தமிழக அரசுக்கு எது முக்கியம்… காவிரி விவகாரமா? மெரினாவா? : உயர் நீதிமன்றம் கேள்வி

Madras High Court in Chennai - 2026

சென்னை: தமிழக அரசுக்கு காவிரி விவகாரம் முக்கியமா? அல்லது மெரினா முக்கியமா? என்று கேள்வி எழுப்பியுள்ளது உயர் நீதிமன்றம். ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, சென்னை மெரினா கடற்கரையில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளிக்கக் கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பி.அய்யாகண்ணு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.

அய்யாக்கண்ணு தரப்பில் அளிக்கப்பட்ட மனுவில், 90 நாட்கள் மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதி கோரப் பட்டிருந்தது. ஆனால், அதற்கு உயர் நீதிமன்றம், ‘மெரினா கடற்கரை என்பது பொதுமக்கள் வந்து செல்லும் பொது இடம். அங்கே தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த 90 நாட்களுக்கு அனுமதி வழங்க உத்தரவிட முடியாது’ என்று கூறியது.

மேலும், தில்லியில் அய்யாகண்ணு மற்றும் விவசாயிகள் அரை நிர்வாணப் போராட்டம் உள்ளிட்ட பலவிதமான போராட்டங்களை நடத்தினர். இதனைக் குறிப்பிட்ட உயர் நீதிமன்றம், அரை நிர்வாணமாக போராட்டங்களை நடத்த வேண்டாம் என்று அய்யாகண்ணு மற்றும் உடன் இருக்கும் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்குங்கள்’ என்று அய்யாக்கண்ணு சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் கேட்டுக்கொண்டது.

marina police force break protesters3545 - 2026

இதன் பின்னர், 90 நாட்களில் இருந்து இறங்கி வந்து, 30 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளிக்கக் கோரியது அய்யாக்கண்ணு தரப்பு. இந்த விவகாரத்தில் காவல்துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் பதில் அளிக்கப்பட்டது. அதில் மெரினாவில் எந்தவிதமான போராட்டமும் நடத்த அனுமதி அளிக்க முடியாது என்று கூறப்பட்டிருந்தது. மேலும், சென்னையில் போராட்டங்கள் நடத்த என்று ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட ஏதேனும் ஓர் இடத்தில் அய்யாக்கண்ணு உண்ணாவிரதம் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. மேலும், 2013-ஆம் ஆண்டுக்குப் பின்னர் மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படுவது இல்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்ற நிலையில், போராட்டத்தை ஒழுங்குபடுத்த மட்டுமே அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும், போராட்டத்தை தடுக்க அதிகாரமில்லை என்றும் கருத்து தெரிவித்த உயர் நீதிமன்றம், காவிரி விவகாரத்தைவிட மெரினாதான் தமிழக அரசுக்கு முக்கியமா? என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியது. மேலும், கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகை காலங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூற முடியுமா? என்றும் கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தது.

கடந்த வருடம் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது, சமூக வலைத்தளங்கள் மூலம் பிரசாரம் செய்யப் பட்டு, மெரினா கடற்கரையில் மாணவர்களைக் கூட்டிய சில அமைப்பினருடன் சமூக விரோதிகள் புகுந்ததும், அவர்களுக்கு பிரியாணி பொட்டலங்கள் விநியோகிக்கப் பட்டு இரவெல்லாம் தங்க வைக்கப் பட்டதும், போராட்டம் வன்முறையாக மாறியதும் போலீஸார் புகுந்து தடியடி நடத்தி மெரினா கலவரக் காடாக மாறியதும், பின்னாளில் எந்தப் போராட்டத்துக்கும் மெரினாவை பயன்படுத்த அனுமதிக்க இயலாது என்று காவல் துறை தரப்பில் கூறப்பட்டதும் கடந்த காலச் செய்திகள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories