சிக்னலில் காத்திருக்கும் தவிப்பான நேரம்

 

 

போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும் போது ஏற்படும் எரிச்சல் சொல்லிமாளாது. சில நேரங்களில் நிமிடக்கணக்கில் நேரம் ஓடிக்கொண்டே இருக்கும். யார் இந்த நேரத்தை ‘செட்’ செய்தது என்று நொந்து கொள்ள வைக்கும். இந்த நேர நிர்ணயத்திற்குப் பின்னால் ஒரு ‘சயின்ஸ்’ இருக்கிறது.

பெருநகரங்களில் போக்குவரத்தை கட்டுப்படுத்துவது மிகப் பெரிய சவால். பல இடங்களில் சிக்னல்கள், ஆங்காங்கே போலீஸ் நின்றாலும், போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியதாகிவருகிறது.

குறிப்பாக டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா போன்ற நகரங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்குவோம்.என்று கணக்கிட்டு முன்னதாகவே புறப்பட வேண்டியுள்ளது.

1.bp.blogspot.com GvQgKDBiebQ VTB VlnKtNI AAAAAAAADwY tEXagfIu1wU s1600 Copy of CDT1 - 2026

 

பெருநகரங்களில் இயங்கும் சிக்னல்கள் அனைத்திலும் நேரம் குறிக்கப்பட்டிருக்கும். அந்த வழித்தடத்தில் ஒவ்வொரு திசையிலும் ஒரு குறிப்பிட்ட வினாடிகள் காத்திருக்க வேண்டியிருக்கும்.

காலை முதல் மாலை வரை எல்லா நேரத்திலும் அந்த சிக்னல்கள் ஒரே மாதிரி காத்திருக்கும் நேரத்தை காண்பிப்பதில்லை. நேரத்திற்கு ஏற்ப அங்கு காத்திருக்கும் நேரமும் மாறும்.

உதாரணமாக ஒரு முக்கிய சாலை சந்திப்பில் கிழக்கில் இருந்து மேற்காக செல்ல வாகனங்கள் ‘பீக் ஹவர்’ நேரங்களில் 180 வினாடிகள் காத்திருக்கிறது என்றால், பிற நேரங்களில் அது 150, 120, 80, 60 வினாடிகள் என மாறிக்கொண்டே இருக்கும்.

1.bp.blogspot.com VTpeWeK16Ng VTB bSz0MmI AAAAAAAADwg Czisgl9azFo s1600 traffic signal countdown - 2026

சரி, இந்த போக்குவரத்து சிக்னல்களுக்கு எப்படி நேரத்தை நிர்ணயிக்கிறார்கள்? அங்குதான், தண்ணீர் ஒப்பீடு வருகிறது. அந்த சிக்னலை ஒவ்வொரு வினாடியும் கடந்து செல்லும் வாகனங்களை வைத்து அதை தண்ணீருடன் ஒப்பிட்டு இந்த விநாடிகளை நிர்ணயிக்கிறார்கள்.

சாதாரணமாக, நீரோட்டம் தடையில்லாமல் செல்லும் போது அந்த இடத்தை அது வேகமாக ஓடி கடந்து விடும். இதில் நீர் தேங்கி நிற்பதில்லை. இதை தடையற்ற நீரோட்டக் காலம் என்கிறார்கள். இது நெரிசலின்றி போக்குவரத்து செல்லும் நேரத்தை குறிக்கும். இதனை ‘ரன்னிங் ஸ்டேடஸ்’ என்று குறிப்பிடுகிறார்கள். அந்த நேரங்களில் சிக்னல்களில் மிக குறைந்த வினாடிகளே காத்திருக்கும் நேரத்தை  நிர்ணயிக்கிறார்கள்.

அடுத்தது ‘ஸ்லோரன்னிங் ஸ்டேடஸ்’. போதுமான சரிவு இல்லாத இடத்தில் செல்லும் நீர் மிக மெதுவாக செல்லும். இதை போக்குவரத்தோடு ஒப்பிடும்போது நெரிசல் இருக்கும். ஆனால், தேங்காத நிலையில் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்று கொண்டிருக்கும். இது காலை 8 மணிக்கு முன்பும் மாலை 7 மணிக்கு பின்பும் உள்ள நிலை. இந்த நேரத்தில் ‘பீக் ஹவர்’ காலத்தை விட பாதியாக சிக்னல் நேரத்தை நிர்ணயம் செய்வார்கள்.

4.bp.blogspot.com kiGoc2f5bY8 VTB - 2026

அடுத்ததாக ‘ஸ்லோவாக்கிங் ஸ்டேடஸ்’. இது தேங்கி இருக்கும் நிலை. தண்ணீர் செல்லமுடியாமல் ஆங்காங்கே ஏற்பட்ட தடைகளால் தேங்கி நிற்பது. அதுபோன்று ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் பல பகுதிகளில் இருந்தும் வருவதால் போக்குவரத்து தேக்க நிலையை அடைவதை குறிக்கும்.

அந்த நேரத்தில் ஒவ்வொரு திசையிலும் இருந்து ஒரு வினாடிக்கு வரும் வாகன எண்ணிக்கையை கணக்கிட்டு அதன் அடிப்படையில் நேரம் நிர்ணயிக்கப்படுகிறது. இதுதான் ‘பீக் ஹவர்’ எனப்படும் காலை மாலை நேர பகுதி. இந்த நேரத்தில் மிக அதிக வினாடிகள் சிக்னலில் காத்திருக்க வேண்டி வரும்.

எனவே, சிக்னலில் டிஜிட்டல் மீட்டர் காட்டுவது ஒரு தனி மனிதன் நிர்ணயிக்கும் நேரம் அல்ல. தண்ணீரின் ஓட்டத்துடன் வாகனங்கள் ஓட்டத்தை ஒப்பிட்டு பல ஆய்வுகளை நடத்தித்தான் காத்திருக்கும் நேரத்தை நிர்ணயிக்கிறார்கள்.

இனி சிக்னலில் காத்திருக்கும் போது, “இவர்கள் இஷ்டத்துக்கு நேரத்தை வைத்துவிடுகிறார்கள்” என புலம்ப மாட்டீர்கள்தானே.!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories