திமுக., அரசுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு உள்ளது: ஜி.கே.வாசன்

gk vasan interview at madurai - 2026

மதுரை, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் உத்தரவை மதித்து செயல்பட வேண்டும் அதேபோல் யாருக்கும் சாதகம் இல்லாமல் நடுநிலையாக செயல்பட வேண்டும் -ஜி.கே.வாசன் பேட்டி அளித்தார்.

சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

சட்டமன்றத் தேர்தல் நெருங்குகிறது. எதிர்மறை வாக்கு ஆட்சியாளர்களுக்கு அதிகரித்து வருகிறது. கொடுத்த வாக்கை நிறைவேற்றாத அரசுக்கு எடுத்துக்காட்டாக எல்லா பக்கங்களிலும் பல்வேறு துறையை சார்ந்தவர்கள் நியாயமான கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அரசு அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மழுப்பிக் கொண்டிருக்கிறது.

இதுதான் உண்மை நிலை இன்னும் இருக்கின்ற இரண்டு மாதங்களிலே வாக்குறுதிகளை இந்த அரசு நிறைவேற்ற முடியாது என்று வாக்காளர்களுக்கு நன்று தெரியும். எனவே தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக இருக்கிறது. மேலும் கட்சிகள் சேரக்கூடிய நல்ல வாய்ப்பு வரும் நாட்களில் உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

விஜய் கட்சியில் இன்னும் அதிமுகவை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் வருவார்கள் என்று செங்கோட்டையன் கூறியது குறித்த கேள்விக்கு:

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமையில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்றால், மத்தியில் பாஜக, மாநிலத்தில் அதிமுக தலைமை என்பதுதான் அதிகாரப்பூர்வமான செயல்பாடு.

நேற்று முன்தினம் ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு:

தமாகவை பொறுத்த வரை இதற்கு நிரந்தர தீர்வு வரவேண்டும். மீனவர்கள் அச்சமின்றி கடலுக்குள் செல்ல வேண்டும் அப்போதுதான் அவர்கள் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய முடியும் என, பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். மத்திய, மாநில அரசுகள் இணைந்து பேசி முடிவு கண்டெடுக்க வேண்டும். குறிப்பாக இலங்கை அரசுக்கு நம்முடைய வெளியுறவுத்துறை மூலம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

இலங்கை கடற்படை கண்மூடித்தனமாக நடந்து கொள்கிறது. அதனை கண்டிக்கும் வகையில் இந்திய செயல்பாடுகள் இருக்க வேண்டும். இலங்கை அரசு உண்மை நிலைக்கேற்றவாறு அவர்களுக்கு கோட்பாடுகள் கொடுக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற கண்மூடித்தனமாக செயல்பட மாட்டார்கள். இலங்கை கடல் கொள்ளையர்களையும் கட்டுப்படுத்தும் வகையில் இரண்டு நாடுகளின் கடற்படை தங்களுடைய பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

ALSO READ:  ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான கேள்விக்கு:

நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும். இந்த நாடு சட்டத்திற்கு உட்பட்ட நாடு என்பதை குறிப்பிட விரும்புகிறேன். அனைவருக்கும் நல்லது நடக்க வேண்டும். அனைவரும் ஒற்றுமையோடு இருக்க வேண்டும் என்பதுதான் முதல் மாநில காங்கிரஸ் கட்சியின் விருப்பம் என, கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories