பழம்பெரும் ஐராவதீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த மக்கள் கோரிக்கை!

Iravathiswarar Temple 2
Iravathiswarar Temple 2

ஐராவதீஸ்வரர் கோவிலினை புதுப்பித்து குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் ராஜேந்திரசோழனால் கட்டப்பட்டது ஆகும். இந்த கோவிலில் சிவன் சன்னதி, தெய்வநாயகி அம்பாள், சரபேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், குபேரலிங்கம், துர்க்கை போன்ற சன்னதிகள் இருக்கின்றது.

Iravathiswarar Temple 1
Iravathiswarar Temple 1

மேலும் 4 பிரகாரங்கள், அம்மன் சன்னதி, நந்திமண்டபம் 1008 சிற்பங்கள் மற்றும் கோவில் வளாகம் முழுவதும் கலைநுணுக்க வேலைபாடுகளுடன் கொண்ட சிலைகள் இருக்கின்றது.

இங்கு தினசரி வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இவ்வாறு வருபவர்கள் கோவிலில் உள்ள கலைத்திறன்களை ரசித்து பார்ப்பார்கள்.

இந்த கோவிலை தொல்லியல்துறையினர் பராமரித்து வருகின்றனர். கடந்த 2004-ஆம் வருடம் இந்த கோவிலில் குடமுழுக்கு நடைபெற்றது. இது நடைபெற்று 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

Iravathiswarar Temple 1
Iravathiswarar Temple 1

ஆனால் பொதுவாக கோவில்களில் 12 ஆண்டுக்கு ஒருமுறை குடமுழுக்கு செய்வது ஆகம விதி ஆகும். எனினும் 17 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் குடமுழுக்கு நடத்தப்படாமல் இருக்கிறது.

ஆகவே தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலை புதுப்பித்து குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இறைவழிபாடு மன்ற செயலாளர் பாலசுப்பிரமணியன் கூறியபோது “தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்று 17 ஆண்டுகள் ஆகிறது. இதனால் தற்போது கோவிலை புதுப்பித்து குடமுழுக்கு நடத்த வேண்டும். இதற்கு முன்பு மத்திய அரசின் அனுமதியுடன் இந்த கோவிலுக்கு என ஆகம முறைப்படி செய்யப்பட்ட சிலைகள் பாதுகாப்பிற்காக தஞ்சை சரஸ்வதி மகால் அருங்காட்சியகத்தில் உள்ளது.

Iravathiswarar Temple 3 1
Iravathiswarar Temple 3 1

மேலும் மத்திய அரசால் பாதுகாப்பிற்காக எடுத்துச் சென்ற ஆகம கற்சிலைகள் எல்லாம் மிகவும் சேதம் அடைந்துள்ளது. அந்த சிலைகள் எல்லாம் வழிபாட்டிற்கு சரியானது இல்லை. இதனால் அந்த சிலைகளை புதுப்பித்து திரும்பவும் இந்த கோவிலுக்கு கொண்டு வரவேண்டும்.

இந்த கோவிலின் முன் நர்த்தன விநாயகர் சிலை சேதம் அடைந்ததால் அது கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. எனவே ஆகம முறையின்படி விநாயகர் சிலை புதுப்பித்து வைக்க வேண்டும். இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories