சென்னை: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் கருவுற்ற 10ஆம் வகுப்பு மாணவியின் கருவைக் கலைக்க அரசு மருத்துவர்களுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சென்னையில் 16 வயதான 10ஆம் வகுப்பு மாணவி, அவரது வீட்டுக்கு வந்து சென்ற ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதனால், அந்தச் சிறுமிக்கு கரு உண்டானது. தற்போது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத முடியாத நிலையில் அந்தச் சிறுமி வீட்டில் உள்ளார். அந்த மாணவியின் வயிற்றில் இருக்கும் கருவைக் கலைக்கவேண்டும் என்று அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் கோரிக்கை விடுத்தும், அவர்கள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று சென்னையைச் சேர்ந்த பெண்கள் அமைப்பு ஒன்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதி டி.எஸ். சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை ஆய்வாளர், கருவைக் கலைப்பது குறித்து ஆய்வு செய்த அரசு மருத்துவர்கள் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராயினர். அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு பிளீடர் ஆர்.விஜயகுமார், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறை கடந்த 11 ஆம் தேதி கைது செய்து புழல் சிறையில் அடைத்தது. கருக் கலைப்பு சட்டப்படி, பெற்றோர் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் ஒப்புதல் வழங்கினால் அந்தக் கருவை கலைக்கலாம். இது குறித்து அரசு மருத்துவர்கள் ஆலோசனை நடத்தி, கருவைக் கலைக்க ஒப்புதல் அளித்து விட்டனர். அதற்குள், மனுதாரர் நீதிமன்றத்தை நாடிவிட்டார்” என்றார். இதையடுத்து, “சிறுமியின் கருவைக் கலைக்க பெற்றோரும், அந்தச் சிறுமியும் சம்மதம் தெரிவித்துள்ளதால், அந்தக் கருவை மருத்துவர்கள் உடனடியாகக் கலைக்க வேண்டும்” என்று கூறினார் நீதிபதி. இதற்கு முன்னர், கோவில் திருவிழாவில் ஏற்பட்ட பகையைத் தீர்க்க 13 வயதுச் சிறுமியை சசிகுமார் என்ற இளைஞர் பலாத்காரம் செய்தார். இதையடுத்து, அதன்மூலம் ஏற்பட்ட கருவைக் கலைக்க வேண்டும் என்று கோரி, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கிலும் சிறுமியின் வயிற்றில் உள்ள கருவைக் கலைக்க கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
ஆன்மிகச் செய்திகள்
ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!
கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
கட்டுரைகள்
அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!
ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
ஆன்மிகச் செய்திகள்
ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!
கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
கட்டுரைகள்
அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!
ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
விளையாட்டு
FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!
ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

