பழம்பெரும் ஐராவதீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த மக்கள் கோரிக்கை!

Iravathiswarar Temple 2
Iravathiswarar Temple 2

ஐராவதீஸ்வரர் கோவிலினை புதுப்பித்து குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் ராஜேந்திரசோழனால் கட்டப்பட்டது ஆகும். இந்த கோவிலில் சிவன் சன்னதி, தெய்வநாயகி அம்பாள், சரபேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், குபேரலிங்கம், துர்க்கை போன்ற சன்னதிகள் இருக்கின்றது.

Iravathiswarar Temple 1
Iravathiswarar Temple 1

மேலும் 4 பிரகாரங்கள், அம்மன் சன்னதி, நந்திமண்டபம் 1008 சிற்பங்கள் மற்றும் கோவில் வளாகம் முழுவதும் கலைநுணுக்க வேலைபாடுகளுடன் கொண்ட சிலைகள் இருக்கின்றது.

இங்கு தினசரி வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இவ்வாறு வருபவர்கள் கோவிலில் உள்ள கலைத்திறன்களை ரசித்து பார்ப்பார்கள்.

இந்த கோவிலை தொல்லியல்துறையினர் பராமரித்து வருகின்றனர். கடந்த 2004-ஆம் வருடம் இந்த கோவிலில் குடமுழுக்கு நடைபெற்றது. இது நடைபெற்று 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

Iravathiswarar Temple 1
Iravathiswarar Temple 1

ஆனால் பொதுவாக கோவில்களில் 12 ஆண்டுக்கு ஒருமுறை குடமுழுக்கு செய்வது ஆகம விதி ஆகும். எனினும் 17 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் குடமுழுக்கு நடத்தப்படாமல் இருக்கிறது.

ஆகவே தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலை புதுப்பித்து குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இறைவழிபாடு மன்ற செயலாளர் பாலசுப்பிரமணியன் கூறியபோது “தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்று 17 ஆண்டுகள் ஆகிறது. இதனால் தற்போது கோவிலை புதுப்பித்து குடமுழுக்கு நடத்த வேண்டும். இதற்கு முன்பு மத்திய அரசின் அனுமதியுடன் இந்த கோவிலுக்கு என ஆகம முறைப்படி செய்யப்பட்ட சிலைகள் பாதுகாப்பிற்காக தஞ்சை சரஸ்வதி மகால் அருங்காட்சியகத்தில் உள்ளது.

Iravathiswarar Temple 3 1
Iravathiswarar Temple 3 1

மேலும் மத்திய அரசால் பாதுகாப்பிற்காக எடுத்துச் சென்ற ஆகம கற்சிலைகள் எல்லாம் மிகவும் சேதம் அடைந்துள்ளது. அந்த சிலைகள் எல்லாம் வழிபாட்டிற்கு சரியானது இல்லை. இதனால் அந்த சிலைகளை புதுப்பித்து திரும்பவும் இந்த கோவிலுக்கு கொண்டு வரவேண்டும்.

இந்த கோவிலின் முன் நர்த்தன விநாயகர் சிலை சேதம் அடைந்ததால் அது கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. எனவே ஆகம முறையின்படி விநாயகர் சிலை புதுப்பித்து வைக்க வேண்டும். இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

Entertainment News

Popular Categories