February 20, 2026, 3:58 PM
31.2 C
Chennai

பிம்பம் பிரதிபிம்பம்: ஆச்சார்யாள் அருளுரை!

bharathi theerthar
bharathi theerthar

தன்னுடைய பிரபுவுக்கு செளக்கியம் வர வேண்டுமென்றால் பிரபுவிற்குத் தானே சேவை செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு வேறு யாருக்காவது வேலை செய்தால் அது எப்படி உதவும்? அதற்கு

ஒரு யுக்தி உண்டு.
ஜீவனும் ஈச்வரனும் முறையே பிரதிபிம்பமாகவும் பிம்பமாகவும் சாஸ்திரத்தில் ஸித்தாந்தமாக உள்ளது. ஒரு கண்ணாடிக்கு முன் நாம் நின்று கொண்டு முகத்தைப் பார்த்தால் முகத்தின் பிரதிபிம்பம் அக்கண்ணாடியில் தெரியும்.

இங்கு முகம் என்பது பிம்பம் ஆகும். கண்ணாடியில் தெரிவது பிரதிபிம்பம். இங்கு கண்ணாடி என்று உதாரணத்தில் நாம் சொல்வதை சாஸ்திரத்தில் “உபாதி” என்பர். ஆக, பிம்பம், உபாதி மற்றும் உபாதியினுள் தெரியும் பிரதிபிம்பம் என்று மூன்று பொருட்கள் இங்கு உள்ளன.

கண்ணாடியில் முகத்தைப் பார்ப்பவன், “பிரதிபிம்பத்தின் நெற்றிப் பாகத்தில் விபூதி இல்லையே” என்று எண்ணினால், விபூதியை அவன் எங்கு இட வேண்டும்? விபூதியைக் கண்ணாடியில் தோன்றும் பிரதிபிம்பத்தில் இட முடியாது. ஏனென்றால், முகத்தைச் சிறிது அசைத்தாலும் பிரதிபிம்பத்தின் நெற்றிப் பாகத்தில் விபூதி இல்லாமல் போய்விடும்.

ஆகையால், பிரதிபிம்பத்தில் விபூதி தெரிய வேண்டுமென்றால் தன் நெற்றியில்தான் விபூதி இட்டுக்கொள்ள வேண்டும். அதாவது பிரதிபிம்பத்திற்கு அலங்காரம் ஏற்பட வேண்டுமென்றால், பிம்பத்திற்கு அலங்காரம் செய்ய வேண்டும்.

ஜீவன், “அவித்யை” என்னும் உபாதியில் ஈச்வரனுடைய பிரதிபிம்பமாகத் தெரிகிறான். மாயை என்பது அவித்யையின் மறு பெயர்.

அதனால்தான், “பிரதிபிம்பமான ஜீவனுக்கு செளக்கியம் உண்டாக வேண்டுமென்றால் பிம்ப வடிவான, சகுணமான ஈச்வரனை சேவித்து வா. அதனால் பிரதிபிம்பமான ஜீவனுக்குத் தானாகவே செளக்கியம் கிடைக்கும்” என்று பகவத்பாதாள் மனதை நோக்கிக் கூறினார்.

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Topics

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

Entertainment News

Popular Categories