ஜெயலலிதா புகழ்பாடும் பட்ஜெட் உரை: மு.கருணாநிதி

Published:

தமிழக அரசின் பட்ஜெட் வெறும் வாய்ஜால ஏமாற்று வேலை என்றும், ஜெயலலிதா புகழ்பாடும் அறிக்கை என்றும் திமுக தலைவர் கருணாநிதி விமர்சித்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்த கருத்துகள்… தமிழக அரசின் நிதிநிலை கடும் நெருக்கடியில் இருப்பதை உறுதிபடுத்தும் வகையில் நிதிநிலை அறிக்கையின் தொடக்கத்தில் வாசகங்களள் இடம் பெற்று இருப்பதாக கூறியுள்ளார். மத்திய அரசு மீது பட்ஜெட்டில் பல்வேறு புகார்கள் கூறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள கருணாநிதி மத்திய நிதியமைச்சர் அதிமுக-வின் தலைவியை அவரது இல்லத்திலேயே சந்தித்த போது முதலமைச்சருடன் இருந்து இந்த கோரிக்கைகளை எடுத்துச் சொல்லாதது ஏன்? விவசாயிகளின் பிரச்சினை, மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினை, உடன்குடி மின் திட்டம், நெடுஞ்சாலை பணியாளர்களுக்கு ஏற்படும் வேலை இழப்பு போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை … 150 மெகாவாட் சூரியஒளி மின்சார திறன் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் 3ஆயிரம் மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கப்படும் என 3 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டதில் எஞ்சியது குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை … ஜெயலலிதா புகழ்பாடும் வார்த்தைகள் தான் நிதிநிலை அறிக்கையில் திரும்ப திரும்ப இடம் பெற்றுள்ளன. நாட்டு மக்களுக்கு பயன்படும் எந்தவிதமான அறிவிப்புகளும் இடம் பெறவில்லை. மொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கை வாய்ஜாலத்திலேயே உள்ள ஏமாற்று வித்தையை போலத் தான் உள்ளது என்று கூறியுள்ளார்.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img