ஆண்டாள் பற்றி மட்டுமா அவதூறு?; உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள்: ஜீயரிடம் ஹெச்.ராஜா வலியுறுத்தல்!

ஸ்ரீவில்லிபுத்தூர்:

ஆண்டாள் பற்றி மட்டுமா அவதூறு கிளப்பியுள்ளார் வைரமுத்து? திருவள்ளுவர், வள்ளலார், திருமூலர் என நாயன்மார்கள் குறித்தும்தான் தவறான கருத்துகளைப் பதிவு செய்துள்ளார். எனவே ஒருங்கிணைந்த போராட்டம் தேவை; நீங்கள் உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள் என்று ஜீயரிடம் வேண்டுகோள் விடுத்ததாக பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி 2வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார் ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் ஜீயரை பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த மாதம் 7 ஆம் தேதி ராஜபாளையத்தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில், கவிஞர் வைரமுத்து, தெய்வப் பிறவி என இந்துக்கள் போற்றிக் கொண்டாடும் ஆண்டாளை அவதூறாகப் பேசினார். இதற்கு பக்தர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இப்பிரச்னையில், வைரமுத்து ஆண்டாள் சன்னதியில் நேரில் வந்து மன்னிப்பு கேட்கவேண்டுமென, ஸ்ரீவில்லிபுத்துார் மணவாளமாமுனிகள் மடத்தின் சடகோப ராமானுஜ ஜீயர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று 2வது நாளாக அவரின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது.

இந்நிலையில், ஜீயர் சுவாமிகளை பாஜக., தேசிய செயலர் எச்.ராஜா நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், வைரமுத்து ஆண்டாள் குறித்து மட்டும் அவதூறு கிளப்பவில்லை, திருவள்ளுவர் குறித்து பேசியுள்ளார். வள்ளலார், திருமூலர் என நாயன்மார்களின் கருத்துகளையும் திரித்துக் கூறியுள்ளார். எனவே வைரமுத்து விவகாரத்தில் இந்துக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது. நீங்கள் உங்கள் உடலை வருத்தி உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் என்று விண்ணப்பம் செய்கிறேன் என ஹெச்.ராஜா ஜீயரிடம் கூறினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச்.ராஜா, வைரமுத்து சொன்னபடி, ஆண்டாள் குறித்து ஆராய்ச்சி நடத்தவில்லை என இண்டியானா பல்கலைக்கழகம் மறுத்துள்ளது. வைரமுத்து மேற்கோள் காட்டிய அந்தக் கட்டுரையை எழுதிய நாராயணனும், தனது கட்டுரைக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று ஒரு டிவி பேட்டியில் கூறியுள்ளார்.

இப்படி வைரமுத்து ஆண்டாள் குறித்து மட்டும் கூறவில்லை; திருவள்ளுவரை கொச்சைப் படுத்தியுள்ளார். தமிழ்த்தாத்தா குறித்தும் பாரதியார் குறித்தும் தவறான தகவல்களை வைரமுத்து பதிவு செய்துள்ளார். இப்படி தொடர்ந்து 14 கட்டுரைகள் எழுதினார். அவற்றில் இந்து மதத்தை கொச்சைப்படுத்தியும், சனாதனக் கொள்கைகள் குறித்த சந்தேகங்களை எழுப்புவது போல் துர்பிரசாரத்தையும் செய்துள்ளார். பொய்யான சந்தேக விதைகளை அவர் தூவுகிறார். முதலில் பெருமைகளை சொல்வது போல் சொல்லிவிட்டு கடைசியில் ஒருவரை இகழ்வதுதான் வைரமுத்து பாணி.

திருவள்ளுவர், தர்மார்த்த காம மோட்சம் என அறம் பொருள் இன்பம் வீடு என வீடுபேற்றைக் கூறியுள்ளார். ஆனால் மோட்சம் பற்றி திருவள்ளுவர் பேசவில்லை என வைரமுத்து பேசியது பொய். தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் குறித்தும் தனது கட்டுரையில் தவறான தகவல்களை வைரமுத்து கூறியுள்ளார்.

எனவே வைரமுத்து விவகாரத்தில் நீங்கள் மட்டும் உங்கள் உடலை வருத்தி உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் என ஜீயரிடம் வேண்டுகோள் விடுத்தேன். அவருக்கு நான் கட்டளை இட முடியாது. ஆனால் என் வேண்டுகோளை ஏற்று, அவர் நல்ல முடிவு எடுப்பார் என நினைக்கிறேன் என்று கூறினார் ஹெச். ராஜா.

1 COMMENT

  1. சினிமா பாடலாசிரியர்,வை மு. ஆராய்ச்சிகள்,எல்லாம்,இந்து சான்றோர்களை,
    தன் நாத்திக,தனித்தமிழ்நாடு,கொள்கைகளுக்குள் அந்தக்குப்பிக்குள்,
    அடைக்கவே முயற்சி,என்பதை ,இக்கால தமிழ்க்கூறும் நல்லுலகு,
    கவனிக்க வேண்டும்.
    ஹெசே,ராஜாவின் வேண்டுகோளை,ஜீயர்,ஏற்க,
    நாமும் வேண்டுவோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Topics

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories