சுஷ்மா ஸ்வராஜுடன் தமிழக மீனவர்கள் ஏப்.27ல் சந்திப்பு

ராமநாதபுரம்: மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண, தமிழக மீனவப் பிரதிநிதிகள் திட்டமிட்டுள்ளனர். வரும் ஏப்.27ஆம் தேதி இந்த சந்திப்பு தில்லியில் நடக்கிறது. பேச்சுவார்த்தைக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும், தமிழக–இலங்கை மீனவர்கள் சந்திப்பில் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. மேலும், இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்கள் தொடர்ந்து வருகிறது. எனவே இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்திக்க தமிழக மீனவ பிரதிநிதிகள் திட்டமிட்டுள்ளனர். தற்போது மீன்படி தடைக்காலம் என்பதால் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. இந்தக் காலத்தில் விரைவில் நல்ல முடிவு எடுக்கப்பட்டால் தடைக்காலம் முடிந்ததும் மகிழ்ச்சியுடன் மீன்பிடிக்க செல்லலாம் என மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர். இதன் அடிப்படையில் தமிழக பாஜக., நிர்வாகிகள் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக 27–ஆம் தேதி சுஷ்மா ஸ்வராஜை சந்திக்க அனுமதி கிடைத்துள்ளது. இதற்காக தமிழக மீனவப் பிரதிநிதிகள் 150 பேர் தில்லிக்குச் செல்கின்றனர். ராமேஸ்வரத்தில் இருந்து மீனவர் சங்க தலைவர்கள் தேவதாஸ், சேசு, அல்போன்ஸ், மகத்துவம் உள்பட 26 பேர் கொண்ட குழு வெள்ளிக்கிழமை இன்று இரவு ராமேசுவரத்தில் இருந்து ரயிலில் புறப்பட்டு சென்னை சென்று, மற்ற மீனவர்கள் குழுவுடன் இணைந்து தில்லி செல்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Entertainment News

Popular Categories