேட்புமனுவுடன் புகைப்படத்தை தாக்கல் செய்யாவிட்டால், மனு பரிசீலனைக்குள் புகைப்படத்தை தாக்கல் செய்யும்படி அதிகாரி நோட்டீசு பிறப்பிப்பார். புகைப்படம் கொடுக்காவிட்டால் வாக்குச் சீட்டில் அவரது புகைப்படம் அச்சிடப்படாது என்பதும் அந்த நோட்டீசில் கூறப்பட்டு இருக்கும். அதன் பிறகும் புகைப்படத்தைத் தராத வேட்பாளரின் புகைப்படம், வாக்குச்சீட்டில் அச்சேற்றப்படாது. புகைப்படம் கொடுக்காதது, வேட்புமனுவை தள்ளுபடி செய்வதற்கான ஒரு காரணமாக எடுக்கப்படாது. அந்த புகைப்படத்துடன் கூடிய வாக்குச்சீட்டு, நோட்டீசு பலகையில் வேட்புமனு பரிசீலனைக்கு மறுநாளில் ஒட்டப்படும் என்பதை தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவிப்பதோடு, அதில் உள்ள குறைகளை திருத்திக்கொள்வதற்கு வாய்ப்பளிப்பார். இந்த அறிவிப்புகள் அனைத்தும் வரும் மே 1-ந்தேதிக்கு மேல் நடக்கும் தேர்தலில் இருந்து அமலுக்கு வரும். என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img