தேசிய மக்கள் நீதிமன்றம்: புதுவையில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தொடங்கி வைக்கிறார்

புதுச்சேரி:
புதுச்சேரியில் தேசிய மக்கள் நீதிமன்றத்தை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தொடங்கிவைக்கிறார்.

புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலரும், மாவட்ட நீதிபதியுமான செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி மாநில சட்டப் பணிகள் ஆணைய செயல் தலைவர் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் இன்று (சனிக்கிழமை) தேசிய மக்கள் நீதிமன்றம் புதுச்சேரி கடலூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலும், காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளில் அந்தந்த நீதிமன்றங்களிலும் நடைபெறுகிறது.

இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் சமாதானம் செய்யத்தக்க குற்றவியல் வழக்குகள், காசோலை வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நீதிமன்ற வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், உரிமையியல் சிவில் வழக்குகள், வருவாய்த்துறை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட வழக்குகள், சிவில் மேல்முறையீடு, குற்றவியல் வழக்கு மேல்முறையீடு மற்ற வகையான மேல்முறையீடு வழக்குகள், தொழிலாளர் சம்பந்தப்பட்ட வழக்குகள், ஓய்வூதியநிலுவை சம்பந்தப்பட்ட வழக்குகள் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றம் நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் புதுச்சேரி மாநில சட்டப்பணிகள் ஆணையம் செய்துள்ளது.

ALSO READ:  தேர்தலில் வாக்களிக்க... சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

மேலும் இன்றைய தினம் நடைபெற இருக்கும் தேசிய மக்கள் நீதிமன்ற தொடக்க விழாவில், இந்திய அரசிய லமைப்பு சட்டத்தில் உள்ள அடிப்படை கடமைகள் என்ற தலைப்பில் புதுச்சேரியில் உள்ள அரசு கல்லூரிகள், அரசு மேல்நிலை, உயர்நிலை மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் நடந்த கட்டுரை போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிக்கப்படுகிறது.

மேலும் புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் செய்தி தொகுப்பு வெளியீடு மற்றும் புதுச்சேரியில் மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயம் மற்றும் 4-வது குற்றவியல் நீதிமன்றம், காரைக்கால் குடும்ப நீதிமன்றம் மற்றும் சார்பு நிலை நீதிமன்றங்களில் திறப்பு விழாவும் நடக்கிறது. ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், முதல்-அமைச்சர் ரங்கசாமி, புதுவை மாநில சட்டப் பணிகள் ஆணைய செயல் தலைவரும், சென்னை ஐகோர்ட்டு நீதிபதியுமான ஜெய்சந்திரன், நீதிபதி சசிதரன் ஆகியோர் முன்னிலையில் விழா நடக்கிறது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் நீதிபதி செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories