சிக்னலில் காத்திருக்கும் தவிப்பான நேரம்

Published:

 

 

போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும் போது ஏற்படும் எரிச்சல் சொல்லிமாளாது. சில நேரங்களில் நிமிடக்கணக்கில் நேரம் ஓடிக்கொண்டே இருக்கும். யார் இந்த நேரத்தை ‘செட்’ செய்தது என்று நொந்து கொள்ள வைக்கும். இந்த நேர நிர்ணயத்திற்குப் பின்னால் ஒரு ‘சயின்ஸ்’ இருக்கிறது.

பெருநகரங்களில் போக்குவரத்தை கட்டுப்படுத்துவது மிகப் பெரிய சவால். பல இடங்களில் சிக்னல்கள், ஆங்காங்கே போலீஸ் நின்றாலும், போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியதாகிவருகிறது.

குறிப்பாக டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா போன்ற நகரங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்குவோம்.என்று கணக்கிட்டு முன்னதாகவே புறப்பட வேண்டியுள்ளது.

1.bp.blogspot.com GvQgKDBiebQ VTB VlnKtNI AAAAAAAADwY tEXagfIu1wU s1600 Copy of CDT1 - 2026

 

பெருநகரங்களில் இயங்கும் சிக்னல்கள் அனைத்திலும் நேரம் குறிக்கப்பட்டிருக்கும். அந்த வழித்தடத்தில் ஒவ்வொரு திசையிலும் ஒரு குறிப்பிட்ட வினாடிகள் காத்திருக்க வேண்டியிருக்கும்.

காலை முதல் மாலை வரை எல்லா நேரத்திலும் அந்த சிக்னல்கள் ஒரே மாதிரி காத்திருக்கும் நேரத்தை காண்பிப்பதில்லை. நேரத்திற்கு ஏற்ப அங்கு காத்திருக்கும் நேரமும் மாறும்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

உதாரணமாக ஒரு முக்கிய சாலை சந்திப்பில் கிழக்கில் இருந்து மேற்காக செல்ல வாகனங்கள் ‘பீக் ஹவர்’ நேரங்களில் 180 வினாடிகள் காத்திருக்கிறது என்றால், பிற நேரங்களில் அது 150, 120, 80, 60 வினாடிகள் என மாறிக்கொண்டே இருக்கும்.

1.bp.blogspot.com VTpeWeK16Ng VTB bSz0MmI AAAAAAAADwg Czisgl9azFo s1600 traffic signal countdown - 2026

சரி, இந்த போக்குவரத்து சிக்னல்களுக்கு எப்படி நேரத்தை நிர்ணயிக்கிறார்கள்? அங்குதான், தண்ணீர் ஒப்பீடு வருகிறது. அந்த சிக்னலை ஒவ்வொரு வினாடியும் கடந்து செல்லும் வாகனங்களை வைத்து அதை தண்ணீருடன் ஒப்பிட்டு இந்த விநாடிகளை நிர்ணயிக்கிறார்கள்.

சாதாரணமாக, நீரோட்டம் தடையில்லாமல் செல்லும் போது அந்த இடத்தை அது வேகமாக ஓடி கடந்து விடும். இதில் நீர் தேங்கி நிற்பதில்லை. இதை தடையற்ற நீரோட்டக் காலம் என்கிறார்கள். இது நெரிசலின்றி போக்குவரத்து செல்லும் நேரத்தை குறிக்கும். இதனை ‘ரன்னிங் ஸ்டேடஸ்’ என்று குறிப்பிடுகிறார்கள். அந்த நேரங்களில் சிக்னல்களில் மிக குறைந்த வினாடிகளே காத்திருக்கும் நேரத்தை  நிர்ணயிக்கிறார்கள்.

அடுத்தது ‘ஸ்லோரன்னிங் ஸ்டேடஸ்’. போதுமான சரிவு இல்லாத இடத்தில் செல்லும் நீர் மிக மெதுவாக செல்லும். இதை போக்குவரத்தோடு ஒப்பிடும்போது நெரிசல் இருக்கும். ஆனால், தேங்காத நிலையில் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்று கொண்டிருக்கும். இது காலை 8 மணிக்கு முன்பும் மாலை 7 மணிக்கு பின்பும் உள்ள நிலை. இந்த நேரத்தில் ‘பீக் ஹவர்’ காலத்தை விட பாதியாக சிக்னல் நேரத்தை நிர்ணயம் செய்வார்கள்.

4.bp.blogspot.com kiGoc2f5bY8 VTB - 2026

அடுத்ததாக ‘ஸ்லோவாக்கிங் ஸ்டேடஸ்’. இது தேங்கி இருக்கும் நிலை. தண்ணீர் செல்லமுடியாமல் ஆங்காங்கே ஏற்பட்ட தடைகளால் தேங்கி நிற்பது. அதுபோன்று ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் பல பகுதிகளில் இருந்தும் வருவதால் போக்குவரத்து தேக்க நிலையை அடைவதை குறிக்கும்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

அந்த நேரத்தில் ஒவ்வொரு திசையிலும் இருந்து ஒரு வினாடிக்கு வரும் வாகன எண்ணிக்கையை கணக்கிட்டு அதன் அடிப்படையில் நேரம் நிர்ணயிக்கப்படுகிறது. இதுதான் ‘பீக் ஹவர்’ எனப்படும் காலை மாலை நேர பகுதி. இந்த நேரத்தில் மிக அதிக வினாடிகள் சிக்னலில் காத்திருக்க வேண்டி வரும்.

எனவே, சிக்னலில் டிஜிட்டல் மீட்டர் காட்டுவது ஒரு தனி மனிதன் நிர்ணயிக்கும் நேரம் அல்ல. தண்ணீரின் ஓட்டத்துடன் வாகனங்கள் ஓட்டத்தை ஒப்பிட்டு பல ஆய்வுகளை நடத்தித்தான் காத்திருக்கும் நேரத்தை நிர்ணயிக்கிறார்கள்.

இனி சிக்னலில் காத்திருக்கும் போது, “இவர்கள் இஷ்டத்துக்கு நேரத்தை வைத்துவிடுகிறார்கள்” என புலம்ப மாட்டீர்கள்தானே.!

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img