மதுரை: மத்திய அரசு மேற்கொண்டுள்ள நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்தைத் திரும்பப் பெறுமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவு பிறப்பித்தது. தேனி மாவட்டம் பொட்டிப்புரத்தில் ஐ.என்.ஓ., எனப்படும் இந்திய நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு முயற்சி செய்து வந்தது. இதற்கு தமிழ்நாடு அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற்று வருமாறு மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, நியூட்ரினோ ஆய்வு மையத்தால், சுற்றுச் சூழல் பாதிக்கப்படும், தேனி மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், எனவே மத்திய அரசு இந்த முயற்சியை திரும்பப் பெற வேண்டும் என்று தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், விஎஸ்.ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு இது குறித்து இன்று உத்தரவு வழங்கியபோது, தமிழ்நாடு மாசு கட்டுப் பாட்டு வாரியமும், மத்திய அரசும் அளித்த பதிலில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இந்த திட்டத்தை தொடங்குவதற்கான அனுமதி கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதை வைத்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் முறையான அனுமதி பெற்றுக் கொள்ளும் வரை மத்திய அரசு இந்தத் திட்டத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது.
நியூட்ரினோ ஆய்வு மையம்: மத்திய அரசு திரும்பப்பெற உயர் நீதிமன்றம் உத்தரவு
Popular Categories


