சென்னை: பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட தேமுதிக எம்.எல்.ஏ.க்களின் விடுதி அலுவலகங்களுக்கு பூட்டு போட்டப்பட்டது. சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி நடந்த விவாதத்தின் போது முன்னாள் முதல்வர் பற்றி தேமுதிக எதிர்க்கட்சி துணைத்தலைவர் அழகாபுரம் மோகன்ராஜ் விமர்சித்தார். அப்போது ஏற்பட்ட அமளியில் தேமுதிக சட்டப்பேரவை உறுப்பினர்களில் சிலர் பேரவைத் தலைவரை முற்றுகையிட்டனர். அப்போது அவைக் காவலர்களுடன் மோதல் ஏற்பட்டது. இதில் காவலர்கள் காயம் அடைந்தனர். இதனால் தேமுதிக உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த விவகாரம் அவை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பப்பட்டது. இந்தக் குழுவின் பரிந்துரையின் பேரில், தேமுதிகவைச் சேர்ந்த வி.சி. சந்திரகுமார், அழகாபுரம் மோகன்ராஜ், சி.எச்.சேகர், வெங்கடேசன், தினகரன், பார்த்திபன் ஆகிய ஆறு தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் அடுத்த கூட்டத்தொடரின் 10 நாட்கள் வரை இடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்தக் காலத்தில் அவர்கள் எம்.எல்.ஏ. என்ற முறையில் எந்தவிதமான ஆதாயத்தையும், ஊதியத்தையும், சலுகைகளையும் தகுதிகளையும் பெற முடியாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பேரவைத் தலைவர் தனபால் உத்தரவை செயல்படுத்தும் நடவடிக்கையில் சட்டப்பேரவை செயலகம் ஈடுபட்டுள்ளது. அதன்படி, சென்னை அரசினர் தோட்டத்தில் பேரவை உறுப்பினர்கள் விடுதியில் உள்ள 6 தேமுதிக பேரவை உறுப்பினர்களின் வீடுகளையும் காலி செய்யும்படி கூறினார். அதன் பிறகு இப்போது அந்த வீடுகளுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. இதேபோன்று அவரவர் தொகுதியில் உள்ள அலுவலகங்களுக்கும் பூட்டு போடப்பட்டுள்ளது. இதனால் 6 சட்டப் பேரவை உறுப்பினர்களும் விடுதி அறை மற்றும் அலுவலகங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
தலையங்கம்
ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!
தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சினி நியூஸ்
ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?
தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.
சினி நியூஸ்
ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?
பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
தலையங்கம்
ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!
தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சினி நியூஸ்
ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?
தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.
சினி நியூஸ்
ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?
பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.
உரத்த சிந்தனை
சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!
தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்
நூலரங்கம்
‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு
சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல்
நிகழ்ச்சிகள்
இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!
இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.
Entertainment News
Previous article

