பெண்மணியை தகாத வார்த்தை பேசிய அய்யாக்கண்ணுவை கைது செய்யக் கோரி பாஜக.,வினர் ஆர்ப்பாட்டம்!

bjp protest - 2026

சென்னை:
திருச்செந்தூர் கோவிலில் பெண்மணியை தகாத வார்த்தைகளால் ஏசிய அய்யாக்கண்ணுவை கைது செய்யக் கோரி தென் சென்னை பாஜக., சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது.

மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினத்தன்று, திருச்செந்தூரில் கோயில் வளாகத்தில் பிரதமர் மோடியை விமர்சித்து துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார் விவசாயிகள் சங்கத்தின் அய்யாக்கண்ணு. அப்போது கோயில் வளாகத்தில் நோட்டீஸ் கொடுக்கக் கூடாது என்று தடுத்தார் உள்ளூர் பாஜக., நிர்வாகியான நெல்லையம்மாள்.

ஆனால், அய்யாக்கண்ணு அந்தப் பெண்ணை தகாத வார்த்தையால் திட்டியதுடன் அடிக்கவும் கை ஓங்கினார். இதை அடுத்து அந்தப் பெண்ணும் பதிலுக்கு கையை ஓங்க, அங்கே தொடர்ந்து கைகலப்பும் வாக்குவாதமும் ஏற்பட்டது. ஆனால், அய்யாக்கண்ணு தொடர்ந்து தகாத வார்த்தையால் அப்படித்தான் பேசுவேன் என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார். மேலும், தன்னுடன் வந்த சிலருடன் அந்தப் பெண்ணைத் தாக்கத் தொடங்கினார். இதனால் ஒரு கட்டத்தில் அந்தப் பெண் தனது செருப்பைக் கழற்றி காட்ட வேண்டிய சூழல் வந்தது.

இதனிடையே, தனியாக வந்த பெண்ணிடம் தகாத முறையில் பேசி நடந்து கொண்ட அய்யாக்கண்ணுவை கண்டித்தும் கைது செய்யக் கோரியும் பல்வேறு மட்டத்தில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப் பட்டன. ஆனால், ஊடகங்கள் அந்தப் பெண் ஏதோ அய்யாக்கண்ணுவை அடித்து விட்டது போல், தவறாக செய்தியை ஒளிபரப்பின.

இந்நிலையில், அய்யாக்கண்ணுவை கண்டித்து, தென்சென்னை மாவட்ட பாஜக., தலைவர் டால்பின் பா.ஸ்ரீதரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். என்ன நடந்தது, ஏன் பிரச்னை என்பது குறித்து பாஜக.,வின் ஓமாம்புலியூர் ஜெயராமன் கண்டன உரை நிகழ்த்தினார். இருப்பினும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்து, சைதை காவல் நிலையம் பின்புறமுள்ள சமுதாய கூடத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலை 6.30 மணி அளவில் அனைவரும் விடுவிக்கப் பட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories