ஜூன் 7… இன்று உலக உணவுப் பாதுகாப்பு தினம்!

Published:

food safety day
food safety day

7 ஜூன் இன்று உலக உணவுப் பாதுகாப்பு தினம் (WFSD) கொண்டாடப்படுகிறது.

உணவுப் பாதுகாப்பு, தனி மனித சுகாதாரம்,  வேளாண்மை,  சந்தை, உணவுப் பாதிப்புகளைக் கண்டறிந்து தடுப்பது போன்றவை குறித்து மக்களின் கவனத்தை ஈர்க்கவும் நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

ஐநா சபை 2018 ஜூன் மாதம் கூடி, அனைத்து வயதினரையும், குறிப்பாக குழந்தைகளையும், குறைந்த வருமானம் கொண்ட நாட்டு மக்களையும் பாதிக்கும் நோய்களின் உலகளாவிய சுமையை உணர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 7ம் தேதி உலக உணவு பாதுகாப்பு தினம் கொண்டாடவேண்டும் என்று அறிவித்தது.  2019 லிருந்து இந்த தினம் கொண்டாடப் படுகிறது. 2020 ஆம் ஆண்டில், உலக சுகாதார சபை உணவுப் பாதுகாப்பிற்கான உலகளாவிய முயற்சிகளை வலுப்படுத்தகூடிய தீர்மானத்தை நிறைவேற்றியது. 

உலக சுகாதார அமைப்பு  மற்றும் ஐநா சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) உறுப்பு நாடுகள் மற்றும் பிற தொடர்புடைய அமைப்புகளுடன் இணைந்து உலக உணவு பாதுகாப்பு தினத்தை கடைபிடிக்க உதவுகிறது. உலகளவில் உணவு மூலம் பரவும் நோய்களின் சுமையை குறைப்பதற்கு பாடுபடுகிறது.

‘நாளைய ஆரோக்கியத்திற்காக இன்றைய பாதுகாப்பான உணவு’ என்பது 2021ம் ஆண்டிற்கான உலக உணவுப் பாதுகாப்பு தினக் கருப்பொருள்.

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?

பாதுகாப்பான உணவின் உற்பத்தி மற்றும் நுகர்வு, நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவுகிறது என்பதை இந்த தினம் வலியுறுத்துகிறது.  மக்கள், விலங்குகள், தாவரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றுக்கு இடையிலான முறையான தொடர்புகளை அங்கீகரிப்பது எதிர்கால தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் என்பது இதன் நோக்கம்.

உணவுப் பாதுகாப்பு என்பது அரசாங்கம், உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர் ஆகிய அனைவருக்குமான கூட்டுப் பொறுப்பு.  நாம் உட்கொள்ளும் உணவின் பாதுகாப்பையும் உண்பவரின் ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்தும் கடமையில் வேளாண் பண்ணை முதல் உணவு மேசை வரை அனைவருக்கும் பங்கு உண்டு. 

எத்தனையோ சிறப்பு தினங்களைக் கொண்டாடுகிறோம். ஆனால் இந்தக் கொரோனா காலத்திற்கு மிக ஏற்ற தினம் உணவுப் பாதுகாப்பு தினம். 

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img