சென்னை: பன்றி காய்ச்சல் நோய் குறித்து பரிசோதனை செய்வதற்கு அரசு சார்பில் 7 பரிசோதனை மையங்களும், தனியார் சார்பில் 13 அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை மையங்களும் உள்ளன. அரசு ஆணைப்படி, ஒரு பரிசோதனைக்கு ரூ.3,750-க்கு மேல் வாங்கக் கூடாது. அவ்வாறு வாங்கும் தனியார் நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தார் தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன். பன்றி காய்ச்சல் நோய் தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோய்க்கு இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் நேற்று சென்னை அண்ணாநகரில் உள்ள தமிழ்நாடு மருத்துவ சேவை பணிகள் கழக கிடங்கையும் மற்றும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பன்றி காய்ச்சல் விழிப்புணர்வு, கண்காணிப்பு முகாமையும் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது உடன் வந்த சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம்பேசினார். அப்போது…. வட இந்தியாவில் 25 ஆயிரம் பேர் பன்றி காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டு 1,370 பேர் இறந்துள்ளனர். தமிழ்நாட்டில் ஒரு விழுக்காடுக்கும் குறைவான இறப்பு தான் பதிவாகியுள்ளது. தமிழக அரசு எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக, பன்றி காய்ச்சல் தாக்கம் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் தேவையற்ற பீதி அடைய வேண்டாம். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இந்த நோயின் தாக்கம் இன்னமும் குறைவடையாததால் தமிழகத்தில் பரவாமல் தடுக்க பல்வேறு தொடர் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. நாளொன்றுக்கு 482 விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு முகாம்கள், சுகாதார பழக்கவழக்கங்களை மக்களிடையே கொண்டு செல்வது, பன்றி காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு உலக சுகாதார நிறுவனம் மற்றும் மத்திய அரசின் சுகாதாரத்துறையின் வழிகாட்டுதலின்படி, மருந்து வழங்குதல் மற்ற்றும் தேவைக்கேற்ப ஆய்வு மையங்களின் மூலம் கண்டறிதல், சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் 6.75 லட்சம் ‘டாமிபுளூ’ மாத்திரைகள், சுகாதாரப்பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய 50 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தமிழ்நாடு மருத்துவ சேவை பணிகள் கழகத்தை பொறுத்தவரை மாநிலம் முழுவதும் 25 மருத்துவ கிடங்கின் வாயிலாக டாமிபுளூ மாத்திரையும், தடுப்பூசியும் வழங்கப்பட்டு வருகிறது. பன்றி காய்ச்சல் நோய் குறித்து பரிசோதனை செய்வதற்கு அரசு சார்பில் 7 பரிசோதனை மையங்களும், தனியார் சார்பில் 13 அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை மையங்களும் உள்ளன. அரசு ஆணைப்படி, ஒரு பரிசோதனைக்கு ரூ.3,750-க்கு மேல் வாங்கக் கூடாது. அவ்வாறு வாங்கும் தனியார் நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். அதன்படி, சென்னையில் 2 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் கூடுதலாக வசூலித்த பணத்தை திரும்பி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் இதை கண்காணிக்க மருத்துவ அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அரசு பரிசோதனை மையங்களில் இது இலவசமாக செய்யப்படுகிறது. வெளி மாநிலங்களுக்கு பயணம் செய்வோர் தங்கள் பயணம் குறித்த விவரங்களை ஒரு வாரத்திற்கு முன்பு தெரிவித்து தடுப்பூசி போடுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொதுவாக பன்றி காய்ச்சல் நோய் 80 சதவீதம் தொடுதல் மூலமாகவே பரவுகிறது. எனவே கையை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என்பதை விழிப்புணர்வு செய்யும் வண்ணம் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பன்றி காய்ச்சல் மற்றும் அனைத்து வகையான காய்ச்சல் குறித்து 24 மணி நேரமும் மருத்துவ ஆலோசனைகள் பெறும் வகையில், தகவல் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 044-24350496, 24334811, 94443 40496, 93614 82899 போன்றவை தகவல் மையத்தின் தொலைபேசி எண்கள். மேலும் தகவல் பெற ‘104’ சேவையை தொடர்பு கொள்ளலாம். .. என்றார்.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
சற்றுமுன்
வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!
பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!
மதுரை
மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!
மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
சற்றுமுன்
வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!
பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!
மதுரை
மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!
மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!
உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.
கட்டுரைகள்
ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?
ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

