திமுக., அரசின் ‘நீட்’ நாடகம்: அண்ணாமலை எழுப்பிய ‘நச்’ கேள்விகள்!

annamalai pressmeet - 2026

தமிழக மக்கள் காதில் பூ சுற்ற வேண்டாம் என தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழக பாஜக., மாநில அலுவலகமான கமலாலயத்தில் மாநில தலைவர் கே. அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து திமுக., அரசு அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது குறித்து விளக்கமளித்தார்

நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கோரிய மசோதாவை, ஆளுநர் ரவி, தமிழக சட்டமன்ற அவைத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். இது தொடர்பாக விவாதிக்க நாளை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில், தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நீட் தேர்வு விகாரத்தில் திமுக., இரட்டை வேடம் போடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசில், மத்திய அமைச்சராக இருந்த திமுக.,வின் காந்திசெல்வன்தான் நீட் தேர்வு மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது திமுக., தலைவர் ஸ்டாலின் என்ன செய்தார்?

இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் என்பது அர்த்தமற்றது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் புதிதாக ஏதும் சொல்லுங்கள். தமிழக மக்களை ஏமாற்றி காதில் பூ சுற்ற வேண்டாம்.

நீட் தேர்வால் கிராமப்புற, ஏழை மாணவர்களின் டாக்டர் கனவு பாதிக்கப்படவில்லை. எதன் அடிப்படையில் நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது எனப் பிரசாரம் செய்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், முக்கியமாக சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.

ஏற்கெனவே நீட் விலக்கு மசோதா கடந்த அதிமுக., ஆட்சிக் காலத்தில், ஆளுநர் மூலம் சென்று குடியரசுத் தலைவர் அதைத் திருப்பி அனுப்பியிருக்கிறார். இப்போது மீண்டும் ஒரு மசோதாவை ஆளுநருக்கு அனுப்பினீர்கள். ஆளுநர் தமிழக அரசுக்கு அதை திருப்பி அனுப்பியுள்ளார். அதில், அவர் எழுப்பியுள்ள கேள்விகள் என்ன என்பதை அரசு வெளியிட வேண்டும்.

நாங்கள் கேட்ட வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்கள், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள், மாநில அரசுக் கல்வியில் தனியார் பள்ளி, சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் என வரிசை பிரித்து பட்டியலை வெளியிட வேண்டும்… என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories