சாதிக் கட்டை மீறிய பேத்தியின் காதல்: கழுத்தறுத்துக் கொன்ற தாத்தா

கடலூர்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அருகே சாதிக் கட்டுகளை மீறி ஒரு மாணவனைக் காதலித்ததற்காக தன் பேத்தி என்றும் பாராமல் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொன்று போலீஸில் சரணடைந்துள்ளார் அந்தப் பெண்ணின் தாத்தா.

காட்டுமன்னார்குடியை அடுத்த ஆண்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி. இவருடைய பேத்தி ரமணிதேவி (22). காட்டுமன்னார்குடி எம்ஆர்கே கல்லூரியில் முதுகலை படித்து வந்த அவர், அதே கல்லூரியில் படிக்கும் திண்டிவனத்தை அடுத்த கருமபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சபாபதி (24) என்பவரைக் காதலித்தாராம். இருவரும் வெவ்வேறு பிரிவினர் என்று தெரிகிறது. இதனால் வீட்டில் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதுதொடர்பாக போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. அப்போது காட்டுமன்னார்குடி நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராகினர். அப்போது, தான் பெற்றோருடன் செல்வதாக தேவி கூறியதால், அவர் பெற்றோருடன் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்தது.

ஆனால் வீட்டுக்குத் திரும்பியதும் சபாபதியுடன் மீண்டும் காதலைத் தொடர்ந்துள்ளார் தேவி. இதை அறிந்த அவரது தாத்தா வீராசாமி (66) தனது பேத்தியை இன்று காலை கழுத்தை அறுத்துக் கொன்றார். பின்னர் சோழத்தரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் இது போல வெவ்வேறு ஜாதிகளைச் சேர்ந்த காதலர்கள் கௌரவக் கொலை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இவற்றின் பின்னால் அரசியல் கட்சிகள் உள்ளதாகவும் சாதி மாறிக் காதலித்தால் கொன்று விடுங்கள் என்று தனது சாதிக்காரர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளதால் இவ்வாறு நடப்பதாகவும் அப்பகுதி மக்கள் சொல்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories