ஒரு பெண்ணுக்காக 84 கிராமங்கள் இரவோடு இரவாக..!

 

 

3.bp.blogspot.com eau1lWMaDzQ VbYmzo0JfgI AAAAAAAAFJQ 6jTMadc - 2026

ஆவிகள் உலாவும் இடங்கள் என்று வெளிநாடுகளில் ஏராளமாய் இருக்கின்றன.  அந்த ஆவிகளின் கதைகளால் அந்த  இடங்கள் சுற்றுலா அந்தஸ்தையும் பெற்றுவிடுகிறன்றன.  இந்தியாவிலும்  சில இடங்கள் அப்படி இருக்கின்றன.
 
4.bp.blogspot.com PR1LugfoYzE VbYmseIw gI AAAAAAAAFJE yZ - 2026
 
அவைகளில் ஒன்றுதான் குல்தாரா.  இது ஒரு கிராமம். ராஜஸ்தான் மாநிலத்தின் புகழ்பெற்ற இடமாக விளங்கும் ஜெய்சால்மர் நகரத்தில் இருந்து 17 கி.மீ. தொலைவில் இந்த கிராமம் உள்ளது.  190 ஆண்டுகளாக இந்த கிராமத்தில் மனிதர்கள் யாரும் வசிக்கவில்லை.  ஒரே இரவில் ஒட்டுமொத்தமாக அவ்வளவு மக்களும் ஊரைக் காலி செய்துவிட்டுப் போய்விட்டார்கள்.
 
3.bp.blogspot.com Y4x1k86npac VbYmuqSORAI AAAAAAAAFJM r 7ke qWg s s640 Cursed Village Of Kuldhara - 2026
 
இந்த ஒரு கிராமம் மட்டுமல்ல. இதன் கட்டுப்பாட்டில் இருந்த 84 கிராமங்களும் இரவோடு இரவாக ஊரை காலி செய்துவிட்டு ஓடினார்கள்.  குல்தாரா மக்கள் போகும்போது இந்த கிராமத்தில் யார் தங்கினாலும் அவர்களுக்கு மரணம் நேரிடும் என்று சாபமிட்டுச் சென்றார்கள்.  அதனால்தான் இத்தனை வருடங்கள் ஆகியும் இந்த கிராமத்தில் வேறு யாரும் வந்து குடியேறவில்லை.
 
 
3.bp.blogspot.com 82R5W3QoMQ VbYm2qLX8dI AAAAAAAAFJk CxaxviQBcms s640 IMG 3467 c - 2026
 
1291-ம் ஆண்டு பலிவால் என்ற பிராமண மக்கள் ஒன்று சேர்ந்து இந்த கிராமத்தை நிர்மாணிக்க நினைத்தார்கள்.  அகலமான தெருக்கள், கோயில்கள் என மிக நேர்த்தியாக திட்டமிட்டு உருவாக்கிய கிராமம் இது.
 
தொழில்நுட்பத்திலும் முன்னணியில் இவர்கள் இருந்திருக்கிறார்கள். குறைந்த மழையும், அதிக வறட்சியும் கொண்ட இந்த இடத்தில் விவசாயத்தை பிரமாண்டமாக செய்து வந்திருக்கிறார்கள்.
 
3.bp.blogspot.com TwidRwD7pZA VbYm6Ad7rdI AAAAAAAAFJs uhjEcSZEfgQ s640 Kuldhara 10 - 2026
 
கிட்டத்தட்ட 600 ஆண்டுகள் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் போய்க்கொண்டிருந்த அவர்கள் வாழ்வில் இடியென வந்தவன்தான் சலீம் சிங் என்ற தலைமை மந்திரி.
 
ஒருநாள் நாட்டைச் சுற்றிப்பார்க்க வந்த சலீம் சிங் இந்த கிராமத்திற்கு வந்திருக்கிறான்.  அப்போது கிராமத்து தலைவனின் மகளைப் பார்த்துவிட்டான்.  அந்தப் பெண்ணின் அழகில் மனதைப் பறிகொடுத்த சலீம் அந்த பெண்ணை தனக்கு மணம் முடித்து தரவேண்டும். இல்லையென்றால் நீங்கள் அனைவரும் வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் ஈடு செய்ய முடியாத அளவிற்கு அதிகமான வரி விதித்துவிடுவேன் என்று மிரட்டினான்.
 
4.bp.blogspot.com f6 HkbEUgrc VbYm7fWWHqI AAAAAAAAFJ0 hptJ0JTVC E s400 IMG 9383 - 2026
 
கிராமத்து மக்களுக்கு தங்களின் தலைவர் மகளை சலீமுக்கு திருமணம் செய்து வைக்க விருப்பமில்லை. தலைவனோ தனது மக்கள் தனக்காக அதிக வரி கொடுப்பதை விரும்பவில்லை.  அதனால் 1825 ஆம் ஆண்டு இரவோடு இரவாக குல்தாரா கிராமத்தினரும் அவர்களுக்கு கீழ் இருந்த 83 கிராம மக்களும் காலி செய்துவிட்டு போனார்கள். அவர்கள் எங்கு போனார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. இன்றுவரை அது மர்மமாகவே இருக்கிறது.
 
குல்தாரா கிராமத்தினர் இட்ட சாபத்திற்கு பயந்து யாரும் குடியேறவில்லை. தற்போது இந்த இடம் இந்திய தொல்லியல் துறையின் கீழ் உள்ளது. பாரம்பரியமிக்க இடமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
 
2.bp.blogspot.com FN6Js - 2026
 
திரும்பிய பக்கமெல்லாம் சிதலமடைந்த வீடுகளும், இடிபாடுகளும்தான் இருக்கின்றன.  வழக்கமான சுற்றுலா இடங்களை விடுத்து புதிதாக எங்காவது செல்ல வேண்டும் என்பவர்களுக்கு குல்தாரா ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தரும்.
 
எப்படி போவது?
 
ராஜஸ்தான் தலைநகரமான ஜெய்ப்பூரில் இருந்து 575 கி.மீ. தொலைவில் ஜெய்சால்மர் நகரம் உள்ளது.  ஜெய்சால்மருக்கு சென்னையில் இருந்து நேரடி விமான சேவை இல்லை. ஜெய்பூர் சென்று செல்லலாம்.
 
1.bp.blogspot.com AdM8XUxlPA VbYm8C1OlBI AAAAAAAAFJ8 2X1K2 5TKOw s640 Kuldhara 7 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories