ஜூன் 7… இன்று உலக உணவுப் பாதுகாப்பு தினம்!

food safety day
food safety day

7 ஜூன் இன்று உலக உணவுப் பாதுகாப்பு தினம் (WFSD) கொண்டாடப்படுகிறது.

உணவுப் பாதுகாப்பு, தனி மனித சுகாதாரம்,  வேளாண்மை,  சந்தை, உணவுப் பாதிப்புகளைக் கண்டறிந்து தடுப்பது போன்றவை குறித்து மக்களின் கவனத்தை ஈர்க்கவும் நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

ஐநா சபை 2018 ஜூன் மாதம் கூடி, அனைத்து வயதினரையும், குறிப்பாக குழந்தைகளையும், குறைந்த வருமானம் கொண்ட நாட்டு மக்களையும் பாதிக்கும் நோய்களின் உலகளாவிய சுமையை உணர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 7ம் தேதி உலக உணவு பாதுகாப்பு தினம் கொண்டாடவேண்டும் என்று அறிவித்தது.  2019 லிருந்து இந்த தினம் கொண்டாடப் படுகிறது. 2020 ஆம் ஆண்டில், உலக சுகாதார சபை உணவுப் பாதுகாப்பிற்கான உலகளாவிய முயற்சிகளை வலுப்படுத்தகூடிய தீர்மானத்தை நிறைவேற்றியது. 

உலக சுகாதார அமைப்பு  மற்றும் ஐநா சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) உறுப்பு நாடுகள் மற்றும் பிற தொடர்புடைய அமைப்புகளுடன் இணைந்து உலக உணவு பாதுகாப்பு தினத்தை கடைபிடிக்க உதவுகிறது. உலகளவில் உணவு மூலம் பரவும் நோய்களின் சுமையை குறைப்பதற்கு பாடுபடுகிறது.

‘நாளைய ஆரோக்கியத்திற்காக இன்றைய பாதுகாப்பான உணவு’ என்பது 2021ம் ஆண்டிற்கான உலக உணவுப் பாதுகாப்பு தினக் கருப்பொருள்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

பாதுகாப்பான உணவின் உற்பத்தி மற்றும் நுகர்வு, நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவுகிறது என்பதை இந்த தினம் வலியுறுத்துகிறது.  மக்கள், விலங்குகள், தாவரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றுக்கு இடையிலான முறையான தொடர்புகளை அங்கீகரிப்பது எதிர்கால தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் என்பது இதன் நோக்கம்.

உணவுப் பாதுகாப்பு என்பது அரசாங்கம், உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர் ஆகிய அனைவருக்குமான கூட்டுப் பொறுப்பு.  நாம் உட்கொள்ளும் உணவின் பாதுகாப்பையும் உண்பவரின் ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்தும் கடமையில் வேளாண் பண்ணை முதல் உணவு மேசை வரை அனைவருக்கும் பங்கு உண்டு. 

எத்தனையோ சிறப்பு தினங்களைக் கொண்டாடுகிறோம். ஆனால் இந்தக் கொரோனா காலத்திற்கு மிக ஏற்ற தினம் உணவுப் பாதுகாப்பு தினம். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories