December 5, 2025, 3:47 PM
27.9 C
Chennai

மற்றவர்களைப் போல் அரசியல் செய்யவேண்டுமென்றால்… நான் ஏன் அரசியலுக்கு வர வேண்டும்?: ரஜினி கேள்வி!

rajini - 2025

தமிழகத்தில் ஒரு புதிய அரசியலை அறிமுகப்படுத்தி, மாற்றத்தை ஏற்படுத்தவே அரசியலுக்கு வருகிறோம்; மற்றவர்களைப் போலவே அரசியல் செய்வதற்கு நாம் ஏன் புதிதாக அரசியலுக்கு வர வேண்டும் என்று ரஜினி காந்த் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மக்கள் மன்றத்தில் நிர்வாகிகள் நியமனம், நீக்கம் அனைத்தும் எனது கவனத்திற்கு வருவதில்லை என்று கூறுவது தவறானது என்றும், ஒழுங்கு நடவடிக்கைகள் எனது ஒப்புதலுடனே மேற்கொள்ளப் படுகிறது என்றும் அவர் அந்த அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து ரஜினிகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் மன்றத்தில் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் தன் அனுமதியில்லாமல் நடந்ததாக சிலர் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மக்கள் மன்ற உறுப்பினர்கள் நியமனம், மாற்றம், ஒழுங்குநடவடிக்கைகள் அனைத்தும் தன் பார்வைக்கு கொண்டுவரப்பட்டு, தன் ஒப்புதலுடன்தான் அறிவிக்கப்படுகின்றன.

அரசியலுக்கு வந்தால் அதை வைத்து பதவி, பணம் சம்பாதிக்க எண்ணுபவர்களை அருகிலேயே சேர்க்க மாட்டேன், இப்போதே விலகி விடுங்கள் என கடந்த ஆண்டு மே மாதம் ரசிகர்கள் சந்திப்பில் கூறினேன். நான் சொன்னது வெறும் பேச்சுக்காக இல்லை, தமிழ்நாட்டில் ஒரு புது அரசியலை அறிமுகப்படுத்தி, அதன் மூலமாக ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் அரசியலுக்கு வருகிறேன்.

ரஜினி மன்றத்திற்காக செலவு செய்ய வேண்டும் என்று தான் யாரையும் சொன்னது கிடையாது. மன்றத்தினருக்கு தான் கொடுத்த வேலை பணம் செலவு செய்து முடிக்க வேண்டிய வேலை கிடையாது! எனவே யாராவது என்னிடம் வந்து மன்றத்திற்காக பணம் செலவு செய்தேன் என்று கூறினால் ஏற்றுக்கொள்ள முடியாது! 30, 40 வருடங்கள் ரசிகர்கள் மன்றத்தில் இருந்தது மட்டுமே, மக்கள் மன்றத்தில் பதவி பெறுவதற்கோ அரசியலில் ஈடுபடுவதற்கோ முழுதகுதி ஆகி விட முடியாது.

பொதுமக்களுடன் மன்ற நிர்வாகப் பொறுப்புகளை பகிர்ந்து செயல்படாமல், கொடுத்த வேலையை தானும் செய்யாமல், துடிப்புடன் செயல்பட விரும்பும் உறுப்பினர்களை செயல்பட விடாமலும் தடுத்து, மன்றத்தின் கொள்கைகளுக்கு முரணாகச் செயல்பட்டவர்களைத்தான் மன்றத்திலிருந்து நீக்கியிருக்கிறோம் என்று கூறியுள்ளார் ரஜினிகாந்த்.

rajini arikkai - 2025 rajini arikkai2 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories