பாவூர்சத்திரத்தில் நிர்வாக குழுவை அனுமதிக்க மறுத்த கல்லூரி நிர்வாகம்

பாவூர்சத்திரம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகக்குழு மாற்றம் போலீசார் முன்னிலையில் பேச்சுவார்த்தை

பாவூர்சத்திரத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மாற்றம் குறித்து பிரச்சனை ஏற்பட்டதால் இருதரப்பைச் சேர்ந்த நிர்வாகிகளை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
  நாடார் மஹாஜன சங்கம் சார்பில் பாவூர்சத்திரத்தில் 1984ம் ஆண்டு தனியார் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இந்த கல்லூரிக்காக அந்தபகுதியைச் சேர்ந்த பலர் தங்களது நிலங்களை கல்லூரிக்கு தானமாக வழங்கினர்.
  கல்லூரிக்கு வகுப்பறை கட்டிடம் கட்டித் தரும் நன்கொடையாளர் விரும்பும் பெயரில் கல்லூரியும், மாணவர் விடுதி கட்டிடம் கட்டித் தரும் நன்கொடையாளர் விரும்பும் பெயரில் மாணவர் விடுதியும் செயல்படும் என அப்போது தெரிவிக்கப்பட்டது.
 இதன் பேரில் கல்லூரிக்கு வகுப்பறை கட்டிடம் கட்டித் கொடுத்த நன்கொடையாளர் விருப்பத்தின் பேரில் கல்லூரிக்கு நாடார் மஹாஜன சங்கம் எம்.எஸ்.பி.வேலாயுதநாடார் – லெட்சுமிதாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி என்றும், விடுதிக் கட்டிடம் கட்டிக்கொடுத்த நன்கொடையாளர் விருப்பத்தின் பேரில் எம்.கே.வி.கே.கந்தசாமிநாடார் ஆவுடைதங்கம்மாள் மாணவர் தங்கும் விடுதி என்றும் பெயர் வைக்கப்பட்டது.
 இதையடுத்து நாடார் மஹாஜன சங்கம் சார்பில் கல்லூரியின் தாளாளராக எம்.எஸ்.பி.வி.காளியப்பன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு கல்லூரி நிர்வாகம் செயல்பட்டு வந்துள்ளது.
  கல்லூரி தொடங்கிய 1984ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை கல்லூரியில் எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளும் நாடார் மஹாஜன சங்கத்தின் அனுமதி பெற்றே செயல்பட்டு வந்துள்ளது.
  இந்நிலையில் 2005ம் ஆண்டிற்கு பிறகு சங்கத்தை விட்டு விலகி அதன் தாளாளர் மற்றும் அவரது குடும்பத்தினரால் தனியாக ஏற்படுத்தப்பட்ட அறக்கட்டளை சார்பில் செயல்பட தொடங்கியதாக கூறப்படுகிறது.
  இதையடுத்து கல்லூரியை மீண்டும் நாடார் மஹாஜன சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர நாடார் மாஹாஜனசங்க நிர்வாகிகள் முடிவு செய்தனர். அதன்படி கடந்த செப்டம்பர் 27.ம் தேதி மதுரை நாகமலையில் நாடார் மஹாஜனசங்கம் ச வெள்ளச்சாமி நாடார் கல்லூயில் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இந்த பாலிடெக்னிக் கல்லூரிக்கு தற்போது உள்ள எம்.எஸ்.பி.வி காளியப்பன் உள்பட சுமார் 23 பேர் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு கல்லூரியை நிர்வகிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிர்வாகிகள் அனைவரும் நேற்று கல்லூரிக்கு சென்று நிர்வாக பொறுப்பு ஏற்க சென்றனர். இதற்கு கல்லூரி நிர்வாகம் மறுத்தது இதனால் கல்லூரி நுழைவு வாயில் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. உடனே  டி.எஸ்.பி சங்கு, ஆய்வாளர் செந்தாமரைகண்ணன் ஆகியோர் விரைந்து வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் சங்க நிர்வாகிகளையும், கல்லூரி நிர்வாகத்தினரையும் அழைத்து பேசி இன்னும் ஒரு வாரத்திற்குள் இரண்டு தரப்பினரும் கல்லூரி சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும்  கொடுக் வேண்டும் அதில் யார்பக்கம் சரியான ஆவணங்கள் உள்ளதோ அதன்படி நிர்வகிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் அனைவரும்  சென்றனர்.  சங்க கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு கல்லூரி எப்படி தனியார் வசம் சென்றது என்பதுதான் பொதுமக்களின் பில்லியன் டாலர் கேள்வி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories