சென்னை: கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் சனிக்கிழமை மார்ச் 28ம் தேதி முழ்க் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினர் இன்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து விளக்கினர். கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது உள்பட 3 இடங்களில் தடுப்பணை கட்ட முடிவு செய்துள்ளது. இந்த பணிகளை தொடங்க கர்நாடக அரசு பட்ஜெட்டில் ரூ. 25 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தடுப்பணைகள் கட்டினால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து விடும் என்பதால் மேகதாது திட்டத்துக்கு தடை விதிக்க கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த திட்டத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. மத்திய அரசு ஒப்புதல் அளிக்காத நிலையில் மேகதாது தடுப்பணை கட்டும் திட்டத்தை நிறைவேற்ற கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகளும், விவசாயிகள் சங்கங்களும் ஒட்டு மொத்தமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த பிரச்சனையில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் வருகிற 28–ந்தேதி (நாளை மறுநாள்) தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேகதாது தடுப்பணைத் திட்டம் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் காவிரி படுக்கையில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்துகிறது. இதை அடுத்து அனைத்து விவசாய சங்கங்கள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாய சங்க பிரதிநிதிகள் இன்று கோட்டைக்கு சென்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினர். அப்போது 28–ந்தேதி முழு அடைப்புக்கு ஆதரவு தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சற்றுமுன்
இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக
நெல்லை
தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!
திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
சுற்றுலா
மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சற்றுமுன்
இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக
நெல்லை
தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!
திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
சுற்றுலா
மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
விளையாட்டு
IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!
ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.
உரத்த சிந்தனை
கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!
முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...
அரசியல்
அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!
இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

