பெண்மணியை தகாத வார்த்தை பேசிய அய்யாக்கண்ணுவை கைது செய்யக் கோரி பாஜக.,வினர் ஆர்ப்பாட்டம்!

bjp protest - 2026

சென்னை:
திருச்செந்தூர் கோவிலில் பெண்மணியை தகாத வார்த்தைகளால் ஏசிய அய்யாக்கண்ணுவை கைது செய்யக் கோரி தென் சென்னை பாஜக., சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது.

மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினத்தன்று, திருச்செந்தூரில் கோயில் வளாகத்தில் பிரதமர் மோடியை விமர்சித்து துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார் விவசாயிகள் சங்கத்தின் அய்யாக்கண்ணு. அப்போது கோயில் வளாகத்தில் நோட்டீஸ் கொடுக்கக் கூடாது என்று தடுத்தார் உள்ளூர் பாஜக., நிர்வாகியான நெல்லையம்மாள்.

ஆனால், அய்யாக்கண்ணு அந்தப் பெண்ணை தகாத வார்த்தையால் திட்டியதுடன் அடிக்கவும் கை ஓங்கினார். இதை அடுத்து அந்தப் பெண்ணும் பதிலுக்கு கையை ஓங்க, அங்கே தொடர்ந்து கைகலப்பும் வாக்குவாதமும் ஏற்பட்டது. ஆனால், அய்யாக்கண்ணு தொடர்ந்து தகாத வார்த்தையால் அப்படித்தான் பேசுவேன் என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார். மேலும், தன்னுடன் வந்த சிலருடன் அந்தப் பெண்ணைத் தாக்கத் தொடங்கினார். இதனால் ஒரு கட்டத்தில் அந்தப் பெண் தனது செருப்பைக் கழற்றி காட்ட வேண்டிய சூழல் வந்தது.

இதனிடையே, தனியாக வந்த பெண்ணிடம் தகாத முறையில் பேசி நடந்து கொண்ட அய்யாக்கண்ணுவை கண்டித்தும் கைது செய்யக் கோரியும் பல்வேறு மட்டத்தில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப் பட்டன. ஆனால், ஊடகங்கள் அந்தப் பெண் ஏதோ அய்யாக்கண்ணுவை அடித்து விட்டது போல், தவறாக செய்தியை ஒளிபரப்பின.

இந்நிலையில், அய்யாக்கண்ணுவை கண்டித்து, தென்சென்னை மாவட்ட பாஜக., தலைவர் டால்பின் பா.ஸ்ரீதரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். என்ன நடந்தது, ஏன் பிரச்னை என்பது குறித்து பாஜக.,வின் ஓமாம்புலியூர் ஜெயராமன் கண்டன உரை நிகழ்த்தினார். இருப்பினும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்து, சைதை காவல் நிலையம் பின்புறமுள்ள சமுதாய கூடத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலை 6.30 மணி அளவில் அனைவரும் விடுவிக்கப் பட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories