திமுக, அதிமுக அஸ்திவாரத்தை அசைத்து ஆடச்செய்தவர் தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த்!

Published:

 
 
திமுக, அதிமுகவின் அஸ்திவாரத்தை அசைத்ததோடு ஆடச்செய்தது தேமுதிக என தேமுதிக கட்சியை சேர்ந்த மாலிக் அன்சாரி அவரது முகநூல் பக்கத்தின் பதிவில் கூறியுள்ளார்.
 
மேலும் மாலிக் அன்சாரியின் முகநூல் பக்கத்தின் பதிவில் கூறியுள்ளதாவது :-
 
25 ஆண்டுகளில் எத்தனையோ இயக்கங்கள் உருவானாலும், எவையும் திமுக அதிமுகவை சிறு கீறல் கூட ஏற்படுத்தவில்லை…
 
தேமுதிக உருவான பின்பு தான் திமுக இலவசத்தை கையில் எடுத்து தேர்தலை சந்தித்ததும், மைனாரிட்டி அரசாக அமர்ந்ததும்…
 
திமுகவின் அஸ்திவாரத்தை அசைத்ததோடு அல்லாமல், அதிமுகவையும் ஆடச்செய்தது தேமுதிக, இடைத்தேர்தலில் டெப்பாசீட்டையே இழந்ததும், இடைத்தேர்தலை புறக்கணிக்கும் முடிவை எடுத்ததும் தேமுதிக தேர்தல் களத்திற்கு வந்த பின்பு நடந்த வரலாறு…
 
எத்தனை தலைவர்கள் உருவானாலும், சட்டசபையில் எதிர்கட்சி தலைவராக அமர்ந்தது கேப்டன் மட்டும் தான்.
இன்னொரு சரித்திர சாதனை சத்தமின்றி நிகழ்ந்தது, ஆம்…
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றதால் முதல்வர் ஜெயலலிதா முன்னாள் முதல்வர் ஆனார்,
 
கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒரு சேர முன்னாள் முதல்வர்கள், கேப்டன் விஜயகாந்த் எதிர்கட்சி தலைவர்…
பாராளுமன்றத்திற்கு திமுக அதிமுக ஆதரவு இல்லாமல் எவரும் செல்லமுடியாது என்ற மாயை உடைக்கப்பட்டு சென்ற பாராளுமன்ற தேர்தலில் 2 எம்பிக்களை அனுப்பினோம்,
 
மூன்றாவது அணி உருவாக காரணமே தேமுதிகவை மையமாக வைத்துதான்…
 
திமுக அதிமுக வேண்டாம் என்று நாம் உருவாக்கிய தனி இயக்கம் தேமுதிக…
 
அதே மனநிலையில் பெருவாரியான மக்கள் “ரெண்டு பேருமே வரக்கூடாது!” என்பதில் உறுதியாகியுள்ளனர்…
 
மாற்றத்திற்கான “நேரம்” இது தான், இது “மட்டும்” தான், மக்களுக்கான இயக்கம் மக்கள் நலனை காக்கும் இயக்கம் தேமுதிக தான்…
 
அரக்கர்களை அழிப்பது சுலபம் அல்லாததுதான், ஆனால் நம்மால் முடியாதது எதுவும் இல்லை…
 
நம்மால் முடியும்
நம்மால் மட்டுமே முடியும்…
‪#‎WeSupport_Vijayakanth‬ என தேமுதிக கட்சியை சேர்ந்த மாலிக் அன்சாரி அவரது முகநூல் பக்கத்தின் பதிவில் கூறியுள்ளார்
ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img