December 6, 2025, 3:06 AM
24.9 C
Chennai

இழவு வீட்டில் கேளிக்கை எதற்கு? டிவி., பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும் தடை வருமா?

cauvery tv serial - 2025

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழ்நாட்டில் புதிய திரைப்படங்களை திரையிடக்கூடாது என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழத் தொடங்கியுள்ளன. அடுத்து டிவி., பொழுது போக்கு நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பும் அதுவரை நிறுத்தப் பட வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துவருகின்றன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் படும் வரை, தமிழகத்தில் ஐபிஎல்., போட்டிகள் நடத்தப் படக் கூடாது என்று, தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதற்குக் காரணமாக, இளைஞர்கள் ஐபிஎல் போட்டியால் திசை திரும்பி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் பட நடத்தப்படும் போராட்டங்களில் பங்கேற்க வரமாட்டார்கள், அவர்களின் கவனம் ஒருமுகப் படுத்தப் பட வேண்டும். எனவே ஐபிஎல் கேளிக்கைக்கு இங்கே இடமில்லை என்று முழங்கினர்.

இந்தப் போராட்டங்களில் முன்னாள் சினிமா இயக்குனர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர். இதில் வன்முறை வெடித்ததும், ஐபிஎல் போட்டிகளைக் காணச் சென்ற இளைஞர்களின் டீசர்ட்கள் கிழிக்கப் பட்டதும், கழற்றச் சொல்லி அடித்து உதைத்து அனுப்பியதுமாக வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின. இந்நிலையில், ஐபிஎல் போட்டிகள் சென்னையில் இருந்து மாற்றப் பட்டன.

இதனால் தங்கள் போராட்டம் வெற்றி பெற்றதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அறிவித்தனர். இந்நிலையில், இளைஞர்களை பொழுது போக்கில் ஈடுபடுத்தும் மற்றொரு கேளிக்கை அம்சமான சினிமாக்கள் புதிதாக வெளியிடப் படக் கூடாது என்று சிலர் கருத்து தெரிவித்தனர். திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினும் கூட தனது டிவிட்டர் பக்கத்தில் இதனை வலியுறுத்தினார்.

இந்நிலையில், காவிரிக்காக திரையுலகினர் திரண்டு வந்து அரை நாள் மௌனப் போராட்டம் நடத்தி வெறுமனே கண்கட்டு நாடகம் நடத்தினால் போதாது, புதிய படங்கள் திரையிடப் படக் கூடாது என்பது மட்டுமல்ல, திரையரங்குகளே ஒட்டு மொத்தமாக மூடப் பட வேண்டும் என்று குரல்கள் எழத் தொடங்கியுள்ளன.

மேலும், காவிரி நீர் நம் விவசாயிகளுக்கு மட்டுமல்ல, வீட்டுப் பெண்களுக்கும் இன்றியமையாதது. அவர்கள்தான் காவிரிக்காக போராட வேண்டும். எனவே, டிவி.,க்களில் வரும் சீரியல்களுக்கு தடை விதித்து, பொழுது போக்குகளை நிறுத்த வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை, டிவி.,க்களில் பொழுது போக்கு சீரியல்கள், நிகழ்ச்சிகள் இடம் பெறக் கூடாது. தமிழகமே கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டங்களை நடத்தி இழவு வீடாகக் காட்சி அளிக்கும் போது, இழவு வீட்டில் கேளிக்கை எதற்கு? என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories