February 21, 2026, 11:36 PM
26.7 C
Chennai

அமித்ஷாவுக்கு கனிமொழி வைத்த ஐஸ்; கழகத்தில் பற்றிய தீ.!

KANIMOZI MP - 2026

தூத்துக்குடியில் குறிப்பிட்ட ஒரு கிராம மீனவர்கள் ஊர் திரும்பி விட்டனர் எனக் குறிப்பிட்டு, அதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இப்போதும் 60க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை வந்து சேராத சூழலில் இப்படி நன்றி பாராட்டுவது தேவையா என்று தி.மு.க மேல்மட்டத்தில் கேள்வி எழுந்துள்ளது.

கடந்த வாரம் தமிழ்நாடு, கேரளா பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் அரபிக் கடலில் ஆழ்கடல் பகுதியில் தங்கி மீன் பிடிப்பில் ஈட்டுப்பட்டிருந்தனர்.

அப்போது, அரபிக் கடலில் கியார் புயல் உருவான காரணத்தினால், பலத்த சூரைக் காற்று வீசியுள்ளது.

சூரைக்காற்றிலிருந்து சிக்காமல் தப்பிக்க, வெவ்வேறு இடங்களை நோக்கி மீனவர்கள் தங்களது படகைச் செலுத்தியுள்ளனர்.

Ameethsha - 2026

கேரளா, மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மீனவர்கள் கோவா, கொச்சி உள்ளிட்ட துறைமுகங்களில் கரை ஒதுங்கினர்.

அதே நேரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட மீனவர்களைக் காணவில்லை என்ற செய்தியே அப்போது வெளியாகியது.

இந்நிலையில், 3 படகுகளில் 30 மீனவர்கள் கரை ஒதுங்கியதாக நேற்று தமிழக அரசு தெரிவித்தது.

மேலும், 60 மீனவர்கள் மட்டுமே காணவில்லை எனக் கூறப்படுகிறது.

அதே நேரத்தில், மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் சுமார் 200 மீனவர்களை இப்போதும் காணவில்லை என மத்திய, மாநில அரசுகள் மீது குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ட்விட்டர் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில், ‘தூத்துக்குடி மாவட்டம் தருவாய்குளத்தை சேர்ந்த மீனவர்கள் அனைவரும் பத்திரமாக ஊர் திரும்பிவிட்டனர்.

இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மீட்புப்பணியில் ஈட்டுப்பட்ட கடற்படை, மாவட்ட ஆட்சியர் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நன்றி’ எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து திமுக வட்டாரங்கள் மத்தியில் காரசார விவாதம் எழுந்துள்ளது.

சமீப காலமாக திமுக மேலிட நடவடிக்கைகள் உதயநிதியை உயர்த்துவதற்காக, கனிமொழி திட்டமிட்டு ஓரங்கட்டப்படுவதாக அவரது ஆதரவாளர்கள் புலம்பிவருகின்றனா்.

இந்நிலையில் திமுகவின் அரசியலில் பரம எதிரியான பா.ஜ.க வின் தேசிய தலைவர்அமித்ஷாவுக்கு நன்றி பாராட்டி கனிமொழி பதிவிட்டிருப்பது, அக்கட்சிக்குள் கடும் புகைச்சலை உருவாக்கியுள்ளது.

அக்கட்சியின் கனிமொழி ஆதரவான நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

Topics

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Entertainment News

Popular Categories