சென்னை: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் கருவுற்ற 10ஆம் வகுப்பு மாணவியின் கருவைக் கலைக்க அரசு மருத்துவர்களுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சென்னையில் 16 வயதான 10ஆம் வகுப்பு மாணவி, அவரது வீட்டுக்கு வந்து சென்ற ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதனால், அந்தச் சிறுமிக்கு கரு உண்டானது. தற்போது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத முடியாத நிலையில் அந்தச் சிறுமி வீட்டில் உள்ளார். அந்த மாணவியின் வயிற்றில் இருக்கும் கருவைக் கலைக்கவேண்டும் என்று அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் கோரிக்கை விடுத்தும், அவர்கள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று சென்னையைச் சேர்ந்த பெண்கள் அமைப்பு ஒன்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதி டி.எஸ். சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை ஆய்வாளர், கருவைக் கலைப்பது குறித்து ஆய்வு செய்த அரசு மருத்துவர்கள் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராயினர். அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு பிளீடர் ஆர்.விஜயகுமார், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறை கடந்த 11 ஆம் தேதி கைது செய்து புழல் சிறையில் அடைத்தது. கருக் கலைப்பு சட்டப்படி, பெற்றோர் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் ஒப்புதல் வழங்கினால் அந்தக் கருவை கலைக்கலாம். இது குறித்து அரசு மருத்துவர்கள் ஆலோசனை நடத்தி, கருவைக் கலைக்க ஒப்புதல் அளித்து விட்டனர். அதற்குள், மனுதாரர் நீதிமன்றத்தை நாடிவிட்டார்” என்றார். இதையடுத்து, “சிறுமியின் கருவைக் கலைக்க பெற்றோரும், அந்தச் சிறுமியும் சம்மதம் தெரிவித்துள்ளதால், அந்தக் கருவை மருத்துவர்கள் உடனடியாகக் கலைக்க வேண்டும்” என்று கூறினார் நீதிபதி. இதற்கு முன்னர், கோவில் திருவிழாவில் ஏற்பட்ட பகையைத் தீர்க்க 13 வயதுச் சிறுமியை சசிகுமார் என்ற இளைஞர் பலாத்காரம் செய்தார். இதையடுத்து, அதன்மூலம் ஏற்பட்ட கருவைக் கலைக்க வேண்டும் என்று கோரி, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கிலும் சிறுமியின் வயிற்றில் உள்ள கருவைக் கலைக்க கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது.
Hot this week
மதுரை
மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!
இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
நெல்லை
நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!
பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
சற்றுமுன்
ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!
இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.
சற்றுமுன்
10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?
தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Topics
மதுரை
மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!
இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
நெல்லை
நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!
பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
சற்றுமுன்
ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!
இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.
சற்றுமுன்
10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?
தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டுரைகள்
பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?
பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.
சற்றுமுன்
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

