அவினாசி அருகே கார் பஸ் மோதல்… 5 பேர் பலி

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தெக்கலூர் மேம்பாலத்தில் இருந்து கார் விழுந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஐந்து பேர் பலி

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் இருந்து இன்று (செப். 22) காலை சொகுசு கார் ஒன்று கோவை விமான நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. காரில் ஓட்டுநர் உட்பட 6 பேர் பயணித்தனர். அவர்கள் பயணித்த கார் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தெக்கலூர் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது.

அப்போது, அதே மேம்பாலத்தில் எதிர் திசையில் ஈரோட்டிலிருந்து கோவை நோக்கி பேருந்து ஒன்று வந்தது. எதிர்பாராத விதமாக காரும், பஸ்சும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

பஸ் மோதிய வேகத்தில் கார் 50 அடி உயர பாலத்தில் இருந்து கீழே விழுந்தது.

இந்த விபத்தில் டிரைவரைத் தவிர காரில் பயணித்த 5 பேரும் பலியாகினர். இந்த சம்பவம் பற்றி தெரியவந்ததும் அவினாசி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்றனர்.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

அவர்கள் காருக்குள் இறந்து கிடந்த 5 பேரின் உடல்களை அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தில் காயம் அடைந்த கார் டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த விபத்தில், நாமக்கல் பள்ளிப்பாளையம் அதிமுக ஒன்றியச் செயலாளரும் திருச்செங்கோடு வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவருமான கந்தசாமி (50),
திருச்செங்கோடு வேளாண் கூட்டுறவு சங்க துணைத் தலைவர் ஜேம்ஸ் (55), திருச்செங்கோடு வேளாண் கூட்டுறவு சங்க இயக்குநர் கதிர்வேல் (38), ரத்தினம் (48) உட்பட 5 பேர் பலியாகினர்.

இவர்கள் அனைவரும் டெல்லியில் நடைபெறவுள்ள கூட்டுறவு சங்க மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கோவை விமான நிலையத்துக்கு சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது.

மேலும், இந்த விபத்தில் பலியானவர்களில் சிலர் தமிழக அமைச்சர் ஒருவரின் உறவினர்கள் என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.

செய்தி… கே.சி.சாமி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Topics

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Entertainment News

Popular Categories