காலை வெற்றி மிதப்பில் சுணக்கம்; மதியம் இழுபறியால் சுறுசுறுப்பு: உடைக்கப்படும் தேவகௌட கட்சி?

yediyurappa amitsha - 2026

புது தில்லி: அமித் ஷாவுடன், ஜே.பி.நட்டா, பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினர். #AmitShah #JPNadda #PrakashJavadekar

கர்நாடக தேர்தலில் தோல்வியடைந்துள்ள காங்கிரஸ் கட்சி அங்கு ஆட்சியமைக்க மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவு அளிக்கத் தயாராக உள்ளதாக தெரிவித்தது. இதை அடுத்து, கூட்டணி அமைத்து குமாரசாமியை முதல்வராக்க காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், பாஜக., 106 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. பெரும்பான்மைக்கு மேலும் 7 இடங்கள் தேவைப்படும்.

காங்கிரஸ் 77, மதசார்பற்ற ஜனதா தளம் 37 என 114 இடங்கள் வருவதால், கர்நாடகாவில் பாஜக, ஆட்சி அமைப்பதை விரும்பாத காங்கிரஸ் குறுக்கு வழியில் யோசித்து வருகிறது. மஜத.,ஐ விட இரு மடங்குக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட போதும், வேறு வழியின்றி மஜத., வுக்கே முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்து கூட்டணி ஆட்சிக்கு ஏற்பாடு செய்து வருகிறது.

ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

இதன் தொடர்ச்சியாக கர்நாடகாவில் முகாமிட்டிருக்கும் குலாம் நபி ஆசாத், குமாரசாமியுடன் சோனியா காந்தியின் அறிவுறுத்தலால் பேச்சைத் துவக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். இதை அடுத்து குமாரசாமியை முதல்வராக்க காங்கிரஸ் சம்மதம் தெரிவிப்பதாகவும் கூட்டணி ஆட்சியை தொடரலாம் என்றும் பேசப்பட்டது. இந்நிலையில், சோனியா காந்தி, தேவகௌடவுடன் பேசியுள்ளார்.

இருப்பினும், ஆட்சியமைக்க தனிப் பெரும்பான்மை பெற்ற கட்சியை மட்டுமே ஆளுநர் அழைக்க நேரும். எனில், அவர் பாஜக.,வை மட்டுமே முதலில் அழைக்க முடியும். அதன் பின்னரே பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டு, ஆட்சி தொடரமுடியும். ஆனால், அதற்கு முன்னதாகவே பாஜக., வை ஆட்சி அமைக்க விடாமல் தடுக்க காங்கிரஸ் பல வழிகளையும் கையாண்டு வருகிறது.

அதையும் மீறி, காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் அமர பல குறுக்கு வழிகளை கையாளும் என கர்நாடக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், இன்று காலை முடிவுகள் வெளிவரத் தொடங்கிய போது, பாஜக., பெரும்பான்மையைக் காட்டிலும் முன்னிலை பெற்றிருந்தது. ஆனால் வெற்றி வாக்கு வித்தியாசம் குறைவாக இருந்ததால், முன்னிலை நிலவரத்தில் குறைந்து பாஜக., 106 இடங்களில் முன்னிலை பெற்றது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

இதனால் காலையில் வெற்றிக் கொண்டாட்டத்தில் இருந்த பாஜக., மதியத்துக்கு மேல் விழிப்பு அடைந்தது. இதை அடுத்து, ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையை எப்படியாவது பெறவேண்டும் என்பதற்காக, பாஜக.,வும் காய் நகர்த்தத் துவங்கியது.

இதை அடுத்தே அமித் ஷா திடீரென பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். இதை அடுத்து, வெற்றிக்கு எப்படியும் 10 இடங்களாவது தேவை என்ற நிலையில், மதசார்பற்ற ஜனதா தளத்தின் சார்பில் வெற்றி பெற்றவர்கள் 10 பேரிடம் அமித்ஷா உரையாடியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதை அடுத்து, ,பாஜக.வின் இலக்கு மஜத., எம்.எல்.ஏக்களை வளைத்துப் பிடிப்பது என்பதாகத்தான் இருக்கும்!

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories