காவிரி பிரச்சினை: விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற ராமதாஸ் கோரிக்கை

சென்னை:
 காவிரி பிரச்னையில் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று பாமகநிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

காவிரி பாசன மாவட்ட உழவர்கள் அனுபவித்து வரும் துன்பத்தையும், துயரத்தையும் உலகில்வேறு எவரேனும் அனுபவிப்பார்களா? என்பது ஐயம் தான். அந்த அளவுக்கு எண்ணற்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அரசின் கண்ணுக்கு தான் அவர்களின் பிரச்சினைகள் தெரியவில்லை.
தமிழகத்தில் தொடர்ந்து நிலவி வரும் வறட்சியால் தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்த ஆண்டும் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி முழு அளவில் நடைபெறவில்லை. சம்பா சாகுபடியாவது செய்யலாம் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் விதை விதைத்து நாற்று நட்டிருந்த நிலையில், வறட்சி உச்சத்திற்கு சென்றிருப்பதால் காவிரி கடைமடை பகுதியில் பயிர்கள் காயத் தொடங்கியிருக்கின்றன. மேட்டூர் அணையில் இருக்கும் தண்ணீரைக் கொண்டு இன்னும் 8 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் விட முடியும் என்ற நிலையில், சம்பாபயிரைக் காப்பாற்ற முடியுமா? என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.
சம்பா சாகுபடிக்கு தேவையான தண்ணீரை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை உழவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் போதிலும், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருக்கும் போதிலும் தமிழகத்திற்கு திறந்து விட கர்நாடக அரசுக்கும் மனது வரவில்லை. சம்பா பயிரைக் காப்பாற்றுவதற்கான கடைசி முயற்சியாக காவிரியில் தண்ணீர் திறந்துவிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க  வலியுறுத்தி  காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை  அறிவித்திருக்கின்றனர். அனைத்து  விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வரும் 3 ஆம் தேதி சனிக்கிழமை தஞ்சாவூரில் உண்ணாநிலை போராட்டம் நடைபெறவுள்ளது. விவசாயிகள் தான் உணவு படைக்கும் கடவுள் என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு என்பதால், இப்போராட்டத்திற்கு பா.ம.க. முழு ஆதரவை தெரிவிக்கிறது.
அதுமட்டுமின்றி, காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை  உடனே அமைக்க வேண்டும், மேகதாது அணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Entertainment News

Popular Categories