இளையராஜாவுக்கு பால் முகவர் தொழிலாளர் சங்க தலைவர் கண்டனம்

சென்னை:
சிம்பு பாடல் குறித்து கேள்வி கேட்ட செய்தியாளரிடம் தரக்குறைவாக நடந்துகொண்டதாகக் கூறி, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனர் & மாநிலத் தலைவர் எஸ் ஏ.பொன்னுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில்,

பீப் பாடல் தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜாவிடம் கேள்வி கேட்ட செய்தியாளரைப் பார்த்து என்னிடம் கேள்வி கேட்க என்ன தகுதி இருக்கிறது என தரக்குறைவாக பதில் கேள்வி கேட்ட இளையராஜா அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

இசை மேதை, இசைஞானி என்றெல்லாம் போற்றக்கூடிய நீங்கள் ஒரு பொது தளத்தில், பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது உங்கள் துறை சார்ந்த கேள்வியினை உங்களிடம் கேட்காமல் வேறு எவரிடம் கேட்பார்கள்? ஊரே பற்றி எரியும் போது ஒரு மன்னன் பிடில் வாசித்தாராம். அதைப் போல சிம்பு அனிருத் என்ற இரு அரைவேக்காட்டு ஆசாமிகள் செய்த தவறை சுட்டிக் காட்டி ஒரு கண்டனத்தைக் கூட பதிவு செய்யாத உங்களிடம் அந்த செய்தியாளர் கேள்வி கேட்டதில் என்ன தவறு?

“நாய் விற்ற பணம் குறைக்கவா போகிறது” எனும் அடிப்படையில் பணமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு இந்த சமூகத்தை சீரழித்ததில் உங்களுக்கும் பங்குண்டு என்பதால் தான் அப்படி கோபப்பட்டீர்களோ?

இந்த ஜனநாயக இந்தியாவில் கேள்வி கேட்பதற்கு கூட தகுதியை எதிர்பார்க்கும் நீங்கள் அவரை ஒரு சாதாரண மனிதனாகக் கூட பார்க்க மறந்து போனீர்களே அப்போது உங்கள் கண்களை மறைத்தது புகழ் எனும் போதையா? அல்லது பணம் எனும் மாயையா? ஒரு நிமிடம் நீங்கள் கடந்து வந்த பாதையை திரும்பிப் பாருங்கள்.

தரமான பாடல்களை தந்த நீங்கள் தான் தரமற்ற, கேட்கவே காது கூசுகின்ற பாடல்களுக்கும் இசையமைத்து வெற்றிகரமான இசை வியாபாரியாக உலா வந்தீர்கள். அதனால் தான் இன்று சிம்பு, அனிருத் என்ற தருதலைகளுக்கு ஆதரவு தரும் விதமாக அமைதி காக்கிறீர்கள். ஒரு வேளை இன்று கிளம்பும் எதிர்ப்புகள் அப்போதே உங்களுக்கு எதிராகவும் கிளம்பியிருந்தால் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறியிருக்காது.

மக்கள் எப்போதும் நீங்கள் தருவதை அப்படியே அள்ளி மடியில் கட்டிக் கொள்ள மாட்டார்கள். அதனை திருப்பித் தரத் தொடங்கினால் நீங்கள் தாங்க மாட்டீர்கள்.

எனவே தங்களின் தரக்குறைவான அந்த செயலுக்கு பொது மேடையில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பாக வலியுறுத்துகிறோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories