வேட்பாளர் புகைப்படத்தையும் வாக்குச்சீட்டில் அச்சிட முடிவு: தேர்தல் கமிஷன்

sandeep-saxsena சென்னை: வாக்குச்சீட்டில் வேட்பாளர்களின் புகைப்படத்தை சேர்த்து அச்சிட இந்திய தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா வெளியிட்ட அறிக்கையில்… எலக்ட்ரானிக் வாக்கு எந்திரத்தில் வைக்கப்படும் வாக்குச் சீட்டு மற்றும் தபால் வாக்குச் சீட்டுகளில் இதுவரை வேட்பாளருக்கான வரிசை எண், வேட்பாளரின் பெயர், வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் ஆகியவை மட்டும் அச்சிடப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் ஒரே பெயர் கொண்ட பல வேட்பாளர்கள் ஒரே தொகுதியில் போட்டியிடுவது பற்றி இந்திய தேர்தல் கமிஷன் கவனத்தில் கொண்டது. இது வாக்காளர் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தியது. எனவே அந்த குழப்பத்தை தீர்ப்பதற்கு இந்திய தேர்தல் கமிஷன் முடிவு செய்தது. அதன்படி, வரும் மே 1-ந்தேதிக்கு மேல் நடக்க இருக்கும் அனைத்து தேர்தலிலும் பயன்படுத்தப்படவுள்ள, எலக்ட்ரானிக் வாக்கு எந்திரத்தில் ஒட்டப்படும் வாக்குச் சீட்டுகள், சாதாரண வாக்குச் சீட்டுகள், தபால் வாக்குச் சீட்டுகள் ஆகியவற்றில் ஏற்கனவே அச்சிடப்படும் விவரங்களுடன் அந்தந்த வேட்பாளர்களின் புகைப்படமும் அச்சிடப்பட வேண்டும் என்று இந்தியத் தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. அந்த புகைப்படத்தின் அகலம் மற்றும் உயரம் முறையே 2 செ.மீ.க்கு 2.5 செ.மீயாக இருக்கும். எனவே தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தங்கள் அண்மைகால புகைப்படத்தை வேட்புமனுவுடன் சேர்த்து தாக்கல் செய்ய வேண்டும். அதன் பின்பக்கத்தில் வேட்பாளரின் கையெழுத்து இடம் பெற்றிருக்க வேண்டும். அந்தப் புகைப்படம் 3 மாதங்களுக்குள் எடுக்கப்பட்டதா என்பது பற்றிய உத்தரவாதம், வேட்பாளரிடமோ அல்லது அவரது ஏஜெண்டிடமோ பெறப்படும். வேட்புமனுவுடன் புகைப்படத்தை தாக்கல் செய்யாவிட்டால், மனு பரிசீலனைக்குள் புகைப்படத்தை தாக்கல் செய்யும்படி அதிகாரி நோட்டீசு பிறப்பிப்பார். புகைப்படம் கொடுக்காவிட்டால் வாக்குச் சீட்டில் அவரது புகைப்படம் அச்சிடப்படாது என்பதும் அந்த நோட்டீசில் கூறப்பட்டு இருக்கும். அதன் பிறகும் புகைப்படத்தைத் தராத வேட்பாளரின் புகைப்படம், வாக்குச்சீட்டில் அச்சேற்றப்படாது. புகைப்படம் கொடுக்காதது, வேட்புமனுவை தள்ளுபடி செய்வதற்கான ஒரு காரணமாக எடுக்கப்படாது. அந்த புகைப்படத்துடன் கூடிய வாக்குச்சீட்டு, நோட்டீசு பலகையில் வேட்புமனு பரிசீலனைக்கு மறுநாளில் ஒட்டப்படும் என்பதை தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவிப்பதோடு, அதில் உள்ள குறைகளை திருத்திக்கொள்வதற்கு வாய்ப்பளிப்பார். இந்த அறிவிப்புகள் அனைத்தும் வரும் மே 1-ந்தேதிக்கு மேல் நடக்கும் தேர்தலில் இருந்து அமலுக்கு வரும். என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories