ஜல்லிக்கட்டு நடத்த உரிய நடவடிக்கை : மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

Published:

 
 
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என மத்திய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 
மேலும் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் வீடுகளில் இருந்த சமையல் கியாஸ் சிலிண்டர்களும் அடித்து செல்லப்பட்டு உள்ளது. அவர்களுக்கு மீண்டும் சிலிண்டர் வழங்க பெட்ரோலியத்துறைக்கு மத்திய அரசு பரிந்துரை செய்து உள்ளது. சமையல் கியாஸ் சிலிண்டர்கள் இல்லாதவர்களுக்கு விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
 
ஜல்லிக்கட்டு தமிழகத்தின் வீரவிளையாட்டு. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது. இது பற்றி அத்துறை அமைச்சகத்துக்கு மத்திய அரசு பரிந்துரை செய்து உள்ளது.
 
அதன் அடிப்படையில் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த எல்லா பணிகளும் நடப்பதாக அவர்கள் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள். இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இவற்றை சரி செய்து தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். மத்திய அரசு மட்டுமின்றி அனைத்து கட்சிகளும் இதற்கு ஆதரவு கொடுத்து முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததார்
 

 

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img