December 5, 2025, 4:51 AM
24.5 C
Chennai

காலை வெற்றி மிதப்பில் சுணக்கம்; மதியம் இழுபறியால் சுறுசுறுப்பு: உடைக்கப்படும் தேவகௌட கட்சி?

yediyurappa amitsha - 2025

புது தில்லி: அமித் ஷாவுடன், ஜே.பி.நட்டா, பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினர். #AmitShah #JPNadda #PrakashJavadekar

கர்நாடக தேர்தலில் தோல்வியடைந்துள்ள காங்கிரஸ் கட்சி அங்கு ஆட்சியமைக்க மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவு அளிக்கத் தயாராக உள்ளதாக தெரிவித்தது. இதை அடுத்து, கூட்டணி அமைத்து குமாரசாமியை முதல்வராக்க காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், பாஜக., 106 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. பெரும்பான்மைக்கு மேலும் 7 இடங்கள் தேவைப்படும்.

காங்கிரஸ் 77, மதசார்பற்ற ஜனதா தளம் 37 என 114 இடங்கள் வருவதால், கர்நாடகாவில் பாஜக, ஆட்சி அமைப்பதை விரும்பாத காங்கிரஸ் குறுக்கு வழியில் யோசித்து வருகிறது. மஜத.,ஐ விட இரு மடங்குக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட போதும், வேறு வழியின்றி மஜத., வுக்கே முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்து கூட்டணி ஆட்சிக்கு ஏற்பாடு செய்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக கர்நாடகாவில் முகாமிட்டிருக்கும் குலாம் நபி ஆசாத், குமாரசாமியுடன் சோனியா காந்தியின் அறிவுறுத்தலால் பேச்சைத் துவக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். இதை அடுத்து குமாரசாமியை முதல்வராக்க காங்கிரஸ் சம்மதம் தெரிவிப்பதாகவும் கூட்டணி ஆட்சியை தொடரலாம் என்றும் பேசப்பட்டது. இந்நிலையில், சோனியா காந்தி, தேவகௌடவுடன் பேசியுள்ளார்.

இருப்பினும், ஆட்சியமைக்க தனிப் பெரும்பான்மை பெற்ற கட்சியை மட்டுமே ஆளுநர் அழைக்க நேரும். எனில், அவர் பாஜக.,வை மட்டுமே முதலில் அழைக்க முடியும். அதன் பின்னரே பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டு, ஆட்சி தொடரமுடியும். ஆனால், அதற்கு முன்னதாகவே பாஜக., வை ஆட்சி அமைக்க விடாமல் தடுக்க காங்கிரஸ் பல வழிகளையும் கையாண்டு வருகிறது.

அதையும் மீறி, காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் அமர பல குறுக்கு வழிகளை கையாளும் என கர்நாடக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், இன்று காலை முடிவுகள் வெளிவரத் தொடங்கிய போது, பாஜக., பெரும்பான்மையைக் காட்டிலும் முன்னிலை பெற்றிருந்தது. ஆனால் வெற்றி வாக்கு வித்தியாசம் குறைவாக இருந்ததால், முன்னிலை நிலவரத்தில் குறைந்து பாஜக., 106 இடங்களில் முன்னிலை பெற்றது.

இதனால் காலையில் வெற்றிக் கொண்டாட்டத்தில் இருந்த பாஜக., மதியத்துக்கு மேல் விழிப்பு அடைந்தது. இதை அடுத்து, ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையை எப்படியாவது பெறவேண்டும் என்பதற்காக, பாஜக.,வும் காய் நகர்த்தத் துவங்கியது.

இதை அடுத்தே அமித் ஷா திடீரென பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். இதை அடுத்து, வெற்றிக்கு எப்படியும் 10 இடங்களாவது தேவை என்ற நிலையில், மதசார்பற்ற ஜனதா தளத்தின் சார்பில் வெற்றி பெற்றவர்கள் 10 பேரிடம் அமித்ஷா உரையாடியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதை அடுத்து, ,பாஜக.வின் இலக்கு மஜத., எம்.எல்.ஏக்களை வளைத்துப் பிடிப்பது என்பதாகத்தான் இருக்கும்!

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories