March 25, 2025, 2:16 PM
32.4 C
Chennai

ஒன்பிளஸ் பேண்ட்: விலை குறைய வாட்ச் பண்றீங்கனா.. இப்போ கேட்ச் பண்ணுங்க..!

ஒன்பிளஸ் பேண்ட் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிறுவனத்தின் முதல் அணியக்கூடிய சாதனத்தை அறிமுகம் செய்தது.

ஃபிட்னஸ் பேண்ட் தற்போது ரூ.1000 தள்ளுபடி என்ற விலையில் கிடைக்கிறது. ஒன்பிளஸ் பேண்ட் அமோலெட் பேனல், எஸ்பிஓ2 சென்சார் மற்றும் பல விளையாட்டு முறைகள் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஒன்பிளஸ் பேண்ட் ரூ.2499 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சாதனத்தை தற்போது அமேசான் மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் ரூ.1499 என்ற விலையில் வாங்கலாம். இது ஒற்றை கருப்பு வண்ண விருப்பத்தில் வருகிறது.

ஒன்பிளஸ் பேண்ட் நீக்கக்கூடிய டிராக்கர் வசதியுடன் வருகிறது. இதன் பட்டை இரட்டை வண்ண வரம்பில் வருகிறது. இந்த சாதனம் 1.1 இன்ச் அளவுடன் முழு டச் மாதிரி டிஸ்ப்ளே உடன் வருகிறது.

இது 126×294 பிக்சல்கள் தெளிவுத்திறனை கொண்டுள்ளது. ஃபிட்னஸ் டிராக்கர், வெளிப்புற ரன்னிங், உட்புற ரன்னிங், கொழுப்பு எரிக்கும் ஓட்டம், வெளிப்புற சைக்கிளிங், உட்புற சைக்கிளிங், கிரிக்கெட், பேட்மின்டன், ஸ்விம்மிங் பூல், யோகா உள்ளிட்ட பல பயிற்சி ஆதரவுகளை கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் ஹெல்த் பயன்பாட்டில் இருந்து அணுகக் கூடிய முன் பொருத்தப்பட்ட வாட்ச் முகங்களுடன் வருகிறது. பேட்டரியை பொறுத்தவரை, 100 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது.

இந்த சாதனத்தை ஒரு முறை சார்ஜ் செய்தால் 14 நாட்கள் வரை இதன் ஆயுள் நீடிக்கும் என கூறப்படுகிறது. ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய் சாதனங்கள் இரண்டிலும் இது இணக்கமானது.

இந்த சாதனம் செய்தி அறிவிப்புகள், உள்வரும் அழைப்பு விழிப்பூட்டல்கள் மற்றும் இசை கட்டுப்பாடுகள், வானிலை முன்னறிவிப்புகள் உள்ளிட்ட பலவற்றை எச்சரிக்கிறது.

அதேபோல் எஸ்பிஓ2 கண்காணிப்பு, தூக்க கண்காணிப்பு, ப்ளூடூத் வி5.0 இணைப்பு, தூசி மற்றும் வாட்டர் ரெசிஸ்டென்ட் ஐபி68 மதிப்பீடு ஆதரவோடு வருகிறது. இதன் எடை 22.6 கிராம் கொண்டிருக்கிறது.

ஒன்பிளஸ் பேண்ட் அனைத்து பயனுள்ள அம்சங்களுடன் வருகிறது. அதோடு இது சிறந்த பேட்டரி ஆயுளை வழங்குகிறது. இந்த பிட்னஸ் டிராக்கர் ரூ.1499 என்ற விலையில் வருகிறது.

எஸ்பிஓ2 சென்சார், பல விளையாட்டு முறைகள் உள்ளிட்ட பல அம்சங்களை பெறுகிறது. உங்கள் மணிக்கட்டில் பொருத்தப்பட்டிருக்கும் பேண்ட் மூலம் நீங்கள் நேரடியாக அழைப்புகளை நிராகரிக்க ஒன்பிளஸ் பேண்ட் அனுமதிக்கிறது.

மலிவு விலையில் ஃபிட்னஸ் பேண்ட் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான வாய்ப்பாகும்.

ஒன்பிளஸ் நிறுவனம் இருட்டில் ஒளிரும் நியான் பேக் பேனலுடன் கூடிய புதிய நோர்ட் 2 பேக் மேன் எடிஷன் ஸ்மார்ட்போனை சமீபத்தில் அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அமேசான் மற்றும் ஒன்பிளஸ் இணையதளங்களில் வாங்க கிடைக்கிறது.

அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட்போன் நோர்ட் 2 ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இப்போது அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஸ்மார்ட்போனில் PAC-MAN கேமால் ஈர்க்கப்பட்ட ஒரு கஸ்டம் தீம், UI அனிமேஷன்கள் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக இந்த சாதனத்தில் ப்ரீ-டூ-பிளே Pac-MAN 256 கேமும் ப்ரீ-இன்ஸ்டால்டு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர ஒன்பிளஸ் நோர்ட் 2 பேக் மேன் ஸ்பெஷல் எடிஷன் மாடலின் பின்புறம் PAC-MAN லோகோ மற்றும் கேமில் பேக்-மேன் என்கிற கதாபாத்திரம் உட்கொள்ளும் சிறிய புள்ளிகளையும் காண முடிகிறது. அதேபோல் இந்த சாதனத்தின் பேக் பேனல் இருட்டில் ஒளிரவும் செய்கிறது.

ஒன்பிளஸ் நோர்ட் 2 பேக் மேன் ஸ்பெஷல் எடிஷன் ஆனது 6.4-இன்ச் எஃப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

மேலும் எச்டிஆர் பிளஸ் ஆதரவு, 90Hz ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

அதாவது சில ஒப்போ, ரியல்மி ஸ்மார்ட்போன்களில் கூட இதே சிப்செட் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஐ அடிப்படையாகக் கொண்ட ஆக்ஸிஜன்ஓஎஸ் 11.3 (topped with ColorOS) கொண்டு இயங்குகிறது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

IPL 2025: ஆச்சரியப்படுத்திய அதிரடி; ஆசுதோஷ் சர்மா விளாசலில் டெல்லி த்ரில் வெற்றி

ஐ.பி.எல் 2025 - – லக்னோ vs டெல்லி கேபிடல்ஸ் – விசாகப்பட்டினம் – 24.03.2025

பஞ்சாங்கம் மார்ச் 25 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

குஜராத் சம்பவம் பின்னணி குறித்து மனம் திறந்த பிரதமர் மோடி!

பாரதம் முழுக்கவும் பெரும்புயல் வீசியது… வாழ்வா சாவா பிரச்சனை.  அடுத்து 2000ஆம் ஆண்டிலே தில்லியின் செங்கோட்டையில் தீவிரவாதத் தாக்குதல். 

பாரதத்துடன் சம கால கலாசாரச் செழுமை கொண்ட சீனாவுடன் நல்ல தொடர்பில் இருப்போம்: பிரதமர் மோடி!

பாரதத்தினுடையதாக இருந்தது.  மேலும் நான் ஏற்றுக் கொள்கிறேன், இத்தனை… சக்தியுடைய… தொடர்புகள் இருந்தன, இத்தனை ஆழமான கலாச்சாரத் தொடர்புகள் இருந்தன.

அதிபர் ட்ரம்ப் என் மீது வைத்த நம்பிக்கையின் பிரதிபலிப்பு அது… : பிரதமர் மோடி!

குடியரசுத் தலைவர் ட்ரம்பை அவருடைய முதல் ஆட்சியின் போதும் நான் சந்தித்தேன்.  இரண்டாவது ஆட்சியின் போதும் பார்த்தேன்.  இந்த முறை முன்பை விட அதிகமாக அவர் தயாராக இருக்கிறார். 

Topics

IPL 2025: ஆச்சரியப்படுத்திய அதிரடி; ஆசுதோஷ் சர்மா விளாசலில் டெல்லி த்ரில் வெற்றி

ஐ.பி.எல் 2025 - – லக்னோ vs டெல்லி கேபிடல்ஸ் – விசாகப்பட்டினம் – 24.03.2025

பஞ்சாங்கம் மார்ச் 25 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

குஜராத் சம்பவம் பின்னணி குறித்து மனம் திறந்த பிரதமர் மோடி!

பாரதம் முழுக்கவும் பெரும்புயல் வீசியது… வாழ்வா சாவா பிரச்சனை.  அடுத்து 2000ஆம் ஆண்டிலே தில்லியின் செங்கோட்டையில் தீவிரவாதத் தாக்குதல். 

பாரதத்துடன் சம கால கலாசாரச் செழுமை கொண்ட சீனாவுடன் நல்ல தொடர்பில் இருப்போம்: பிரதமர் மோடி!

பாரதத்தினுடையதாக இருந்தது.  மேலும் நான் ஏற்றுக் கொள்கிறேன், இத்தனை… சக்தியுடைய… தொடர்புகள் இருந்தன, இத்தனை ஆழமான கலாச்சாரத் தொடர்புகள் இருந்தன.

அதிபர் ட்ரம்ப் என் மீது வைத்த நம்பிக்கையின் பிரதிபலிப்பு அது… : பிரதமர் மோடி!

குடியரசுத் தலைவர் ட்ரம்பை அவருடைய முதல் ஆட்சியின் போதும் நான் சந்தித்தேன்.  இரண்டாவது ஆட்சியின் போதும் பார்த்தேன்.  இந்த முறை முன்பை விட அதிகமாக அவர் தயாராக இருக்கிறார். 

பாகிஸ்தானுடன் முதலில் அமைதிக்காகவே கை கொடுத்தேன்: பிரதமர் மோடி!

நல்ல தொடக்கம் ஆகட்டும் என்று விரும்பினேன்.  ஆனால்… ஒவ்வொரு முறையும் நல்ல முயற்சியின் விளைவுகள், எதிர்மறையாகவே இருந்த்து.  அவர்களுக்கு நல்லபுத்தி ஏற்பட வேண்டும்,

பாரதத்தை இணைக்கும் ஒரே கலாசார இழை! : பிரதமர் மோடியின் கலந்துரையாடலில்!

காந்தியடிகளின் செயல்பாடுகளின் தாக்கத்தை, இன்றும் கூட பாரத நாட்டின் மீது, ஏதோ ஒரு வகையிலே… புலப்படுகிறது.  மேலும் காந்தியடிகள், எதை உபதேசித்தாரோ அதை வாழ முயற்சி செய்தார். 

தேசப் பணியில் ஈடுபட போடப்பட்ட வித்து: பிரதமர் மோடியின் கலந்துரையாடலில்!

பொறுப்புகள் காரணமாக அவரால் வர முடியவில்லை என்றாலும் நான் முதல்வராக இருந்த போது வந்திருக்கிறார்.  அவருடைய ஆசிகள் எனக்கு நிரம்பக் கிடைத்திருக்கிறது.  அவர் தான் எனக்கு வழிகாட்டினார்,

Entertainment News

Popular Categories