” எங்களின் முதல்வர் சகாயம் ” : அரசியலில் மாற்றத்தை உருவாக்க சிந்திக்கும் இன்றைய இளைய தலைமுறையினர்

Published:

 
அரசியலில் மாற்றத்தை உருவாக்க சிந்திக்கும் இன்றைய இளைய தலைமுறையினர் ” எங்களின் முதல்வர் சகாயம் ” என்ற கோஷத்துடன் இளைய தலைமுறையினர் நடத்திய எழுச்சிப் பேரணி இன்று காலை சென்னை எழும்பூரில் நடைபெற்றது.
 
சமூக வலை தளங்களை வெறும் பொழுதுபோக்குக்காக மட்டும் பயன்படுத்திய இன்றைய இளைய தலைமுறையினர் கடந்த சில நாட்களாக முகனூல்,வாட்ஸ்ஆப் மற்றும், பிற சமூக வலைதளங்களிலும் நடைபெற்ற எழுச்சிப் பேரணியில் பங்குபெற 
வெள்ளை உடையில் அணி திரளும் படி பதிவுகள் பகிரப்பட்டன
 
அதன்படி இன்று (20-ம் தேதி) சுமார் 1500 பேர் வருவார்கள் என எதிர்பார்த்து காத்திருந்தார்கள் நிகழ்ச்சியை எற்பாடு செய்து இருந்த அமைப்பினர். ஆனால், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வெவ்வேறு மாவட்டங்களிலிருந்து இந்த பேரணியில் கலந்து கொண்டனர். இதனால் பின்னி ரோடு வரை எற்பாடு செய்யப்பட்டு இருந்த பேரணி ரத்து செய்யப்பட்டு, கூட்டமாக மாற்றப்பட்டது.
 
அதேபோல் இளைஞர்களை மட்டுமின்றி, 6 வயது முதல் 60 வயது வரையிலான மக்களும் இதில் கலந்து கொண்டனர். அனைவரின் முகத்திலும் ஒரு ஊழலற்ற நல்லாட்சி அமைய வேண்டும் என்ற ஏக்கம், கோஷமாக எதிரொலிக்கத் தொடங்கியது. சிறுவர்கள் கூட மாற்றத்தை எதிர்நோக்கி பலகையை பிடித்தப்படி கூட்டத்தில் நின்றனர்.லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்தி நேர்மைக்காக எத்தனையோ இன்னல்களை சந்தித்த சகாயம் ஐ.ஏ.எஸ் நாட்டை ஆள வேண்டும் என குரல்கள் ஒலிக்க துவங்கின.
 
அமைதியான முறையில் நடந்து கொண்டிருந்த கூட்டத்திற்குள், திடீரென ரோஸ் நிற துண்டு அணிந்த சிலர் புகுந்து, எதிரான கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினர்.
 
கூட்டத்தில் பங்கேற்ற பல இளைய தலைமுறையினர்
செய்தியாளர்களிடம்கூறியதாவது ;-
 
50 வருஷமா மாறி மாறி தமிழ்நாட்டை சூறையாடினது போதும். இனிமேலாவது தமிழ்நாடு உருப்படணும். நேர்மையான இளைஞர்கள் கையில் நாடு போகணும். அப்படி நம்ம கண்ணு முன்னாடி இருக்குற ஒருத்தர்தான் சகாயம்.
 
இந்த கூட்டம் காசுக்காகவோ அல்லது பிரியாணிக்காகவோ சேர்ந்த கூட்டம் இல்லை. மாச கணக்காக போஸ்டர் அடிச்சு கூட்டின கூட்டம் இல்லை. வெறும் 4 நாட்கள்ல சேர்ந்த கூட்டம். அதுவும் அரசியல்ல இருக்குற ஒருத்தருக்காக இல்லை.அரசியலுக்கு ஒருவர் வரணும் என்பதற்காக என்றனர்.
சகாயம் ஐயா எங்கள காப்பாத்த வாங்க.. தயவு செஞ்சு வராமல் மட்டும் இருந்துடாதீங்க…! என்றும் கோரிக்கை விடுத்தனர் .
 
அரசியலில் மாற்றத்தை உருவாக்க சிந்தித்து இன்றைய இளைய தலைமுறையினர் அதிகார வ(ர்)க்கத்த அரசியல்வாதிகள்மீது வெறுப்படைந்த தமிழக மாணவர்கள் நேர்மையான அரசாங்க ( அரசு பணி ஓய்வு பெற்ற மற்றும் பணியில் உள்ள) அதிகாரிகளை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க மாணவர்கள் திட்டம் போட்டு முகநூலில் பல பெயரில் சமூக பக்கத்தை உருவாக்கி பெயரில் தொடர்ந்து பல பதிவினை பதிவிட்டு பகிர்ந்து குறிப்பிடத்தக்கது.
 
 
அரசியலில் மாற்றத்தை உருவாக்க இன்றைய இளைய தலைமுறையினர் சிந்திக்க வைத்தமைக்கு முக்கிய காரணம்
என்னவென்றால் இந்த நிலை ஏற்பட்டதற்கு முக்கியக் காரணமே பொதுநல நோக்கம் இன்றி லஞ்சம் பெற்றும் ஊழல் செய்தும், பொதுமக்களின் வரிப் பணத்தை அரசாங்க பொதுநல திட்டங்களுக்கு முறையாக செலவிடாமல் கொள்ளையடித்து சொத்து சேர்க்கும் பேராசையில் தொடர்ந்து சுற்றி திரிந் து வரும் சுயநல அரசியல்வாதி கரைவேட்டி கொள்ளையர்களே என கூறப்படுகிறது.
 
மக்களின் வரிப் பணத்தில்அரசாங்கம் பொதுமக்களுக்கான அனைத்து நலத்திட்ட உதவிகளுக்காக செலவிட பெரும் தொகையை ஒதுக்குகிறது.
 
அவ்வாறு ஒதுக்கப்படும் பல கோடி ரூபாய்களை பெரும்பாலான அதிகார வ(ர்)க்கத்த அரசியல்வாதிகள் பொதுநல நோக்கம் இன்றி லஞ்சம் பெற்றும், ஊழல் செய்தும், பொதுநலத் திட்டங்களுக்கு முறையாக செலவிடாமல் கொள்ளையடித்து சொத்து சேர்க்கும் பேராசையில் தொடர்ந்து சுற்றி திரிந்து வரும் சுயநல அரசியல்வாதி கரைவேட்டி கொள்ளையர்கள் அரசியலை குலத் தொழிலாக செய்து வருகின்றனர்.
 
சாதாரணமாக சாப்பிடவே வழியின்றி பெரும்பாலானவர்கள் அதிகார வ(ர்)க்கத்த அரசியல்வாதிகளின் ஆதரவால் அவர்களுக்காக பல சமூக விரோத செயல்களை செய்து பரவலாக தமிழகத்தில் தொடர்ந்து சுற்றி திரிந்து வருவதாக தமிழக மக்களால் பரவலாக பேசப்படுகிறது.
 
சாப்பிடவே வழியின்றி சுற்றி திரிந்த பலர் அரசியல் கட்சியில் இணைந்து அந்த கட்சியில் வட்டம், சதுரம், முக்கோணம் என பதவிகளைப் பெற்று கட்டப் பஞ்சாயத்து செய்தும், பொதுமக்களின் வரிப் பணத்தை கொள்ளையடித்தும் அரசியலை குலத் தொழிலாக மாற்றி சொத்து சேர்த்து உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
 
தமிழகத்தில் நல்லாட்சி மலர நடைபெறவுள்ள 2016ம் வருட சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் நேர்மையான அரசாங்க (அரசு பணி ஓய்வு பெற்ற மற்றும் பணியில் உள்ள) அதிகாரிகளுக்கு ஆதரவாக அனைவரும் வாக்களித்து கட்டாயம் வெற்றி பெற செய்வார்கள் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
 
எது எப்படியோ பதவி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பொதுமக்களின் வரிப் பணத்தை ஊழல் செய்து கொள்ளையடித்து சொத்து சேர்க்கும் அதிகார வ(ர்)க்கத்த அரசியல்வாதிகள் ஒழிந்தால் சரி .
 
தமிழகத்தில் நல்லாட்சி மலர மாணவர்கள் எடுத்துள்ள முயற்சி வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.!
 
 
 

 

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img