செல்பி மோகத்தால் கட்டிக்க போற பெண்ணை பறி கொடுத்த இளைஞர்;

selfe death - 2026

உலகெங்கும் செல்பி மோகத்தால் பல ஆபத்தான விளைவுகள் ஏற்பட்டு வருவது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்தும் கேட்டும் வருகிறோம்.

குறிப்பாக உயிருக்கு ஆபத்தான இடங்களில் செல்பி எடுக்கும்போது உயிரிழப்புகள் ஏற்படும் சோகமான சம்பவங்களும் நடந்து வருகின்றன

இந்த நிலையில் சென்னை அருகே ஒரு பாழடைந்த கிணறு அருகில் செல்பி எடுக்க முயன்ற ஒரு ஜோடி அந்தக் கிணற்றில் விழுந்த சம்பவத்தில் இளம்பெண் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்

dead bady - 2026

சென்னை பட்டாபிராமன் பகுதியைச் சேர்ந்த அப்பு என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மெர்சி என்ற இளம் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இவர்கள் இருவருக்கும் வரும் ஜனவரி மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்னை வண்டலூர் பகுதிக்கு சென்றுள்ளனர்.

அப்போது ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி அந்த பகுதியில் இருந்த கிணறு ஒன்றில் அமர்ந்து செல்பி எடுக்க முயன்றனர்

அப்போது எதிர்பாராதவிதமாக அப்பு கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.

அவரை பிடிக்க முயன்ற மெர்சியும் கிணற்றுக்குள் விழுந்தார்.

இருவரது அலறல் சத்தத்தை கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக கிணற்றில் தத்தளித்து கொண்டிருந்த இருவரையும் காப்பாற்ற முயற்சித்தனர்.

ஆனால் பொதுமக்களால் அப்புவை மட்டுமே காப்பாற்ற முடிந்தது.

மெர்சி தண்ணீருக்குள் மூழ்கி மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் உயிரிழந்த மெர்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்

செல்பி மோகத்தால் பரிதாபமாக திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் ஒருவரின் உயிர் போனது அந்த பகுதியில் உள்ளவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

செல்பி எடுப்பவர்கள் தகுந்த பாதுகாப்புடன் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து அறிவித்து வந்தும், இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது மிகவும் வருந்ததக்க நிகழ்வாக இருந்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories