வேட்பாளர் புகைப்படத்தையும் வாக்குச்சீட்டில் அச்சிட முடிவு: தேர்தல் கமிஷன்

sandeep-saxsena சென்னை: வாக்குச்சீட்டில் வேட்பாளர்களின் புகைப்படத்தை சேர்த்து அச்சிட இந்திய தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா வெளியிட்ட அறிக்கையில்… எலக்ட்ரானிக் வாக்கு எந்திரத்தில் வைக்கப்படும் வாக்குச் சீட்டு மற்றும் தபால் வாக்குச் சீட்டுகளில் இதுவரை வேட்பாளருக்கான வரிசை எண், வேட்பாளரின் பெயர், வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் ஆகியவை மட்டும் அச்சிடப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் ஒரே பெயர் கொண்ட பல வேட்பாளர்கள் ஒரே தொகுதியில் போட்டியிடுவது பற்றி இந்திய தேர்தல் கமிஷன் கவனத்தில் கொண்டது. இது வாக்காளர் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தியது. எனவே அந்த குழப்பத்தை தீர்ப்பதற்கு இந்திய தேர்தல் கமிஷன் முடிவு செய்தது. அதன்படி, வரும் மே 1-ந்தேதிக்கு மேல் நடக்க இருக்கும் அனைத்து தேர்தலிலும் பயன்படுத்தப்படவுள்ள, எலக்ட்ரானிக் வாக்கு எந்திரத்தில் ஒட்டப்படும் வாக்குச் சீட்டுகள், சாதாரண வாக்குச் சீட்டுகள், தபால் வாக்குச் சீட்டுகள் ஆகியவற்றில் ஏற்கனவே அச்சிடப்படும் விவரங்களுடன் அந்தந்த வேட்பாளர்களின் புகைப்படமும் அச்சிடப்பட வேண்டும் என்று இந்தியத் தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. அந்த புகைப்படத்தின் அகலம் மற்றும் உயரம் முறையே 2 செ.மீ.க்கு 2.5 செ.மீயாக இருக்கும். எனவே தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தங்கள் அண்மைகால புகைப்படத்தை வேட்புமனுவுடன் சேர்த்து தாக்கல் செய்ய வேண்டும். அதன் பின்பக்கத்தில் வேட்பாளரின் கையெழுத்து இடம் பெற்றிருக்க வேண்டும். அந்தப் புகைப்படம் 3 மாதங்களுக்குள் எடுக்கப்பட்டதா என்பது பற்றிய உத்தரவாதம், வேட்பாளரிடமோ அல்லது அவரது ஏஜெண்டிடமோ பெறப்படும். வேட்புமனுவுடன் புகைப்படத்தை தாக்கல் செய்யாவிட்டால், மனு பரிசீலனைக்குள் புகைப்படத்தை தாக்கல் செய்யும்படி அதிகாரி நோட்டீசு பிறப்பிப்பார். புகைப்படம் கொடுக்காவிட்டால் வாக்குச் சீட்டில் அவரது புகைப்படம் அச்சிடப்படாது என்பதும் அந்த நோட்டீசில் கூறப்பட்டு இருக்கும். அதன் பிறகும் புகைப்படத்தைத் தராத வேட்பாளரின் புகைப்படம், வாக்குச்சீட்டில் அச்சேற்றப்படாது. புகைப்படம் கொடுக்காதது, வேட்புமனுவை தள்ளுபடி செய்வதற்கான ஒரு காரணமாக எடுக்கப்படாது. அந்த புகைப்படத்துடன் கூடிய வாக்குச்சீட்டு, நோட்டீசு பலகையில் வேட்புமனு பரிசீலனைக்கு மறுநாளில் ஒட்டப்படும் என்பதை தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவிப்பதோடு, அதில் உள்ள குறைகளை திருத்திக்கொள்வதற்கு வாய்ப்பளிப்பார். இந்த அறிவிப்புகள் அனைத்தும் வரும் மே 1-ந்தேதிக்கு மேல் நடக்கும் தேர்தலில் இருந்து அமலுக்கு வரும். என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories