டி20: ஆட்டம் பிரமாதம் இல்லை; ஆனாலும் வெற்றி!

icc t20 world cup
icc t20 world cup

ஐ.சி.சி டி20 போட்டி – 26.10.2021

முனைவர் கு. வை பாலசுப்பிரமணியன்

நேற்று செவ்வாய்க்கிழமை இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் துபாயில் மேற்கு இந்தியத்தீவுகள் அணிக்கும் தென் ஆப்பிரிக்கா அணிக்கும் இடையே நடந்தது.

இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஒருவரை சென்ற ஆண்டு காவலர் ஒருவர் கொன்றதற்காக, தாங்கள் நிறவெறிக்கு எதிரானவர்கள் என்பதைக் காண்பிக்க, தென் ஆப்பிரிக்க அணியினரை மண்டியிட்டு அஞ்சலி செலுத்தச் சொல்லி தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் போர்டு உத்தரவு பிறப்பித்திருந்தது,

க்விண்டன்-டி-காக் இந்த நிபந்தனையை ஏற்க மறுத்து இன்று விளையாடவில்லை. பூவா தலையா வென்ற தென் ஆப்பிரிக்கா அணி மேற்கு இந்தியத்தீவுகள் அணியை மட்டையாடச் சொன்னது. இதற்கு முன்னர் இரண்டு அணிகளும் ஒரு ஆட்டத்தில் தோல்வியுற்றிருந்தன. அதுவும் மேற்கு இந்தியத்தீவுகள் அணி மோசமாகத் தோற்றிருந்தது.

இன்றைய ஆட்டத்திலும் மேற்கு இந்தியத்தீவுகள் அணி ஒன்றும் பிரமாதமாக ஆடவில்லை. இருப்பினும் எவின் லிவிஸ் (56), கிரன் பொலார்ட்(26) இரிவரின் ஆட்டத்தில் இருபது ஓவர் முடிவில் எட்டு விக்கட் இழப்பிற்கு 143 ரன் எடுத்தது.

தொடக்க ஆட்டக்காரர் லெண்டல் சிம்மன்ஸ் நிறைய பந்துகளை வீணடித்தார்.

பின்னர் ஆடவந்த தென் ஆப்பிரிக்கா அணி நிதானமாக ஆடி 18.2 ஓவரில் இரண்டு விக்கட் இழப்பிற்கு 144 ரன் எடுத்து ஆட்டத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் ஹெண்ட்ரிக்ஸ் (39), துசான் (43), மக்ரம் (51) சிறப்பாக விளையாடினர். அன்ரிக் நார்ட்ஜ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பாகிஸ்தான் – நியூசிலாந்து
இரண்டாவது ஆட்டம் ஷார்ஜாவில் பாகிஸ்தான் அணிக்கும் நியூசிலாந்து அணிக்குமிடையே நடந்தது.

நியூசிலாந்து அணிக்கு இது முதல் ஆட்டம். பாகிஸ்தான் ஏற்கனவே இந்தியாவை வென்றிருக்கிறது. அண்மையில் நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் பாதுகாப்புக் காரணங்களுக்காக விளையாட மறுத்ததில் பாகிஸ்தான் அணி மிகுந்த கோபத்தில் இருப்பதாக செய்திகள் வந்துகொண்டிருந்தன.


டாஸ் வென்று பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை விளையாடச்சொன்னது. நியூசிலாந்து அணியின் விக்கட்டுகள் தொடர்ந்து விழுந்துகொண்டிருந்தன. பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர்.

இதனால் ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் நியூசிலாந்து அணிக்கு அமையவில்லை. அந்த அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கட் இழப்பிற்கு 134 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.


பாகிஸ்தான் அணி ஆடியபோது அதன் ரன்ரேட் 16 ஓவர் வரை நியூசிலாந்தின் ரன் ரேட்டை விடக் குறைவாக இருந்தது. ஆனால் இலக்கு 135 ரன் என்பதனால் பாகிஸ்தான் எளிதில் 18.4 ஓவரில் ஐந்து விக்கட் இழப்பிற்கு 135 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

இன்றும் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய அனைத்து தரப்பிலும் பாகிஸ்தான் அணி சிறப்பாக ஆடியது. குரூப் 2 பிரிவில் கண்டிப்பாக அரையிறுதிக்குச் செல்லும் அணியாகச் செல்ல, பாகிஸ்தான் அணிக்கு நிறைய வாய்ப்பிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories