தமிழ்நாடு கெட்டது என்னாலே: காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பரபரப்பு

சென்னை ராணி சீதை மன்றத்தில் ஆர்.எம்.வீரப்பனின் எம்.ஜி.ஆர். கழகம் நடத்திய எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் தமிழக காங்கிரசின் தற்போதைய தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் பேசினார். அப்போது அவர், தமிழ்நாடு கெட்டது என்னாலேதான் என்று கூறி, ஆர்.எம்.வீ.,யிடம் தாம் பகிரங்க மன்னிப்பு கேட்பதாகவும் கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எம்.ஜி.ஆர்., குறித்து தனது நினைவலைகளை இந்த விழாவில் பேசும்போது பகிர்ந்து கொண்ட அவர், ‘’அண்ணன் ஆர்.எம்.வீ. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் இருந்தபோது ஆர்.எம்.வீ. கிட்டத்தட்ட சிஎம் மாதிரி செயல்பட்டார். ஆனால் அவரே சிஎம் ஆக வேண்டியதை கெடுத்தது நான் தான். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவர் அப்போதே சிஎம் ஆகி இருந்தால் இந்த நாட்டில் இவ்வளவு கேவலம் நடந்திருக்காது.

அதற்கு பின் ஒரு சந்தர்ப்பம். அப்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ராகவானந்தம், ஜெயலலிதாவை கட்சியை விட்டு நீக்குவதற்கான ஆதாரங்களுடன் எம்.ஜி.ஆரிடம் வந்தார். புரட்சித் தலைவரும் ஜெயலலிதாவை கட்சியை விட்டு நீக்க முடிவு செய்து விட்டார். அப்போது தலைவர் அங்கிருந்த என்னிடம் என்ன செய்யலாம் என்று கேட்டார். நான் தனியாக பேச வேண்டும் என்று சொன்னேன். மாடிக்கு அழைத்துச் சென்றார்.

ஒரு மணி நேரம் அவருடன் பேசினேன். கீழே இறங்கி வரும்போது அண்ணன் ராகவானந்தம் என்னிடம், ’’கட்சியையும் நாட்டையும் கெடுத்த பாவத்திற்கு நீ ஆளாகிவிட்டாய்’’ என்று சொல்லிவிட்டு போய்க்கொண்டே இருந்தார்.

இப்போது எவன் எவனோ நான்தான் அதிமுக என்கிறான். நான் தான் அதிமுகவை காப்பாற்றினேன் என்கிறான். இதையெல்லாம் பார்த்தால் வயிறு எரிகிறது. எல்லாவற்றுக்கும் சேர்த்து அண்ணன் ஆர்.எம்.வீயிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’’ என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Topics

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

Entertainment News

Popular Categories