பிம்பம் பிரதிபிம்பம்: ஆச்சார்யாள் அருளுரை!

bharathi theerthar
bharathi theerthar

தன்னுடைய பிரபுவுக்கு செளக்கியம் வர வேண்டுமென்றால் பிரபுவிற்குத் தானே சேவை செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு வேறு யாருக்காவது வேலை செய்தால் அது எப்படி உதவும்? அதற்கு

ஒரு யுக்தி உண்டு.
ஜீவனும் ஈச்வரனும் முறையே பிரதிபிம்பமாகவும் பிம்பமாகவும் சாஸ்திரத்தில் ஸித்தாந்தமாக உள்ளது. ஒரு கண்ணாடிக்கு முன் நாம் நின்று கொண்டு முகத்தைப் பார்த்தால் முகத்தின் பிரதிபிம்பம் அக்கண்ணாடியில் தெரியும்.

இங்கு முகம் என்பது பிம்பம் ஆகும். கண்ணாடியில் தெரிவது பிரதிபிம்பம். இங்கு கண்ணாடி என்று உதாரணத்தில் நாம் சொல்வதை சாஸ்திரத்தில் “உபாதி” என்பர். ஆக, பிம்பம், உபாதி மற்றும் உபாதியினுள் தெரியும் பிரதிபிம்பம் என்று மூன்று பொருட்கள் இங்கு உள்ளன.

கண்ணாடியில் முகத்தைப் பார்ப்பவன், “பிரதிபிம்பத்தின் நெற்றிப் பாகத்தில் விபூதி இல்லையே” என்று எண்ணினால், விபூதியை அவன் எங்கு இட வேண்டும்? விபூதியைக் கண்ணாடியில் தோன்றும் பிரதிபிம்பத்தில் இட முடியாது. ஏனென்றால், முகத்தைச் சிறிது அசைத்தாலும் பிரதிபிம்பத்தின் நெற்றிப் பாகத்தில் விபூதி இல்லாமல் போய்விடும்.

ஆகையால், பிரதிபிம்பத்தில் விபூதி தெரிய வேண்டுமென்றால் தன் நெற்றியில்தான் விபூதி இட்டுக்கொள்ள வேண்டும். அதாவது பிரதிபிம்பத்திற்கு அலங்காரம் ஏற்பட வேண்டுமென்றால், பிம்பத்திற்கு அலங்காரம் செய்ய வேண்டும்.

ஜீவன், “அவித்யை” என்னும் உபாதியில் ஈச்வரனுடைய பிரதிபிம்பமாகத் தெரிகிறான். மாயை என்பது அவித்யையின் மறு பெயர்.

அதனால்தான், “பிரதிபிம்பமான ஜீவனுக்கு செளக்கியம் உண்டாக வேண்டுமென்றால் பிம்ப வடிவான, சகுணமான ஈச்வரனை சேவித்து வா. அதனால் பிரதிபிம்பமான ஜீவனுக்குத் தானாகவே செளக்கியம் கிடைக்கும்” என்று பகவத்பாதாள் மனதை நோக்கிக் கூறினார்.

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Entertainment News

Popular Categories