பயணிகள் ரயில் விரைவில் இயக்கப்படும் : தெற்கு ரயில்வே பொது மேலாளர் அறிவிப்பு!

train
train

கொரோனா தொற்று குறைந்து வருவதால் பயணிகள் ரயில் விரைவில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் கொரோனா நோய்த் தொற்று வேகமாக பரவிய நிலையில் இந்தியாவில் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக சிறப்பு ரயில்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன.

தற்போது சிறப்பு ரயில்கள் என விரைவு ரயில்கள் மாநிலங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வரும் நிலையில் உள்ளூர் பயணிகளுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் பயணிகள் ரயில்கள் தற்போதும் இயக்கப்படாமல் உள்ளன.

nilgiri-train
nilgiri-train

சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களில் புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து கடும் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மாநிலங்களில் பொதுமக்கள் பெரிதும் பயன்படுத்தும் நகரங்களுக்கு இடையிலான பயணிகள் ரயில் போக்குவரத்து இன்னமும் தொடங்கப்படவில்லை என்பதை ஊடகங்கள் வாயிலாகவும் பலரும் தெரிவித்து வந்தனர்.

தற்போது கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வரும் சூழ்நிலையில் பொதுமக்கள் பயணிகள் ரயில் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.

பெரும்பாலும் பேருந்து சேவையை மட்டுமே நம்பியிருப்பதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர் எனவே பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பயணிகள் ரயில் விரைவில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் தெரிவித்துள்ளார்

கொரோனா தொற்று தற்போது குறைந்து வருவதால் பயணிகள் ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தெரிவித்துள்ளதாக பத்திரிகை தகவல் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது

இதனால், தமிழகத்தில், சென்னை – திருச்சி, சென்னை – புதுச்சேரி, திருச்சி – நெல்லை, மதுரை – செங்கோட்டை, திருச்சி – தஞ்சை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் மீண்டும் பயணிகள் ரயில்கள் விரைவில் இயக்கப் படும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories