டி20: ஆட்டம் பிரமாதம் இல்லை; ஆனாலும் வெற்றி!

icc t20 world cup
icc t20 world cup

ஐ.சி.சி டி20 போட்டி – 26.10.2021

முனைவர் கு. வை பாலசுப்பிரமணியன்

நேற்று செவ்வாய்க்கிழமை இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் துபாயில் மேற்கு இந்தியத்தீவுகள் அணிக்கும் தென் ஆப்பிரிக்கா அணிக்கும் இடையே நடந்தது.

இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஒருவரை சென்ற ஆண்டு காவலர் ஒருவர் கொன்றதற்காக, தாங்கள் நிறவெறிக்கு எதிரானவர்கள் என்பதைக் காண்பிக்க, தென் ஆப்பிரிக்க அணியினரை மண்டியிட்டு அஞ்சலி செலுத்தச் சொல்லி தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் போர்டு உத்தரவு பிறப்பித்திருந்தது,

க்விண்டன்-டி-காக் இந்த நிபந்தனையை ஏற்க மறுத்து இன்று விளையாடவில்லை. பூவா தலையா வென்ற தென் ஆப்பிரிக்கா அணி மேற்கு இந்தியத்தீவுகள் அணியை மட்டையாடச் சொன்னது. இதற்கு முன்னர் இரண்டு அணிகளும் ஒரு ஆட்டத்தில் தோல்வியுற்றிருந்தன. அதுவும் மேற்கு இந்தியத்தீவுகள் அணி மோசமாகத் தோற்றிருந்தது.

இன்றைய ஆட்டத்திலும் மேற்கு இந்தியத்தீவுகள் அணி ஒன்றும் பிரமாதமாக ஆடவில்லை. இருப்பினும் எவின் லிவிஸ் (56), கிரன் பொலார்ட்(26) இரிவரின் ஆட்டத்தில் இருபது ஓவர் முடிவில் எட்டு விக்கட் இழப்பிற்கு 143 ரன் எடுத்தது.

ALSO READ:  சபரிமலையில் விஷூ கொண்டாட்டம்..

தொடக்க ஆட்டக்காரர் லெண்டல் சிம்மன்ஸ் நிறைய பந்துகளை வீணடித்தார்.

பின்னர் ஆடவந்த தென் ஆப்பிரிக்கா அணி நிதானமாக ஆடி 18.2 ஓவரில் இரண்டு விக்கட் இழப்பிற்கு 144 ரன் எடுத்து ஆட்டத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் ஹெண்ட்ரிக்ஸ் (39), துசான் (43), மக்ரம் (51) சிறப்பாக விளையாடினர். அன்ரிக் நார்ட்ஜ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பாகிஸ்தான் – நியூசிலாந்து
இரண்டாவது ஆட்டம் ஷார்ஜாவில் பாகிஸ்தான் அணிக்கும் நியூசிலாந்து அணிக்குமிடையே நடந்தது.

நியூசிலாந்து அணிக்கு இது முதல் ஆட்டம். பாகிஸ்தான் ஏற்கனவே இந்தியாவை வென்றிருக்கிறது. அண்மையில் நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் பாதுகாப்புக் காரணங்களுக்காக விளையாட மறுத்ததில் பாகிஸ்தான் அணி மிகுந்த கோபத்தில் இருப்பதாக செய்திகள் வந்துகொண்டிருந்தன.


டாஸ் வென்று பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை விளையாடச்சொன்னது. நியூசிலாந்து அணியின் விக்கட்டுகள் தொடர்ந்து விழுந்துகொண்டிருந்தன. பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர்.

இதனால் ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் நியூசிலாந்து அணிக்கு அமையவில்லை. அந்த அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கட் இழப்பிற்கு 134 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.

ALSO READ:  டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!


பாகிஸ்தான் அணி ஆடியபோது அதன் ரன்ரேட் 16 ஓவர் வரை நியூசிலாந்தின் ரன் ரேட்டை விடக் குறைவாக இருந்தது. ஆனால் இலக்கு 135 ரன் என்பதனால் பாகிஸ்தான் எளிதில் 18.4 ஓவரில் ஐந்து விக்கட் இழப்பிற்கு 135 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

இன்றும் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய அனைத்து தரப்பிலும் பாகிஸ்தான் அணி சிறப்பாக ஆடியது. குரூப் 2 பிரிவில் கண்டிப்பாக அரையிறுதிக்குச் செல்லும் அணியாகச் செல்ல, பாகிஸ்தான் அணிக்கு நிறைய வாய்ப்பிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories