December 6, 2025, 6:05 PM
26.8 C
Chennai

பழம்பெரும் ஐராவதீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த மக்கள் கோரிக்கை!

Iravathiswarar Temple 2
Iravathiswarar Temple 2

ஐராவதீஸ்வரர் கோவிலினை புதுப்பித்து குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் ராஜேந்திரசோழனால் கட்டப்பட்டது ஆகும். இந்த கோவிலில் சிவன் சன்னதி, தெய்வநாயகி அம்பாள், சரபேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், குபேரலிங்கம், துர்க்கை போன்ற சன்னதிகள் இருக்கின்றது.

Iravathiswarar Temple 1
Iravathiswarar Temple 1

மேலும் 4 பிரகாரங்கள், அம்மன் சன்னதி, நந்திமண்டபம் 1008 சிற்பங்கள் மற்றும் கோவில் வளாகம் முழுவதும் கலைநுணுக்க வேலைபாடுகளுடன் கொண்ட சிலைகள் இருக்கின்றது.

இங்கு தினசரி வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இவ்வாறு வருபவர்கள் கோவிலில் உள்ள கலைத்திறன்களை ரசித்து பார்ப்பார்கள்.

இந்த கோவிலை தொல்லியல்துறையினர் பராமரித்து வருகின்றனர். கடந்த 2004-ஆம் வருடம் இந்த கோவிலில் குடமுழுக்கு நடைபெற்றது. இது நடைபெற்று 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

Iravathiswarar Temple 1
Iravathiswarar Temple 1

ஆனால் பொதுவாக கோவில்களில் 12 ஆண்டுக்கு ஒருமுறை குடமுழுக்கு செய்வது ஆகம விதி ஆகும். எனினும் 17 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் குடமுழுக்கு நடத்தப்படாமல் இருக்கிறது.

ஆகவே தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலை புதுப்பித்து குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இறைவழிபாடு மன்ற செயலாளர் பாலசுப்பிரமணியன் கூறியபோது “தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்று 17 ஆண்டுகள் ஆகிறது. இதனால் தற்போது கோவிலை புதுப்பித்து குடமுழுக்கு நடத்த வேண்டும். இதற்கு முன்பு மத்திய அரசின் அனுமதியுடன் இந்த கோவிலுக்கு என ஆகம முறைப்படி செய்யப்பட்ட சிலைகள் பாதுகாப்பிற்காக தஞ்சை சரஸ்வதி மகால் அருங்காட்சியகத்தில் உள்ளது.

Iravathiswarar Temple 3 1
Iravathiswarar Temple 3 1

மேலும் மத்திய அரசால் பாதுகாப்பிற்காக எடுத்துச் சென்ற ஆகம கற்சிலைகள் எல்லாம் மிகவும் சேதம் அடைந்துள்ளது. அந்த சிலைகள் எல்லாம் வழிபாட்டிற்கு சரியானது இல்லை. இதனால் அந்த சிலைகளை புதுப்பித்து திரும்பவும் இந்த கோவிலுக்கு கொண்டு வரவேண்டும்.

இந்த கோவிலின் முன் நர்த்தன விநாயகர் சிலை சேதம் அடைந்ததால் அது கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. எனவே ஆகம முறையின்படி விநாயகர் சிலை புதுப்பித்து வைக்க வேண்டும். இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories