நினைத்திருந்தால் எப்போதோ மதிமுக.,வை உடைத்திருப்போம்: மு.க.ஸ்டாலின்

சென்னை

நாங்கள் நினைத்திருந்தால் எப்போதோ மதிமுக.,வை உடைத்திருப்போம் என்று பேசினார் திமுக., பொருளாளர் மு.க.ஸ்டாலின்.

மதிமுக., தலைமை மீது அதிருப்தி அடைந்ததாகக் கூறி, அக்கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறி திமுக.,வில் இணைந்துள்ளனர். காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மதிமுக.,வைச் சேர்ந்த 160 தொண்டர்கள் உள்பட அதிமுக., தேமுதிக., பாமக., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமாகா., உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர் நேற்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக., பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தங்களை திமுக.,வில் இணைத்துக்கொண்டனர்.

அந்த இணைப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியபோது…

திமுக., தொண்டர்கள் மட்டுமன்றி, பொதுமக்கள் மத்தியிலும் ஒரு ஆட்சி மாற்றம் வேண்டும், அதுவும் தலைவர் கருணாநிதி தலைமையில் மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது. அண்மையில் தொடர்ந்து சில நாட்களாக பத்திரிகைகளில், மதிமுக.,வில் இருந்து தாய் கழகமான திமுக.,வுக்கு வந்து சேர்கிறார்கள் என செய்திகள் வந்துள்ளன.

நாங்கள் அந்தக் கட்சியை உடைக்கும் முயற்சியில் இருப்பதாகக் கூறுகிறார்கள். நாங்கள் உடைக்க வேண்டும் என்று நினைத்தால் எப்போதோ உடைத்திருப்போம். ஆனால், அவர்கள் தானாக விரும்பி நிம்மதியை தேடி இங்கு வருகிறார்கள். இன்று, நீங்கள் மட்டும் அன்றி நாங்களும் முழு நிம்மதியை பெற்றுள்ளோம்.

இன்று திமுக., ஆட்சியிலோ, எதிர்க் கட்சியாகவோ இல்லாத நிலையிலும், கருணாநிதியை நம்பி பிற கட்சிகளைச் சேர்ந்த நீங்கள் எல்லாம் வந்துள்ளீர்கள். ஏப்ரல் மாதம் 2016 சட்டமன்ற தேர்தலில் நமது உணர்வை வெளிப்படுத்த வேண்டும். – என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories