உஷார்… பயங்கரவாதிகள் ஊடுருவல்: தமிழகத்தில் எச்சரிக்கை மணி!

tamilnadu police - 2026

தமிழகத்தில் மீண்டும் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுப்பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னதாக, தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இதையடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இந்நிலையில் மீண்டும் மத்திய உளவுப் பிரிவினர் இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட காரில் பயங்கரவாத வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் சுற்றி வருவதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துமாறும் மத்திய உளவுப்பிரிவினர் தமிழக போலீசாரை அறிவுறுத்தியுள்ளனர். இதை அடுத்து அனைத்து மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர்களும் உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அலர்ட்டாக இருக்க அறிவுறுத்தப் பட்டிருப்பதால், சென்னையில் வாகன சோதனை நடத்தப் பட்டு வருகிறது. கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட கார்களை தடுத்து நிறுத்தி போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.

இதனிடையே, கோவை, திருப்பூர் ஆகிய பகுதிகள் முன்னெச்சரிக்கைப் பகுதிகளாக அறியப் பட்டு சோதனை தீவிரப் படுத்தப் பட்டது. அதற்கு ஏற்ப, பயங்கரவாதிகள் திருப்பூரில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியானது. இதனால், அவினாசி அருகே சேவூர் பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. அவ்வழியாக வந்த கர்நாடக பதிவு எண் கொண்ட காரை நிறுத்தி விசாரணை நடத்தினர். காரில் இருந்த 4 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பிடித்து சென்றனர்.

இது குறித்து திருப்பூர் மாவட்ட எஸ்பி., திஷா மித்தலுக்கு தகவல் தெரிவிக்கப்பட, அவரும் விரைந்து சென்று 4 பேரிடமும் விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர்கள் 4 பேரும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்கள் என்பது தெரியவந்ததைத் தொடர்ந்து அவர்களை போலீசார் விடுவித்தனர்.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மற்றும் இசுலாமிய அமைப்புகள் போராட்டங்களைத் தூண்டிவிட்டு வரும் நிலையில், தமிழகத்தில் மீண்டும் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

Entertainment News

Popular Categories