இந்திய தேசிய கீதத்தில் மாற்றம் செய்ய வேண்டும் : சுப்பிரமணியசுவாமி

Published:

 
 
இந்திய தேசிய கீதத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்று சுப்பிரமணியசுவாமி பிரதமர் மோடிக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
 
 
பிரதமர் மோடிக்கு சுப்பிரமணிய சுவாமி எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது : –
 
 
இந்தியாவின் தேசிய கீதமாக ‘ஜன கண மன..’ பாடலை தேர்தெடுப்பதா அல்லது ‘வந்தே மாதரம்’ பாடலை தேர்ந்தெடுப்பதா என்பது குறித்து பார்லியில் நடந்த விவாதத்தில், அரசியல் நிர்ணய சபை தலைவரான ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத் 1949ம் ஆண்டு நவ., 26ம் தேதி, ஓட்டெடுப்பு நடத்தாமலேயே ‘ஜன கண மன..’ பாடலை தேசிய கீதமாக அறிவித்தார். அப்போது பிற்காலத்தில் பார்லி., உறுப்பினர்களிடம் இது தொடர்பாக ஓட்டெடுப்பு நடத்தி தேவையான மாற்றங்களை செய்துக்கொள்ளலாம் எனவும் ராஜேந்திர பிரசாத் தெரிவித்தார்.
 
மேலும் ‘ஜன கண மன’ பாடல் பிரிட்டிஷ் மன்னரை வரவேற்க எழுதப்பட்டது எனும் குற்றச்சாட்டு உள்ளதால், பாடலின் 95 சதவீதத்தை அப்படியே வைத்துக்கொண்டு மீதமுள்ள 5 சதவீதத்தில் இந்திய சுதந்திர போராட்ட வீரர்களின் பெயரை சேர்க்க வேண்டும். இது தொடர்பாக பார்லியில் ஒருமித்த கருத்தை எட்டுவதும் அவசியம். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவ கீதத்தில் அவர் பயன்படுத்திய சில வார்த்தைகளையும், தேசிய கீதத்தில் இணைத்து மாற்றம் செய்யலாம் என்று சுப்பிரமணியசுவாமி பிரதமர் மோடிக்கு எழுதிய கோரிக்கை கடிதத்தில் தெரிவித்துள்ளார் .
 
 
 

 

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img