நாளை முழு அடைப்பு: த.மா.கா. கலந்து கொள்வதாக ஜி.கே.வாசன் அறிக்கை

சென்னை: நாளை அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் நடத்தப் படவுள்ள முழு அடைப்புக்கு த.மா.கா., ஆதரவு அளித்து கலந்து கொள்வதாக ஜி.கே.வாசன் கூறியுள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்ட அறிக்கையில், காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணைக் கட்டுவதைத் தடுக்கவும் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை முழுமையாக நீதிமன்ற ஆணைப்படி கர்நாடக அரசு வழங்கவும் – வலியுறுத்தி நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் த.மா.கா கலந்து கொள்கிறது. உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படும் (Riparian Water Rights)-ஆற்றங்கரை, நீர் உரிமைகள் படி கடை மடைப் பகுதி விவசாயத்திற்கும் நீர் சென்றடைய வேண்டும் என்பது தான் நியதி. கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி தமிழகத்திற்கு 192 டி.எம்.சி தண்ணீர் கொடுக்க மறுக்கிறது. இது உச்ச நீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு அவமதிக்கும் செயல். தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 12 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி வழக்கமாக நடைபெறும். கடந்த 6 ஆண்டுகளாக குறுவை சாகுபடியும் நடைபெறவில்லை. 2011 ஆம் ஆண்டில் மட்டுமே சாகுபடி நடந்தது. தமிழகத்தில் நிலவும் மின் தட்டுப்பாட்டால் மின்சாரத்தை பயன்படுத்தி தண்ணீர் எடுக்க முடியாத நிலையும் உள்ளது. தமிழகத்தில் குறிப்பாக டெல்டா விவசாயப் பகுதிகளில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுவதற்கு காவிரி நீர் போதிய அளவில் கிடைப்பதில்லை என்பது தான் காரணம். மேலும் காவிரி நீர் பாயும் தமிழகப் பகுதியின் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படுகிறது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்புப் படி காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறை ஆணையம் இது வரை அமைக்கப்படவில்லை. தமிழகத்தில் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் காவிரி தண்ணீர் இன்றியமையாதது. கர்நாடக அரசு உரிய காவிரி நீரைத் தர மறுப்பதோடு, காவிரியின் குறுக்கே மேகதாது, ராசிமணல் போன்ற பகுதிகளில் தடுப்பணைக் கட்ட முயற்சிப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. அதற்காக நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளது. இது கர்நாடக அரசின் பிடிவாதக் குணத்தைக் காட்டுகிறது. தடுப்பணைக் கட்டுவதற்கு கர்நாடக அரசின் தொடர் முயற்சியைத் தடுத்து நிறுத்தவும், மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் தடுப்பணைக் கட்டுவதற்கு ஒப்புதல் தரக்கூடாது என்பதற்கும், காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறை ஆணையம் உடனடியாக அமைக்கவும், உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு கொடுக்கக் கூடிய தண்ணீரை காலம் தாழ்த்தாமல், முழுமையாக வழங்கிடவும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக கடந்த 21 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற விவசாய சங்கங்கள் மற்றும் த.மா.கா உட்பட அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வருகின்ற 28 ஆம் தேதி சனிக்கிழமை தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. ஏற்கனவே த.மா.கா விவசாயிகள் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தும், ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தியுள்ளது. இப்பொழுது நடைபெற இருக்கும் முழு அடைப்பு போராட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டப் பகுதிகளிலும் த.மா.கா தலைவர்களும், தொண்டர்களும் திரளாக கலந்து கொள்வார்கள். இப்போரட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவரும் அறவழியில் செயல்பட்டு விவசாயிகள் நலன் காப்பதில் இந்த முழு அடைப்பு போராட்டத்தினை வெற்றியோடு நடத்திட வேண்டும். என்று கூறியுள்ளார்.

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

Topics

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

Entertainment News

Popular Categories