December 5, 2025, 8:25 PM
26.7 C
Chennai

நீட் தேர்வில் தோல்வி என தொடரும் சோகம்! திருச்சி மாணவி தூக்கிட்டு தற்கொலை!

subashree neet1 - 2025

திருச்சி: நீட் தேர்வில் தோல்வி அடைந்ததைத் தாங்க இயலாமல் திருச்சி சமயபுரம் அருகே சுபஸ்ரீ என்ற மாணவி புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தகுதித் தேர்வு முடிவுகள், கடந்த செவ்வாய்க் கிழமை அன்று வெளியாயின. தமிழகத்தில் தேர்வு எழுதிய ஒரு லட்சத்து பத்தாயிரம் பேரில் சுமார் 40 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். நீட் தேர்வுக்காக தமிழக அரசும் பெரு முயற்சி எடுத்து இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இதனால் தேர்ச்சி விகிதம் தமிழகத்தில் கூடியுள்ளது.

இந்நிலையில், நீட் தேர்வில் தோல்வி அடைந்ததைத் தாங்க இயலாமல், செஞ்சியைச் சேர்ந்த மாணவி பிரதீபா, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது திருச்சி அருகே ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில், இந்தத் தற்கொலை விவகாரம் குறித்து கொள்ளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

subashree neet - 2025
சுபஸ்ரீ தன் பெற்றோருடன்…

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெயர் சுபஸ்ரீ. இவர், திருச்சி சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகள். கண்ணன், திருச்சி கண்டோன்மெண்ட் கிளை அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநராகவும், அண்ணா தொழிற்சங்க தலைவராகவும் உள்ளார். சுபஸ்ரீ இந்த வருடம் 12ஆம் வகுப்பில் 907 மதிப்பெண்கள் எடுத்து திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால், நீட் தேர்வு முடிவுகள் வெளியான போது, அவரால் 24 மதிப்பெண்கள் மட்டுமே எடுக்க முடிந்துள்ளது. இந்தத் தோல்வியைத் தாங்க இயலாமல் மிகவும் மனம் உடைந்த நிலையில் இருந்துள்ளார் சுபஸ்ரீ. இந்நிலையில், புதன்கிழமை இரவு வீட்டில் இருந்த மின்விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தனது மகளின் மரணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கண்ணண், “நீட் தேர்வை முற்றிலும் நீக்க வேண்டும். இனி நீட் தேர்வினால் ஒரு மாணவ மாணவியைக் கூட நாம் இழக்கக் கூடாது. தோல்வி அடைந்தால், தற்கொலை ஒரு தீர்வாகாது” என்று கூறினார்.

3 COMMENTS

  1. THEIR MIND SET UP IS TO GET EVERYTHING EASY AND FREE. WHAT ONE CAN EXPECT FROM SUCH GIRLS WHO HAVE NO BASIC COURAGE AND DETERMINATION TO SERVE THE SOCIETY. COWARDS. OFCOURSE THERE ARE POLITICAL LEADERS TO INFLATE THE ISSUE.

  2. சுனாமியாலும் வெள்ளத்தாலும் வார்தா புயலாலும் ஆயிரக் கணக்கான மக்கள் மடிந்தனர். ஆனால் திறமை குறைவால் நீட் தேர்வில் தோல்வியடைந்த பெண் உயிருடன் இருந்து தன் திறமையை மேலும் வளர்த்து அடுத்த தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தங்கள் குடும்பங்கள் மட்டுமே பல வழிகளில் திறமை அடைய வேண்டும் என்று நீட் தேர்வை எதிர்க்கும் கும்பலின் சதிக்கு ஆளாகியிருக்கக் கூடாது.

  3. நீட் தேர்வை நீக்க கோருவது காலனிக்கேற்ப காலை வெட்டிக்கொள்ளக் கூறும் முட்டாள்தனமானது. வெட்கக்கேடானது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories