இளையராஜாவுக்கு பால் முகவர் தொழிலாளர் சங்க தலைவர் கண்டனம்

சென்னை:
சிம்பு பாடல் குறித்து கேள்வி கேட்ட செய்தியாளரிடம் தரக்குறைவாக நடந்துகொண்டதாகக் கூறி, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனர் & மாநிலத் தலைவர் எஸ் ஏ.பொன்னுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில்,

பீப் பாடல் தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜாவிடம் கேள்வி கேட்ட செய்தியாளரைப் பார்த்து என்னிடம் கேள்வி கேட்க என்ன தகுதி இருக்கிறது என தரக்குறைவாக பதில் கேள்வி கேட்ட இளையராஜா அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

இசை மேதை, இசைஞானி என்றெல்லாம் போற்றக்கூடிய நீங்கள் ஒரு பொது தளத்தில், பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது உங்கள் துறை சார்ந்த கேள்வியினை உங்களிடம் கேட்காமல் வேறு எவரிடம் கேட்பார்கள்? ஊரே பற்றி எரியும் போது ஒரு மன்னன் பிடில் வாசித்தாராம். அதைப் போல சிம்பு அனிருத் என்ற இரு அரைவேக்காட்டு ஆசாமிகள் செய்த தவறை சுட்டிக் காட்டி ஒரு கண்டனத்தைக் கூட பதிவு செய்யாத உங்களிடம் அந்த செய்தியாளர் கேள்வி கேட்டதில் என்ன தவறு?

“நாய் விற்ற பணம் குறைக்கவா போகிறது” எனும் அடிப்படையில் பணமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு இந்த சமூகத்தை சீரழித்ததில் உங்களுக்கும் பங்குண்டு என்பதால் தான் அப்படி கோபப்பட்டீர்களோ?

ALSO READ:  இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

இந்த ஜனநாயக இந்தியாவில் கேள்வி கேட்பதற்கு கூட தகுதியை எதிர்பார்க்கும் நீங்கள் அவரை ஒரு சாதாரண மனிதனாகக் கூட பார்க்க மறந்து போனீர்களே அப்போது உங்கள் கண்களை மறைத்தது புகழ் எனும் போதையா? அல்லது பணம் எனும் மாயையா? ஒரு நிமிடம் நீங்கள் கடந்து வந்த பாதையை திரும்பிப் பாருங்கள்.

தரமான பாடல்களை தந்த நீங்கள் தான் தரமற்ற, கேட்கவே காது கூசுகின்ற பாடல்களுக்கும் இசையமைத்து வெற்றிகரமான இசை வியாபாரியாக உலா வந்தீர்கள். அதனால் தான் இன்று சிம்பு, அனிருத் என்ற தருதலைகளுக்கு ஆதரவு தரும் விதமாக அமைதி காக்கிறீர்கள். ஒரு வேளை இன்று கிளம்பும் எதிர்ப்புகள் அப்போதே உங்களுக்கு எதிராகவும் கிளம்பியிருந்தால் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறியிருக்காது.

மக்கள் எப்போதும் நீங்கள் தருவதை அப்படியே அள்ளி மடியில் கட்டிக் கொள்ள மாட்டார்கள். அதனை திருப்பித் தரத் தொடங்கினால் நீங்கள் தாங்க மாட்டீர்கள்.

எனவே தங்களின் தரக்குறைவான அந்த செயலுக்கு பொது மேடையில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பாக வலியுறுத்துகிறோம்.

ALSO READ:  'அருந்தமிழ் 50' நூல் வெளியீடு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

Topics

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories