மக்கள் விரும்பும் அம்சங்களுடன் ட்ரியோ ஆட்டோ! ஸ்ரீதர் வேம்பு ட்விட்!

auto - 2026

இன்றைய சூழலில் நாடு முழுவதும் மின் வாகனப்பயன்பாட்டிற்கு மாறிவரும் நிலையில், அதற்கேற்றால் பல வடிவங்களில் வாகனங்களை பல்வேறு நிறுவனங்கள் தயாரித்துவருகின்றனர்.

கார், இருசக்கர வாகனம் என்ற வரிசையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக மகேந்திர நிறுவனம் ட்ரியோ என்ற மின்சார ஆட்டோவை அறிமுகம் செய்தது.

லித்தியம் அயர்ன் பாட்டரி உதவியுடன் மின்சக்தியில் இயங்கும் இந்த ட்ரியோ வகை ஆட்டோ, பொருளாதார ரீதியாகவும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்ற நீடித்த தன்மைக் கொண்டதாக உள்ளதால் மக்கள் அதிகளவில் இந்த ஆட்டோவை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர் எனக்கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் ‘சிறந்த தொழிலதிபரும், கோடீஸ்வரனுமான ஸ்ரீதர் வேம்பு தனது டிவிட்டர் பக்கத்தில், ட்ரியோ ஆட்டோ குறித்த தகவல்களை பதிவிட்டுள்ளார்.

அதில், தற்போது மகேந்திரா நிறுவனம் தீவிர மேம்படுத்தப்பட்ட ட்ரியோ ஆட்டோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது எனவும், மணிக்கு 55 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்ட இந்த மின்சார ஆட்டோவை முழுவதுமாக சார்ஜ் செய்தால் 125 கிமீ வரை பயணம் செய்யமுடியும்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

மேலும் அனைவருக்கும் சிறந்த பயணத்தை வழங்குவதால் இந்த ஆட்டோவை நான் ஓட்ட விரும்புகிறேன் எனவும் ஆனால் என்னிடம் சில பரிந்துரைகள் உள்ளதாகவும் ஒரு பதிவிட்டுள்ளார்.

இதன்படி, மற்றொரு டிவிட்டர் பதிவில், இந்த எலக்ட்ரிக் ஆட்டோ பார்ம் பேக்டர் மற்றும் மலிவு விலையில் அதவாது ரூ. 3.5 லட்சத்திற்கு கிடைக்கின்றது.

மேலும் குடும்பத்தினர் அனைவரும் பயணிக்கும் வகையில் இதன் வடிவமைப்பு மாற்றும் போதும், குறைவான விலைக்கு கிடைக்கும் போது மக்களிடம் இன்னமும் அதிக வரவேற்பு கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதோடு நான் பல்வேறு கிராமப்பகுதி சாலைகளில் ஆட்டோவை ஓட்டிச்செல்லும் போது இது எங்கே கிடைக்கும் என மக்கள் என்னிடம் கேட்கிறார்கள்.

எனவே குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் என அனைவரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு எலக்ட்ரிக் ஆட்டோவில் பல விதமான வடிவமைப்புகளையும், வண்ணங்களையும் வழங்க வேண்டும் என மகேந்திரா நிறுவனத்திற்கு பரிந்துரைத்துள்ளார்.

மேலும் இந்த குறைந்த விலை வாகனத்தைப் பிரபலப்படுத்த சிறந்த சந்தைப்படுத்துதல் பிரச்சாரத்துடன் மக்களை அணுகினால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் என ஸ்ரீதர் வேம்பு தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நானும் இந்த வாகனத்தை ஓட்ட விரும்புகிறேன் எனவும் கூறியுள்ளார்.

ALSO READ:  தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

குறிப்பாக தனித்தன்மையான ஸ்டைல், சிறந்த செயல்திறன் கொண்ட ட்ரியோ ஆட்டோ மூலம் ஆண்டுக்கு ரூ. 45 ஆயிரம் வரை சேமிக்க முடியும். இதில் D+3, D+4, D+5 இருக்கை வசதிகள் உள்ளது. இதில் லித்தியம் அயர்ன் பாட்டரி 1.5 லட்சம் கிமீ வரை ஓடும் ஆற்றல் கொண்டது. ஆட்டோக்களில் பெரிய வீல்பேஸ் இருப்பதால், விசாலமான கேபின் கொண்டதாக இந்த ஆட்டோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுப்போன்று பல்வேறு மக்களுக்குத்தேவையான அனைத்து அம்சங்களும் இதில் இடம் பெற்றுள்ளது.

இவரின் இந்தப்பதிவைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கருத்துக்களைப்பதிவிட்டுவருவதோடு, மறு பதிவிட்டும் வருகின்றனர்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories