இழவு வீட்டில் கேளிக்கை எதற்கு? டிவி., பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும் தடை வருமா?

cauvery tv serial - 2026

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழ்நாட்டில் புதிய திரைப்படங்களை திரையிடக்கூடாது என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழத் தொடங்கியுள்ளன. அடுத்து டிவி., பொழுது போக்கு நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பும் அதுவரை நிறுத்தப் பட வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துவருகின்றன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் படும் வரை, தமிழகத்தில் ஐபிஎல்., போட்டிகள் நடத்தப் படக் கூடாது என்று, தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதற்குக் காரணமாக, இளைஞர்கள் ஐபிஎல் போட்டியால் திசை திரும்பி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் பட நடத்தப்படும் போராட்டங்களில் பங்கேற்க வரமாட்டார்கள், அவர்களின் கவனம் ஒருமுகப் படுத்தப் பட வேண்டும். எனவே ஐபிஎல் கேளிக்கைக்கு இங்கே இடமில்லை என்று முழங்கினர்.

இந்தப் போராட்டங்களில் முன்னாள் சினிமா இயக்குனர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர். இதில் வன்முறை வெடித்ததும், ஐபிஎல் போட்டிகளைக் காணச் சென்ற இளைஞர்களின் டீசர்ட்கள் கிழிக்கப் பட்டதும், கழற்றச் சொல்லி அடித்து உதைத்து அனுப்பியதுமாக வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின. இந்நிலையில், ஐபிஎல் போட்டிகள் சென்னையில் இருந்து மாற்றப் பட்டன.

இதனால் தங்கள் போராட்டம் வெற்றி பெற்றதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அறிவித்தனர். இந்நிலையில், இளைஞர்களை பொழுது போக்கில் ஈடுபடுத்தும் மற்றொரு கேளிக்கை அம்சமான சினிமாக்கள் புதிதாக வெளியிடப் படக் கூடாது என்று சிலர் கருத்து தெரிவித்தனர். திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினும் கூட தனது டிவிட்டர் பக்கத்தில் இதனை வலியுறுத்தினார்.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

இந்நிலையில், காவிரிக்காக திரையுலகினர் திரண்டு வந்து அரை நாள் மௌனப் போராட்டம் நடத்தி வெறுமனே கண்கட்டு நாடகம் நடத்தினால் போதாது, புதிய படங்கள் திரையிடப் படக் கூடாது என்பது மட்டுமல்ல, திரையரங்குகளே ஒட்டு மொத்தமாக மூடப் பட வேண்டும் என்று குரல்கள் எழத் தொடங்கியுள்ளன.

மேலும், காவிரி நீர் நம் விவசாயிகளுக்கு மட்டுமல்ல, வீட்டுப் பெண்களுக்கும் இன்றியமையாதது. அவர்கள்தான் காவிரிக்காக போராட வேண்டும். எனவே, டிவி.,க்களில் வரும் சீரியல்களுக்கு தடை விதித்து, பொழுது போக்குகளை நிறுத்த வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை, டிவி.,க்களில் பொழுது போக்கு சீரியல்கள், நிகழ்ச்சிகள் இடம் பெறக் கூடாது. தமிழகமே கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டங்களை நடத்தி இழவு வீடாகக் காட்சி அளிக்கும் போது, இழவு வீட்டில் கேளிக்கை எதற்கு? என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories