நீட் தேர்வில் தோல்வி என தொடரும் சோகம்! திருச்சி மாணவி தூக்கிட்டு தற்கொலை!

subashree neet1 - 2026

திருச்சி: நீட் தேர்வில் தோல்வி அடைந்ததைத் தாங்க இயலாமல் திருச்சி சமயபுரம் அருகே சுபஸ்ரீ என்ற மாணவி புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தகுதித் தேர்வு முடிவுகள், கடந்த செவ்வாய்க் கிழமை அன்று வெளியாயின. தமிழகத்தில் தேர்வு எழுதிய ஒரு லட்சத்து பத்தாயிரம் பேரில் சுமார் 40 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். நீட் தேர்வுக்காக தமிழக அரசும் பெரு முயற்சி எடுத்து இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இதனால் தேர்ச்சி விகிதம் தமிழகத்தில் கூடியுள்ளது.

இந்நிலையில், நீட் தேர்வில் தோல்வி அடைந்ததைத் தாங்க இயலாமல், செஞ்சியைச் சேர்ந்த மாணவி பிரதீபா, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது திருச்சி அருகே ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில், இந்தத் தற்கொலை விவகாரம் குறித்து கொள்ளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

subashree neet - 2026
சுபஸ்ரீ தன் பெற்றோருடன்…

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெயர் சுபஸ்ரீ. இவர், திருச்சி சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகள். கண்ணன், திருச்சி கண்டோன்மெண்ட் கிளை அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநராகவும், அண்ணா தொழிற்சங்க தலைவராகவும் உள்ளார். சுபஸ்ரீ இந்த வருடம் 12ஆம் வகுப்பில் 907 மதிப்பெண்கள் எடுத்து திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால், நீட் தேர்வு முடிவுகள் வெளியான போது, அவரால் 24 மதிப்பெண்கள் மட்டுமே எடுக்க முடிந்துள்ளது. இந்தத் தோல்வியைத் தாங்க இயலாமல் மிகவும் மனம் உடைந்த நிலையில் இருந்துள்ளார் சுபஸ்ரீ. இந்நிலையில், புதன்கிழமை இரவு வீட்டில் இருந்த மின்விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

தனது மகளின் மரணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கண்ணண், “நீட் தேர்வை முற்றிலும் நீக்க வேண்டும். இனி நீட் தேர்வினால் ஒரு மாணவ மாணவியைக் கூட நாம் இழக்கக் கூடாது. தோல்வி அடைந்தால், தற்கொலை ஒரு தீர்வாகாது” என்று கூறினார்.

3 COMMENTS

  1. THEIR MIND SET UP IS TO GET EVERYTHING EASY AND FREE. WHAT ONE CAN EXPECT FROM SUCH GIRLS WHO HAVE NO BASIC COURAGE AND DETERMINATION TO SERVE THE SOCIETY. COWARDS. OFCOURSE THERE ARE POLITICAL LEADERS TO INFLATE THE ISSUE.

  2. சுனாமியாலும் வெள்ளத்தாலும் வார்தா புயலாலும் ஆயிரக் கணக்கான மக்கள் மடிந்தனர். ஆனால் திறமை குறைவால் நீட் தேர்வில் தோல்வியடைந்த பெண் உயிருடன் இருந்து தன் திறமையை மேலும் வளர்த்து அடுத்த தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தங்கள் குடும்பங்கள் மட்டுமே பல வழிகளில் திறமை அடைய வேண்டும் என்று நீட் தேர்வை எதிர்க்கும் கும்பலின் சதிக்கு ஆளாகியிருக்கக் கூடாது.

  3. நீட் தேர்வை நீக்க கோருவது காலனிக்கேற்ப காலை வெட்டிக்கொள்ளக் கூறும் முட்டாள்தனமானது. வெட்கக்கேடானது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories