spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்விளையாட சென்ற போது வழியில் கிடைந்த பணம்! பொறுப்பாக ஒப்படைத்த மாணவனுக்கு பாராட்டு!

விளையாட சென்ற போது வழியில் கிடைந்த பணம்! பொறுப்பாக ஒப்படைத்த மாணவனுக்கு பாராட்டு!

- Advertisement -
kumaraguru
kumaraguru

விழுப்புரம் அருகே சாலையில் கிடந்த ரூ.21,700 பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த எட்டாம் வகுப்பு மாணவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபன் மகன் குமரகுரு (14). இவர் அங்கு உள்ள ராமகிருஷ்ணா பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

புதன்கிழமை காலை தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட செல்வதற்காக சுங்கச்சாவடி அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் பகுதிக்கு சென்றார்.

அப்போது சாலையோரம் கீழே கிடந்த ரூபாய் நோட்டுகள் எடுத்து பார்த்தபோது அதில் 21 ஆயிரத்து 700 ரூபாய் இருந்தது தெரியவந்தது.

பணத்தை தவற விட்டவர்கள் யார் என்று தெரியாததால், அதனை எடுத்துக்கொண்டு அவர் வீட்டுக்குச் சென்று, போலீசில் ஒப்படைக்குமாறு அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அவரது தாயார் ஹேமலதாவை அழைத்துக்கொண்டு விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அந்த தொகையை ஒப்படைத்தார்.

சிறுவனின் நற்குணத்தை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், அவரைப் பாராட்டி சால்வை அணிவித்து புத்தகங்கள் வழங்கி வாழ்த்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe