உஷார்… பயங்கரவாதிகள் ஊடுருவல்: தமிழகத்தில் எச்சரிக்கை மணி!

tamilnadu police - 2026

தமிழகத்தில் மீண்டும் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுப்பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னதாக, தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இதையடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இந்நிலையில் மீண்டும் மத்திய உளவுப் பிரிவினர் இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட காரில் பயங்கரவாத வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் சுற்றி வருவதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துமாறும் மத்திய உளவுப்பிரிவினர் தமிழக போலீசாரை அறிவுறுத்தியுள்ளனர். இதை அடுத்து அனைத்து மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர்களும் உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அலர்ட்டாக இருக்க அறிவுறுத்தப் பட்டிருப்பதால், சென்னையில் வாகன சோதனை நடத்தப் பட்டு வருகிறது. கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட கார்களை தடுத்து நிறுத்தி போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.

இதனிடையே, கோவை, திருப்பூர் ஆகிய பகுதிகள் முன்னெச்சரிக்கைப் பகுதிகளாக அறியப் பட்டு சோதனை தீவிரப் படுத்தப் பட்டது. அதற்கு ஏற்ப, பயங்கரவாதிகள் திருப்பூரில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியானது. இதனால், அவினாசி அருகே சேவூர் பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. அவ்வழியாக வந்த கர்நாடக பதிவு எண் கொண்ட காரை நிறுத்தி விசாரணை நடத்தினர். காரில் இருந்த 4 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பிடித்து சென்றனர்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

இது குறித்து திருப்பூர் மாவட்ட எஸ்பி., திஷா மித்தலுக்கு தகவல் தெரிவிக்கப்பட, அவரும் விரைந்து சென்று 4 பேரிடமும் விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர்கள் 4 பேரும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்கள் என்பது தெரியவந்ததைத் தொடர்ந்து அவர்களை போலீசார் விடுவித்தனர்.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மற்றும் இசுலாமிய அமைப்புகள் போராட்டங்களைத் தூண்டிவிட்டு வரும் நிலையில், தமிழகத்தில் மீண்டும் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories