கனவு நிறைவேறியது: மார்த்தாண்டம் பார்வதிபுரம் மேம்பாலம் திறப்பு!

Published:

IMG 20181214 WA0007 - 2026

குமரி மாவட்ட மக்களின் 20 ஆண்டு கால கனவான, பார்வதிபுரம், மார்த்தாண்டம் புதிய மேம்பாலங்கள் இன்று திறக்கப் பட்டுள்ளன.

போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, குமரி மாவட்டம் மார்த்தாண்டம் மற்றும் பார்வதிபுரம் மேம்பாலங்கள்  முன்கூட்டியே பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து விடப்பட்டுள்ளன. தென்னிந்தியாவில் முதன்முறையாக இரு பாலங்களும் இரும்பால் அமைக்கப்பட்டுள்ளன.

IMG 20181214 WA0006 - 2026

குமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம், பார்வதிபுரம் பகுதிகளில் போக்குவரத்தை எளிமைப்படுத்தவும் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கும், கேரளாவிலிருந்து தமிழகத்திற்கும் எளிதில் கடக்கவும், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் மார்த்தாண்டம் பகுதியில் 2.5 கிலோ மீட்டர் தொலைவிலும், பார்வதிபுரம் பகுதியில் 1.5 கிலோ மீட்டர் தொலைவிலும் இரு மேம்பாலங்கள் சுமார்  372 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டன.  தற்போது பணிகள்  முடியும் நிலையில் இரு பாலங்களிலும் கனரக வாகனம் அனுமதிக்கப்படுவதாக பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

புதிய பாலங்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது தங்களுக்கு பேருதவியாக இருப்பதாக மகிழ்ச்சியுடன் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சாலை பணிகள் முடிவடையாத நிலையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக பொதுமக்கள் வேண்டுகோளை ஏற்று முன்கூட்டியே திறக்கப்பட்டுள்ளன.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img