குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: முதலமைச்சர் பேச்சு

Published:

குடிநீர் பிரச்சினை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், வழக்கமாக பெய்ய வேண்டிய பருவ மழை பொய்த்து போனதே நிலத்தடி நீர் குறைய காரணமாக அமைந்தது. சென்னையின் நீர் ஆதாரமாக விளங்கி வரும் நான்கு ஏரிகளும் வறண்டு உள்ளன. கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சென்னையை சுற்றியுள்ள கல்குவாரிகளில் இருந்தும் நீர் எடுக்கப்பட்டு வருகிறது. தட்டுபாடு அதிகமாக் உள்ள இடங்களில் கூடுதல் லாரிகள் இயக்கி குடிநீர் வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

Related articles

Recent articles

spot_img