இழவு வீட்டில் கேளிக்கை எதற்கு? டிவி., பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும் தடை வருமா?

cauvery tv serial - 2026

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழ்நாட்டில் புதிய திரைப்படங்களை திரையிடக்கூடாது என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழத் தொடங்கியுள்ளன. அடுத்து டிவி., பொழுது போக்கு நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பும் அதுவரை நிறுத்தப் பட வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துவருகின்றன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் படும் வரை, தமிழகத்தில் ஐபிஎல்., போட்டிகள் நடத்தப் படக் கூடாது என்று, தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதற்குக் காரணமாக, இளைஞர்கள் ஐபிஎல் போட்டியால் திசை திரும்பி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் பட நடத்தப்படும் போராட்டங்களில் பங்கேற்க வரமாட்டார்கள், அவர்களின் கவனம் ஒருமுகப் படுத்தப் பட வேண்டும். எனவே ஐபிஎல் கேளிக்கைக்கு இங்கே இடமில்லை என்று முழங்கினர்.

இந்தப் போராட்டங்களில் முன்னாள் சினிமா இயக்குனர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர். இதில் வன்முறை வெடித்ததும், ஐபிஎல் போட்டிகளைக் காணச் சென்ற இளைஞர்களின் டீசர்ட்கள் கிழிக்கப் பட்டதும், கழற்றச் சொல்லி அடித்து உதைத்து அனுப்பியதுமாக வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின. இந்நிலையில், ஐபிஎல் போட்டிகள் சென்னையில் இருந்து மாற்றப் பட்டன.

இதனால் தங்கள் போராட்டம் வெற்றி பெற்றதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அறிவித்தனர். இந்நிலையில், இளைஞர்களை பொழுது போக்கில் ஈடுபடுத்தும் மற்றொரு கேளிக்கை அம்சமான சினிமாக்கள் புதிதாக வெளியிடப் படக் கூடாது என்று சிலர் கருத்து தெரிவித்தனர். திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினும் கூட தனது டிவிட்டர் பக்கத்தில் இதனை வலியுறுத்தினார்.

இந்நிலையில், காவிரிக்காக திரையுலகினர் திரண்டு வந்து அரை நாள் மௌனப் போராட்டம் நடத்தி வெறுமனே கண்கட்டு நாடகம் நடத்தினால் போதாது, புதிய படங்கள் திரையிடப் படக் கூடாது என்பது மட்டுமல்ல, திரையரங்குகளே ஒட்டு மொத்தமாக மூடப் பட வேண்டும் என்று குரல்கள் எழத் தொடங்கியுள்ளன.

மேலும், காவிரி நீர் நம் விவசாயிகளுக்கு மட்டுமல்ல, வீட்டுப் பெண்களுக்கும் இன்றியமையாதது. அவர்கள்தான் காவிரிக்காக போராட வேண்டும். எனவே, டிவி.,க்களில் வரும் சீரியல்களுக்கு தடை விதித்து, பொழுது போக்குகளை நிறுத்த வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை, டிவி.,க்களில் பொழுது போக்கு சீரியல்கள், நிகழ்ச்சிகள் இடம் பெறக் கூடாது. தமிழகமே கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டங்களை நடத்தி இழவு வீடாகக் காட்சி அளிக்கும் போது, இழவு வீட்டில் கேளிக்கை எதற்கு? என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Topics

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Entertainment News

Popular Categories